Posts

Showing posts from 2016

441. அனித்தமான

ராகம் : பூபாளம் சதுச்ர ஏகம் திஸ்ர நடை அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி யடைத்து வாயு வோடாத வகைசாதித் தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச அசட்டு யோகி யாகாமல் மலமாயை செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார சிரத்தை யாகி யான் வேறெ னுடல்வேறு செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம நோதீத சிவச்சொ ரூபமாயோகி யெனஆள்வாய்

440. வம்பறாச் சில

ராகம் : ஆபோகி தாளம் : ஆதி 2 களை வம்ப றாச்சில கன்ன மிடுஞ்சம யத்துக் கத்துத் திரையாளர் வன்க லாத்திரள் தன்னை யகன்றும னத்திற் பற்றற் றருளாலே தம்ப ராக்கற நின்னை யுணர்ந்துரு கிப்பொற் பத்மக் கழல்சேர்வார் தங்கு ழாத்தினி லென்னையு மன்பொடு வைக்கச் சற்றுக் கருதாதோ

439. முட்டுப் பட்டு

ராகம் : பெஹாக் அங்கதாளம் (6) 1½ + 1½ + 3 முட்டுப் பட்டுக் கதிதோறும் முற்றச் சுற்றிப் பலநாளும் தட்டுப் பட்டுச் சுழல்வேனைச் சற்றுப் பற்றக் கருதாதோ வட்டப் புட்பத் தலமீதே வைக்கத் தக்கத் திருபாதா கட்டத் தற்றத் தருள்வோனே கச்சிச் சொக்கப் பெருமாளே.

438. மக்கட்குக் கூற

ராகம் : லதாங்கி திஸ்ரத்ரிபுடை (7) மக்கட்குக் கூறரி தானது கற்றெட்டத் தான்முடி யாதது மற்றொப்புக் கியாதுமொ வாதது மனதாலே மட்டிட்டுத் தேடவொ ணாதது தத்வத்திற் கோவைப டாதது மத்தப்பொற் போதுப கீரதி மதிசூடும் முக்கட்பொற் பாளரு சாவிய அர்த்தக்குப் போதக மானது முத்திக்குக் காரண மானது பெறலாகா முட்டர்க்கெட் டாதது நான்மறை யெட்டிற்றெட் டாதென வேவரு முற்பட்டப் பாலையி லாவது புரிவாயே

437. பொக்குப்பை

ராகம் : பஹுதாரி தாளம் : திச்ர ரூபகம் (5) பொக்குப்பைக் கத்தத் தொக்குப்பைக் குத்துப் பொய்த்தெத்துத் தத்துக் குடில்பேணிப் பொச்சைப்பிச் சற்பக் கொச்சைச்சொற் கற்றுப் பொற்சித்ரக் கச்சுக் கிரியார்தோய் துக்கத்துக் கத்திற் சிக்குப்பட் டிட்டுத் துக்கித்துக் கெய்த்துச் சுழலாதே சுத்தச்சித் தத்துப் பத்திப்பத் தர்க்கொத் துச்சற்றர்ச் சிக்கப் பெறுவேனோ

436. புனமடந்தை

ராகம் : சங்கராபரணம் தாளம் : ஆதி - 2 களை (16) புனமடந் தைக்குத் தக்கபு யத்தன் குமரனென் றெத்திப் பத்தர்து திக்கும் பொருளைநெஞ் சத்துக் கற்பனை முற்றும் பிறிதேதும் புகலுமெண் பத்தெட் டெட்டியல் தத்வம் சகலமும் பற்றிப் பற்றற நிற்கும் பொதுவையென் றொக்கத் தக்கதொ ரத்தந் தனைநாளும் சினமுடன் தர்க்கித் துச்சிலு கிக்கொண் டறுவருங் கைக்குத் திட்டொரு வர்க்குந் தெரிவரும் சத்யத் தைத்தெரி சித்துன் செயல்பாடித் திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந் திருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ் சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென் றருள்வாயே

