Posts

Showing posts from August, 2016

363. சருவிய சாத்திர

ராகம் : ஆனந்த பைரவி அங்க தாளம் (7½) 3 + 1½ + 3 சருவிய சாத்திரத் திரளான சடுதிக ழாஸ்பதத் தமையாத அருமறை யாற்பெறற் கரிதாய அனிதய வார்த்தையைப் பெறுவேனோ நிருதரை மூக்கறுத் தெழுபார நெடுதிரை யார்ப்பெழப் பொருதோனே பொருளடி யாற்பெறக் கவிபாடும் புலவரு சாத்துணைப் பெருமாளே.

362. சமய பத்தி

ராகம் : சாரங்கா அங்கதாளம் (1½ + 2 + 2 + 3 (8½) சமய பத்தி வ்ருதாத்தனை நினையாதே சரண பத்ம சிவார்ச்சனை தனைநாடி அமைய சற்குரு சாத்திர மொழிநூலால் அருளெ னக்கினி மேற்றுணை தருவாயே உமைமுலைத்தரு பாற்கொடு அருள்கூறி உரிய மெய்த்தவ மாக்கிந லுபதேசத் தமிழ்த னைக்கரை காட்டிய திறலோனே சமண ரைக்கழு வேற்றிய பெருமாளே.

361. சந்தம் புனைந்து

ராகம் : அமிர்தவர்ஷிணி தாளம் : ஆதி சந்தம் புனைந்து சந்தஞ் சிறந்த தண்கொங் கைவஞ்சி மனையாளுந் தஞ்சம் பயின்று கொஞ்சுஞ் சதங்கை தங்கும் பதங்க ளிளைஞோரும் எந்தன் தனங்க ளென்றென்று நெஞ்சி லென்றும் புகழ்ந்து மிகவாழும் இன்பங் களைந்து துன்பங்கள் மங்க இன்றுன் பதங்கள் தரவேணும்

360. கொடிய மதவேள்

ராகம் : வாசஸ்பதி அங்க தாளம் (7½) 2½ + 2 + 3 கொடியமத வேள்கைக் கணையாலே குரைகணெடு நீலக் கடலாலே நெடியபுகழ் சோலைக் குயிலாலே நிலைமைகெடு மானைத் தழுவாயே கடியரவு பூணர்க் கினியோனே கலைகள்தெரி மாமெய்ப் புலவோனே அடியவர்கள் நேசத் துறைவேலா அறுமுகவி நோதப் பெருமாளே.

359. குருதி தோலினால்

ராகம் : அடாணா தாளம் : அங்கதாளம் 1½ +1½ + 2½ (5½) குருதி தோலி னால்மேவு குடிலி லேத மாமாவி குலைய ஏம னாலேவி விடுகாலன் கொடிய பாச மோர்சூல படையி னோடு கூசாத கொடுமை நோய்கொ டேகோலி யெதிராமுன் பருதி சோமன் வானாடர் படியு ளோர்கள் பாலாழி பயமு றாமல் வேலேவு மிளையோனே பழுது றாத பாவாண ரெழுதொ ணாத தோள்வீர பரிவி னோடு தாள்பாட அருள்தாராய்

358. குகையில் நவநாதரும்

ராகம் : பெஹாக் அங்க தாளம் (7) 2½ + 1½ + 1½ + 1½ குகையில்நவ நாத ருஞ்சி றந்த முகைவனச சாத னுந்த யங்கு குணமுமசு ரேச ருந்த ரங்க முரல்வேதக் குரகதபு ராரி யும்ப்ர சண்ட மரகதமு ராரி யுஞ்செ யங்கொள் குலிசகைவ லாரி யுங்கொ டுங்க ணறநூலும் அகலியபு ராண மும்ப்ர பஞ்ச சகலகலை நூல்க ளும்ப ரந்த அருமறைய நேக முங்கு விந்தும் அறியாத அறிவுமறி யாமை யுங்க டந்த அறிவுதிரு மேனி யென்று ணர்ந்துன் அருணசர ணார விந்த மென்று அடைவேனோ

357. காதி மோதி

ராகம் : சங்கராபரணம் தாளம் : 1½ + 1½ + 2½ + 2 + 3 (10½) காதி மோதி வாதாடு நூல்கற் றிடுவோருங் காசு தேடி யீயாமல் வாழப் பெறுவோரும் மாதுபாகர் வாழ்வே யெனாநெக் குருகாரும் மாறி லாத மாகால னூர்புக் கலைவாரே நாத ரூப மாநாத ராகத் துறைவோனே நாக லோக மீரேழு பாருக் குரியோனே தீதி லாத வேல்வீர சேவற் கொடியோனே தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே.