435. புரைபடும்

ராகம் : ஹிந்தோளம் தாளம் : ஆதி புரைபடுஞ் செற்றக் குற்றம னத்தன் தவமிலன் சுத்தச் சத்யஅ சத்யன் புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந் துரிசாளன் பொறையிலன் கொத்துத் தத்வவி கற்பஞ் சகலமும் பற்றிப் பற்றற நிற்கும் பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன் கொடியேனின் கரையறுஞ் சித்ரச் சொற்புகழ் கற்குங் கலையிலன் கட்டைப் புத்தியன் மட்டன் கதியிலன் செச்சைப் பொற்புய வெற்புங் கதிர்வேலுங் கதிரையுஞ் சக்ரப் பொற்றையு மற்றும் பதிகளும் பொற்புக் கச்சியு முற்றுங் கனவிலுஞ் சித்தத் திற்கரு திக்கொண் டடைவேனோ

434. படிறொழுக்கம்

ராகம் : சாரங்கா மிஸ்ர சாபு (3½) 1½ + 2 படிறொ ழுக்கமு மடம னத்துள படிப ரித்துட னொடிபேசும் பகடி கட்குள மகிழ மெய்ப்பொருள் பலகொ டுத்தற உயிர்வாடா மிடியெ னப்பெரு வடவை சுட்டிட விதன முற்றிட மிகவாழும் விரகு கெட்டரு நரகு விட்டிரு வினைய றப்பத மருள்வாயே

433. நச்சரவ மென்று

ராகம் : கானடா தாளம் : ஆதி நச்சரவ மென்று நச்சரவ மென்று நச்சுமிழ்க ளங்க மதியாலும் நத்தொடுமு ழங்க னத்தொடுமு ழங்கு நத்திரைவ ழங்கு கடலாலும் இச்சையுணர் வின்றி யிச்சையென வந்த இச்சிறுமி நொந்து மெலியாதே எத்தனையு நெஞ்சில் எத்தனமு யங்கி இத்தனையி லஞ்ச லெனவேணும்

432. தலைவலை

ராகம் : சுத்த தன்யாசி தாளம் : ஆதி தலைவலை யத்துத் தரம்பெ றும்பல புலவர் மதிக்கச் சிகண்டி குன்றெறி தருமயில் செச்சைப் புயங்க யங்குற வஞ்சியோடு தமனிய முத்துச் சதங்கை கிண்கிணி தழுவிய செக்கச் சிவந்த பங்கய சரணமும் வைத்துப் பெரும்ப்ர பந்தம்வி ளம்புகாளப் புலவனெ னத்தத் துவந்த ரந்தெரி தலைவனெ னத்தக் கறஞ்செ யுங்குண புருஷனெ னப்பொற் பதந்த ருஞ்சன னம்பெறாதோ பொறையனெ னப்பொய்ப் ப்ரபஞ்ச மஞ்சிய துறவனெ னத்திக் கியம்பு கின்றது புதுமைய லச்சிற் பரம்பொ ருந்துகை தந்திடாதோ

431. செறிதரும்

ராகம் : ஷண்முகப்ரியா தாளம் : ஆதி செறிதரும் செப்பத் துற்பல வெற்பும் பிறிதுமங் கத்தைக் குற்றவி ருப்புஞ் சிகரிதுண் டிக்கக் கற்றத னிச்செஞ் சுடர்வேலும் திரள்புயங் கொத்துப் பட்டவ னைத்துந் தெளியநெஞ் சத்துப் புற்றும யக்கம் திகழ்ப்ரபஞ் சத்தைப் புற்புத மொக்கும் படிநாடும் அறிவறிந் தத்தற் கற்றது செப்புங் கடவுளன் பத்தர்க் கச்சம றுத்தன் பருள்பவன் பொற்புக் கச்சியுள் நிற்கும் பெருமானென் றவிழுமன் புற்றுக் கற்றும னத்தின் செயலொழிந் தெட்டப் பட்டத னைச்சென் றடைதரும் பக்வத் தைத்தமி யெற்கென் றருள்வாயே

430. சீசி முப்புரக் காடு

ராகம் : தர்பார் மிஸ்ரசாபு 1½ + 2 (3½) சீசி முப்புரக் காடு நீறெழச் சாடி நித்திரைக் கோசம் வேரறச் சீவன் முத்தியிற் கூட வேகளித் தநுபூதி சேர அற்புதக் கோல மாமெனச் சூரி யப்புவிக் கேறி யாடுகச் சீலம் வைத்தருட் டேறி யேயிருக் கறியாமற் பாசம் விட்டுவிட் டோடி போனதுப் போது மிப்படிக் காகி லேனினிப் பாழ்வ ழிக்கடைக் காம லேபிடித் தடியேனைப் பார டைக்கலக் கோல மாமெனத் தாப ரித்துநித் தார மீதெனப் பாத பத்மநற் போதை யேதரித் தருள்வாயே

429. கொத்தார்

ராகம் : கல்யாண வசந்தம் தாளம் : ஆதி திச்ர நடை (12) கொத்தார் பற்கா லற்றே கப்பாழ் குப்பா யத்திற் செயல்மாறிக் கொக்கா கிக்கூ னிக்கோல் தொட்டே கொட்டா விக்குப் புறவாசித் தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன் அஆ உஉ எனவேகேள் செற்றே சுட்டே விட்டே றிப்போ மப்பே துத்துக் கமறாதோ

428. கனிதரும் கொக்கு

ராகம் : ஆரபி தாளம் : ஆதி கனிதருங் கொக்குக் கட்செவி வெற்பும் பழநியுந் தெற்குச் சற்குரு வெற்புங் கதிரையுஞ் சொற்குட் பட்டதி ருச்செந் திலும்வேலும் கனவிலுஞ் செப்பத் தப்புமெ னைச்சங் கடவுடம் புக்குத் தக்கவ னைத்துங் களவுகொண் டிட்டுக் கற்பனை யிற்கண் சுழல்வேனைப் புனிதனம் பைக்குக் கைத்தல ரத்நம் பழையகங் கைக்குற் றப்புது முத்தம் புவியிலன் றைக்கற் றெய்ப்பவர் வைப்பென் றுருகாஎப் பொழுதும் வந்திக்கைக் கற்றஎ னைப்பின் பிழையுடன் பட்டுப் பத்தருள் வைக்கும் பொறையையென் செப்பிச் செப்புவ தொப்பொன் றுளதோதான்

427. கறை இலங்கும்

ராகம் : தோடி தாளம் : ஆதி கறையிலங் குக்ரச் சத்தித ரிக்குஞ் சரவணன் சித்தத் துக்குளொ ளிக்குங் கரவடன் கொற்றக் குக்குட வத்தன் தனிவீரக் கழலிடும் பத்மக் கட்செவி வெற்பன் பழநிமன் கச்சிக் கொற்றவன் மற்றுங் கடகவஞ் சிக்குக் கர்த்தனெ னச்செந் தமிழ்பாடிக் குறையிலன் புற்றுக் குற்றம றுக்கும் பொறைகள்நந் தற்பப் புத்தியை விட்டென் குணமடங் கக்கெட் டுக்குண மற்றொன் றிலதான குணமடைந் தெப்பற் றுக்களு மற்றுங் குறியொடுஞ் சுத்தப் பத்தரி ருக்குங் குருபதஞ் சித்திக் கைக்கருள் சற்றுங் கிடையாதோ