356. கவடு கோத்தெழு

ராகம் : பாகேஸ்வரி தாளம் : மிஸ்ர அட 3½ + 3½ (18) கவடு கோத்தெழு முவரி மாத்திறல் காய்வேல் பாடே னாடேன் வீடா னதுகூட கருணை கூர்ப்பன கழல்க ளார்ப்பன கால்மேல் வீழேன் வீழ்வார் கால்மீ தினும்வீழேன் தவிடி னார்ப்பத மெனினு மேற்பவர் தாழா தீயேன் வாழா தேசா வதுசாலத் தரமு மோக்ஷமு மினியெ னாக்கைச தாவா மாறே நீதா னாதா புரிவாயே

355. கருப்பையில்

ராகம் : ஆரபி சங்கீர்ண த்ரிபுடை கருப்பை யிற்சுக் கிலத் துலைத்துற் பவித்து மறுகாதே கபட்ட சட்டர்க் கிதத்த சித்ரத் தமிழ்க்க ளுரையாதே விருப்ப முற்றுத் துதித்தெ னைப்பற் றெனக்க ருதுநீயே வெளிப்ப டப்பற் றிடப்ப டுத்தத் தருக்கி மகிழ்வோனே பருப்ப தத்தைத் தொளைத்த சத்திப் படைச்ச மரவேளே பணிக்கு லத்தைக் கவர்ப்ப தத்துக் களித்த மயிலோனே செருப்பு றத்துச் சினத்தை முற்றப் பரப்பு மிசையோனே தினைப்பு னத்துக் குறத்தி யைக்கைப் பிடித்த பெருமாளே.

354. கருப்பற்றூறி

ராகம் : நடபைரவி தாளம் : திச்ர ஏகம் (3) கருப்பற் றூறிப் பிறவாதே கனக்கப் பாடுற் றுழலாதே திருப்பொற் பாதத் தநுபூதி சிறக்கப் பாலித் தருள்வாயே பரப்பற் றாருக் குரியோனே பரத்தப் பாலுக் கணியோனே திருக்கைச் சேவற் கொடியோனே செகத்திற் சோதிப் பெருமாளே.

353. கடலை பயறொடு

ராகம் : பெஹாக் தாளம் : 1½ + 2 + 4 கடலை பயறொடு துவரையெ ளவல்பொரி சுகியன் வடைகனல் கதலியி னமுதொடு கனியு முதுபல கனிவகை நலமிவை யினிதாகக் கடல்கொள் புவிமுதல் துளிர்வொடு வளமுற அமுது துதிகையில் மனமது களிபெற கருணை யுடனளி திருவருள் மகிழ்வுற நெடிதான குடகு வயிறினி லடைவிடு மதகரி பிறகு வருமொரு முருகசண் முகவென குவிய இருகர மலர்விழி புனலொடு பணியாமற் கொடிய நெடியன அதிவினை துயர்கொடு வறுமை சிறுமையி னலைவுட னரிவையர் குழியில் முழுகியு மழுகியு முழல்வகை யொழியாதோ

352. ஓது முத்தமிழ்

ராகம் : சாவேரி அங்கதாளம் 1½ + 2 + 2 + 2½ (8) ஓது முத்தமிழ் தேராவ்ரு தாவனை வேத னைப்படு காமாவி காரனை ஊன முற்றுழல் ஆபாச ஈனனை அந்தர்யாமி யோக மற்றுழல் ஆசாப சாசனை மோக முற்றிய மோடாதி மோடனை ஊதி யத்தவம் நாடாத கேடனை அன்றிலாதி பாத கக்கொலை யேசூழ்க பாடனை நீதி சற்றுமி லாகீத நாடனை பாவி யர்க்குளெ லாமாது ரோகனை மண்ணின்மீதில் பாடு பட்டலை மாகோப லோபனை வீடு பட்டழி கோமாள வீணனை பாச சிக்கினில் வாழ்வேனை யாளுவ தெந்தநாளோ