426. கருமமான பிறப்பற

ராகம் : பெஹாக் அங்கதாளம் (15½) 1½ + 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 கரும மானபி றப்பற வொருகதி காணா தெய்த்துத் தடுமாறுங் கலக காரண துற்குண சமயிகள் நானா வர்க்கக் கலைநூலின் வரும நேகவி கற்பவி பரிதம னோபா வத்துக் கரிதாய மவுன பூரித சத்திய வடிவினை மாயா மற்குப் புகல்வாயே

425. எனக்குச் சற்று

ராகம் : கமாஸ் தாளம் : ஆதி (28) மிஸ்ர நடை (தகிட தகதிமி) எனக்குச்சற் றுனக்குச்சற் றெனக்கத்தத் தவர்க்கிச்சைப் பொருட்பொற்றட் டிடிக்கைக்குக் குடில்மாயம் எனக்கட்டைக் கிடைப்பட்டிட் டனற்சுட்டிட் டடக்கைக்குப் பிறக்கைக்குத் தலத்திற்புக் கிடியாமுன் தினைக்குட்சித் திரக்கொச்சைக் குறத்தத்தைத் தனத்தைப்பொற் பெறச்செச்சைப் புயத்தொப்பித் தணிவோனே செருக்கிச்சற் றுறுக்கிச்சொற் பிரட்டத்துட் டரைத்தப்பித் திரட்டப்பிக் கழற்செப்பத் திறல்தாராய்

424. அற்றைக்கு இரை

ராகம் : பாகேஸ்ரீ சங்கீர்ண சாபு (4½) 1 + 1 + 2½ அற்றைக் கிரைதேடி அத்தத் திலுமாசை பற்றித் தவியாத பற்றைப் பெறுவேனோ வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் தொளைசீலா கற்றுற் றுணர்போதா கச்சிப் பெருமாளே.

423. அறிவிலாப் பித்தர்

Image
ராகம் : சாரங்கா அங்கதாளம் (5½) 2½ + 1½ + 1½ அறிவிலாப் பித்த ருன்ற னடிதொழாக் கெட்ட வஞ்சர் அசடர்பேய்க் கத்தர் நன்றி யறியாத அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக் கிப்பு கழ்ந்து அவரைவாழ்த் தித்தி ரிந்து பொருள்தேடிச் சிறிதுகூட் டிக்கொ ணர்ந்து தெருவுலாத் தித்தி ரிந்து தெரிவைமார்க் குச்சொ ரிந்து அவமேயான் திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து தெளியமோ க்ஷத்தை யென்று அருள்வாயே

422. அதிமதம்

ராகம் : கல்யாணி தாளம் : ஆதி (2 களை) அதிமதங் கக்கப் பக்கமு கக்குஞ் சரிதனந் தைக்கச் சிக்கென நெக்கங் கணைதருஞ் செச்சைப் பொற்புய னத்தன் குறவாணர் அடவியந் தத்தைக் கெய்த்துரு கிச்சென் றடிபணிந் திட்டப் பட்டும யற்கொண் டயர்பவன் சத்திக் கைத்தல னித்தன் குமரேசன் துதிசெயும் சுத்தப் பத்தியர் துக்கங் களைபவன் பச்சைப் பக்ஷிந டத்துந் துணைவனென் றர்ச்சித் திச்சைத ணித்துன் புகழ்பாடிச் சுருதியின் கொத்துப் பத்தியு முற்றுந் துரியமுந் தப்பித் தத்வம னைத்துந் தொலையுமந் தத்துக் கப்புற நிற்கும் படிபாராய்

421. வேத வித்தகா

ராகம் : சாமா அங்கதாளம் (8½) 1½ + 1½ + 1 + 2½ + 2 வேத வித்தகா சாமீ நமோநம வேல்மி குத்தமா சூரா நமோநம வீம சக்ரயூ காளா நமோநம விந்துநாத வீர பத்மசீர் பாதா நமோநம நீல மிக்ககூ தாளா நமோநம மேக மொத்தமா யூரா நமோநம விண்டிடாத போத மொத்தபேர் போதா நமோநம பூத மற்றுமே யானாய் நமோநம பூர ணத்துளே வாழ்வாய் நமோநம துங்கமேவும் பூத ரத்தெலாம் வாழ்வாய் நமோநம ஆறி ரட்டிநீள் தோளா நமோநம பூஷ ணத்துமா மார்பா நமோநம புண்டரீக