351. ஒழு கூனிரத்தம்

ராகம் : மணிரங்கு தாளம் : ஆதி ஒழுகூ னிரத்த மொடுதோ லுடுத்தி உயர்கால் கரத்தி னுருவாகி ஒருதாய் வயிற்றி னிடையே யுதித்து உழல்மாய மிக்கு வருகாயம் பழசா யிரைப்பொ டிளையா விருத்த பரிதாப முற்று மடியாமுன் பரிவா லுளத்தில் முருகா எனச்சொல் பகர்வாழ் வெனக்கு மருள்வாயே

350. ஏட்டிலே

Image
ராகம் : காவடி சிந்து தாளம் : மிஸ்ர சாபு 1½ + 2 (3½) ஏட்டி லேவரை பாட்டி லேசில நீட்டி லேயினி தென்றுதேடி ஈட்டு மாபொருள் பாத்து ணாதிக லேற்ற மானகு லங்கள்பேசிக் காட்டி லேயியல் நாட்டி லேபயில் வீட்டி லேஉல கங்களேசக் காக்கை நாய்நரி பேய்க்கு ழாமுண யாக்கை மாய்வதொ ழிந்திடாதோ

349. என் பந்த வினை

ராகம் : பூர்வி கல்யாணி தாளம் : மிஸ்ர ஜம்பை (10) என்பந்த வினைத்தொடர் போக்கிவி சையமாகி இன்பந்தனை யுற்றும காப்ரிய மதுவாகி அன்புந்திய பொற்கிணி பாற்கட லமுதான அந்தந்தனி லிச்சைகொ ளாற்பத மருள்வாயே முன்புந்தி நினைத்துரு வாற்சிறு வடிவாகி முன்திந்தி யெனப்பர தாத்துட னடமாடித் தம்பந்த மறத்தவ நோற்பவர் குறைதீரச் சம்பந்த னெனத்தமிழ் தேக்கிய பெருமாளே.

348. எழுபிறவி

ராகம் : கரஹரப்ரியா தாளம் : அங்கதாளம் (5½) 2½ + 1½ + 1½ எழுபிறவி நீர்நிலத்தி லிருவினைகள் வேர்பிடித்து இடர்முளைக ளேமுளைத்து வளர்மாயை எனுமுலவை யேபணைத்து விரககுழை யேகுழைத்து இருளிலைக ளேதழைத்து மிகநீளும் இழவுநனை யேபிடித்து மரணபழ மேபழுத்து இடியுமுடல் மாமரத்தி னருநீழல் இசையில்விழ ஆதபத்தி யழியுமுன மேயெனக்கு இனியதொரு போதகத்தை யருள்வாயே

347. எழுதரிய அறுமுகம் (விழையும் மனிதரை)

ராகம் : ஆனந்த பைரவி சதுச்ர மட்யம் கண்ட நடை (25) எழுதரிய அறுமுகமு மணிநுதலும் வயிரமிடை யிட்டுச் சமைந்தசெஞ் சுட்டிக் கலன்களுந் துங்கநீள்பன் னிருகருணை விழிமலரு மிலகுபதி னிருகுழையும் ரத்நக் குதம்பையும் பத்மக் கரங்களுஞ் செம்பொனூலும் மொழிபுகழு முடைமணியு மரைவடமு மடியிணையு முத்தச் சதங்கையுஞ் சித்ரச் சிகண்டியுஞ் செங்கைவேலும் முழுதுமழ கியகுமர கிரிகுமரி யுடனுருகு முக்கட் சிவன்பெருஞ் சற்புத்ர வும்பர்தந் தம்பிரானே. தொலைவில்பிற வியுமகல வொருமவுன பரமசுக சுத்தப் பெரும்பதஞ் சித்திக்க அன்புடன் சிந்தியாதோ

346. எதிரொருவர்

Image
ராகம் ஹம்சானந்தி அங்கதாளம் (18½) 2½ + 2½ + 2½ + 2½ + 2½ + 2½ + 1½ + 2 எதிரொருவ ரிலையுலகி லெனஅலகு சிலுகுவிரு திட்டுக்ரி யைக்கேயெ ழுந்துபாரின் இடையுழல்வ சுழலுவன சமயவித சகலகலை யெட்டெட்டு மெட்டாத மந்த்ரவாளால் விதிவழியி னுயிர்கவர வருகொடிய யமபடரை வெட்டித் துணித்தாண்மை கொண்டுநீபம் விளவினிள இலைதளவு குவளைகமழ் பவளநிற வெட்சித் திருத்தாள்வ ணங்குவேனோ