420. வேடர் செழுந்தினை

ராகம் : சிம்மேந்திர மத்யமம் திச்ர த்ருவம் 2 களை வேடர்செ ழுந்தினை காத்திதண் மீதிலி ருந்தபி ராட்டிவி லோசன அம்புக ளாற்செயல் தடுமாறி மேனித ளர்ந்துரு காப்பரி தாபமு டன்புன மேற்றிரு வேளைபு குந்தப ராக்ரம மதுபாடி நாடறி யும்படி கூப்பிடு நாவலர் தங்களை யார்ப்பதி னாலுல கங்களு மேத்திய இருதாளில் நாறுக டம்பணி யாப்பரி வோடுபு ரந்தப ராக்ரம நாடஅ ருந்தவம் வாய்ப்பது மொருநாளே

419. வானப் புக்கு

ராகம் : பூர்வி கல்யாணி தாளம் : சதுச்ர ரூபகம் வானப் புக்குப் பற்றும ருத்துக் கனல்மேவு மாயத் தெற்றிப் பொய்க்குடி லொக்கப் பிறவாதே ஞானச் சித்திச் சித்திர நித்தத் தமிழாலுன் நாமத் தைக்கற் றுப்புகழ் கைக்குப் புரிவாயே

418. வாரி மீதே

ராகம் : குறிஞ்சி அங்கதாளம் (8½) 2½ + 2½ + 1½ + 2 வாரிமீ தேயெழு திங்களாலே மாரவே ளேவிய அம்பினாலே பாரெலா மேசிய பண்பினாலே பாவியே னாவிம யங்கலாமோ

417. வாதந் தலைவலி

ராகம் : பெஹாக் தாளம் : ஆதி வாதந் தலைவலி சூலம் பெருவயி றாகும் பிணியிவை யணுகாதே மாயம் பொதிதரு காயந் தனின்மிசை வாழுங் கருவழி மருவாதே ஓதம் பெறுகடல் மோதுந் திரையது போலும் பிறவியி லுழலாதே ஓதும் பலஅடி யாருங் கதிபெற யானுன் கழலிணை பெறுவேனோ

416. மோது மறலி

Image
ராகம் : ஹம்சத்வனி அங்கதாளம் (7½) 1½ + 1½; + 1 + 1½ + 2 மோது மறலியொரு கோடி வேற்படை கூடி முடுகியெம தாவி பாழ்த்திட மோக முடையவெகு மாதர் கூட்டமு மயலாரும் மூளு மளவில்விசை மேல்வி ழாப்பரி தாப முடனும்விழி நீர்கொ ளாக்கொடு மோக வினையில்நெடு நாளின் மூத்தவ ரிளையோர்கள் ஏது கருமமிவர் சாவெ னாச்சிலர் கூடி நடவுமிடு காடெ னாக்கடி தேழு நரகினிடை வீழ்மெ னாப்பொறி யறுபாவி ஏழு புவனமிகு வான நாட்டவர் சூழ முநிவர்கிளை தாமு மேத்திட ஈச னருள்குமர வேத மார்த்தெழ வருவாயே

415. மூலா நிலமதின்

ராகம் : பந்துவராளி தாளம் : ஆதி மூலா நிலமதின் மேலே மனதுறு மோகா டவிசுடர் தனைநாடி மோனா நிலைதனை நானா வகையிலு மோதா நெறிமுறை முதல்கூறும் லீலா விதமுன தாலே கதிபெற நேமா ரகசிய வுபதேசம் நீடூ ழிதனிலை வாடா மணியொளி நீதா பலமது தருவாயே

414. முனை அழிந்தது

ராகம் : சங்கரானந்தபிரியா அங்கதாளம் (7½) 1½ + 2 + 2 + 2 முனைய ழிந்தது மேட்டிகு லைந்தது வயது சென்றது வாய்ப்ப லுதிர்ந்தது முதுகு வெஞ்சிலை காட்டிவ ளைந்தது ப்ரபையான முகமி ழிந்தது நோக்குமி ருண்டது இருமல் வந்தது தூக்கமொ ழிந்தது மொழித ளர்ந்தது நாக்குவி ழுந்தது அறிவேபோய் நினைவ யர்ந்தது நீட்டல் முடங்கலு மவச மும்பல ஏக்கமு முந்தின நெறிம றந்தது மூப்பு முதிர்ந்தது பலநோயும் நிலுவை கொண்டது பாய்க்கிடை கண்டது சலம லங்களி னாற்றமெ ழுந்தது நிமிஷ மிங்கினி யாச்சுதென் முன்பினி தருள்வாயே

413. முருக மயூர

ராகம் : பாகேஸ்ரீ அங்கதாளம் 2 + 1½ + 2 (5½) முருகம யூரச் சேவக சரவண ஏனற் பூதரி முகுளப டீரக் கோமள முலைமீதே முழுகிய காதற் காமுக பதிபசு பாசத் தீர்வினை முதியபு ராரிக் கோதிய குருவேயென் றுருகியு மாடிப் பாடியு மிருகழல் நாடிச் சூடியு முணர்வினோ டூடிக் கூடியும் வழிபாடுற் றுலகினொ ராசைப் பாடற நிலைபெறு ஞானத் தாலினி யுனதடி யாரைச் சேர்வது மொருநாளே

412. மாண்டார் எலும்பணி

ராகம் : சங்கராபரணம் அங்கதாளம் 2½ + 2 + 2 (6½) மாண்டாரெ லும்பணி யுஞ்சடை யாண்டாரி றைஞ்ச மொழிந்ததை வான்பூத லம்பவ னங்கனல் புனலான வான்பூத முங்கர ணங்களு நான்போயொ டுங்கஅ டங்கலு மாய்ந்தால்வி ளங்கும தொன்றினை யருளாயேல் வேண்டாமை யொன்றைய டைந்துள மீண்டாறி நின்சர ணங்களில் வீழந்தாவல் கொண்டுரு கன்பினை யுடையேனாய் வேந்தாக டம்புபு னைந்தருள் சேந்தாச ரண்சர ணென்பது வீண்போம தொன்றல என்பதை யுணராதோ

411. மனைமக்கள் சுற்றம்

ராகம் : ராமப்ரியா தாளம் : திச்ர ஏகம் (3) மனைமக்கள் சுற்ற மெனுமாயா வலையைக்க டக்க அறியாதே வினையிற்செ ருக்கி யடிநாயேன் விழலுக்கி றைத்து விடலாமோ சுனையைக்க லக்கி விளையாடு சொருபக்கு றத்தி மணவாளா தினநற்ச ரித்ர முளதேவர் சிறைவெட்டிவிட்ட பெருமாளே.

410. மனக பாட

ராகம் : திலங் அங்கதாளம் (5½) 1½ + 1½ + 2½ மனக பாட பாடீர தனத ராத ராரூப மதன ராச ராசீப சரகோப வருண பாத காலோக தருண சோபி தாகார மகளி ரோடு சீராடி யிதமாடிக் குனகு வேனை நாணாது தனகு வேனை வீணான குறைய னேனை நாயேனை வினையேனைக் கொடிய னேனை யோதாத குதலை யேனை நாடாத குருட னேனை நீயாள்வ தொருநாளே

409. மதிதனை யிலாத

ராகம் : தன்யாசி அங்கதாளம் 2½ + 1½ + 1½ (5½) மதிதனை யிலாத பாவி குருநெறி யிலாத கோபி மனநிலை நிலாத பேயன் அவமாயை வகையது விடாத பேடி தவநினை விலாத மோடி வரும்வகை யிதேது காய மெனநாடும் விதியிலி பொலாத லோபி சபைதனில் வராத கோழை வினையிகல் விடாத கூள னெனைநீயும் மிகுபர மதான ஞான நெறிதனை விசார மாக மிகுமுன துரூப தான மருள்வாயே

408. மதனேவிய

ராகம் : தோடி தாளம் : திச்ர ஏகம் (3) மதனேவிய கணையாலிரு வினையால்புவி கடல்சாரமும் வடிவாயுடல் நடமாடுக முடியாதேன் மனமாயையொ டிருகாழ்வினை யறமூதுடை மலம்வேரற மகிழ்ஞானக அநுபூதியி னருள்மேவிப் பதமேவுமு னடியாருடன் விளையாடுக அடியேன்முனெ பரிபூரண கிருபாகர முடன்ஞான பரிமேலழ குடனேறிவி ணவர்பூமழை யடிமேல்விட பலகோடிவெண் மதிபோலவெ வருவாயே

407. மக்கள் தாயர்

ராகம் : ஆனந்தபைரவி ஆதி கண்ட நடை (1½ + 1) மக்கள்தா யர்க்குமரு கர்க்குமா மர்க்குமனை விக்கும்வாழ் நர்க்குமிக மனதூடே மைத்தவே லைக்குநெடி துற்றமா யத்துயரம் வைத்துவா டச்சமனு முறமேவித் திக்குநா டிக்கரிய மெய்க்கடா விற்றிருகி திக்கஆ விக்களவு தெரியாமுன் சித்தமோ வித்துயிலு மற்றுவா ழச்சிறிது சித்ரபா தக்கமல மருள்வாயே

406. போத நிர்க்குண

ராகம் : சுநாதவினோதினி அங்கதாளம் (8) 1½ + 2 + 2 + 1½ + 1 போத நிர்க்குண போதா நமோநம நாத நிஷ்கள நாதா நமோநம பூர ணக்கலை சாரா நமோநம பஞ்சபாண பூபன் மைத்துன பூபா நமோநம நீப புஷ்பக தாளா நமோநம போக சொர்க்கபு பாலா நமோநம சங்கமேறும் மாத மிழ்த்ரய சேயே நமோநம வேத னத்ரய வேளே நமோநம வாழ்ஜ கத்ரய வாழ்வே நமோநம என்றுபாத வாரி ஜத்தில்வி ழாதே மகோததி யேழ்பி றப்பினில் மூழ்கா மனோபவ மாயை யிற்சுழி யூடே விடாதுக லங்கலாமோ

405. பொதுவதாய்

ராகம் : ஹம்சத்வனி தாளம் : மிஸ்ரசாபு (3½) பொதுவ தாய்த்தனி முதல தாய்ப்பகல் இரவு போய்ப்புகல் கின்றவேதப் பொருள தாய்ப்பொருள் முடிவ தாய்ப்பெரு வெளிய தாய்ப்புதை வின்றியீறில் கதிய தாய்க்கரு தரிய தாய்ப்பரு கமுத மாய்ப்புல னைந்துமாயக் கரண மாய்த்தெனை மரண மாற்றிய கருணை வார்த்தையி ருந்தவாறென்

404. பேரவா அறா

ராகம் : ஹிந்தோளம் அங்கதாளம் (10½) 1½ + 1½ + 2½ + 2 + 3 பேர வாவ றாவாய்மை பேசற் கறியாமே பேதை மாத ராரோடு கூடிப் பிணிமேவா ஆர வார மாறாத நூல்கற் றடிநாயேன் ஆவி சாவி யாகாமல் நீசற் றருள்வாயே சூர சூர சூராதி சூரர்க் கெளிவாயா தோகை யாகு மாரா கிராதக் கொடிகேள்வா தீர தீர தீராதி தீரப் பெரியோனே தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே.

403. பெருங்காரியம்

ராகம் : கரஹரப்ரியா தாளம் : ஆதி கண்ட நடை (20) பெருங்கா ரியம்போல் வருங்கே டுடம்பால் ப்ரியங்கூர வந்து கருவூறிப் பிறந்தார் கிடந்தா ரிருந்தார் தவழ்ந்தார் நடந்தார் தளர்ந்து பிணமானார் அருங்கான் மருங்கே யெடுங்கோள் சுடுங்கோள் அலங்கார நன்றி தெனமூழ்கி அகன்றா சையும்போய் விழும்பா ழுடம்பால் அலந்தேனை யஞ்ச லெனவேணும்

402. பூத கலாதிகள்

ராகம் : மோகனம் அங்கதாளம் (5½) 2 + 2 + 1½ பூதக லாதிகள் கொண்டு யோகமு மாகம கிழ்ந்து பூசைகள் யாதுநி கழ்ந்து பிழைகோடி போம்வழி யேதுதெ ரிந்து ஆதிய நாதியி ரண்டு பூரணி காரணி விந்து வெளியான நாதப ராபர மென்ற யோகியு லாசம றிந்து ஞானசு வாசமு ணர்ந்து வொளிகாண நாடியொ ராயிரம் வந்த தாமரை மீதில மர்ந்த நாயகர் பாதமி ரண்டு மடைவேனோ

401. புவிக்குன் பாதம்

ராகம் : ஷண்முகப்ரியா தாளம் : சதுச்ர ரூபகம் (6) புவிக்குன் பாத மதைநினை பவர்க்குங் கால தரிசனை புலக்கண் கூடு மதுதனை அறியாதே புரட்டும் பாத சமயிகள் நெறிக்கண் பூது படிறரை புழுக்கண் பாவ மதுகொளல் பிழையாதே கவிக்கொண் டாடு புகழினை படிக்கும் பாடு திறமிலி களைக்கும் பாவ சுழல்படு மடிநாயேன் கலக்குண் டாகு புவிதனி லெனக்குண் டாகு பணிவிடை கணக்குண் டாதல் திருவுள மறியாதோ

400. புத்தகத்து ஏட்டில்

ராகம் : ஆபோகி அங்கதாளம் (2½ + 2 + 1½ + 3) புத்தகத் தேட்டிற் றீட்டி முடியாது பொற்புறக் கூட்டிக் காட்டி யருள்ஞான வித்தகப் பேற்றைத் தேற்றி யருளாலே மெத்தெனக் கூட்டிக் காக்க நினைவாயே

399. புகரில் சேவல

ராகம் : மலையமாருதம் தாளம் : அங்கதாளம் 1½ + 2 + 2 + 2 (7½) புகரில் சேவல தந்துர சங்க்ரம நிருதர் கோபக்ர வுஞ்சநெ டுங்கிரி பொருத சேவக குன்றவர் பெண்கொடி மணவாளா புனித பூசுர ருஞ்சுர ரும்பணி புயச பூதர என்றிரு கண்புனல் பொழிய மீமிசை யன்புது ளும்பிய மனனாகி அகில பூதவு டம்புமு டம்பினில் மருவு மாருயி ருங்கர ணங்களு மவிழ யானுமி ழந்தஇ டந்தனி லுணர்வாலே அகில வாதிக ளுஞ்சம யங்களும் அடைய ஆமென அன்றென நின்றதை யறிவி லேனறி யும்படி யின்றருள் புரிவாயே

398. பிறவியலை

ராகம் : கல்யாணி அங்கதாளம் கண்ட ஜம்பை (8) 1½ + 1 + 1½ + 1 + 3 பிறவியலை யாற்றினிற் புகுதாதே பிரகிருதி மார்க்கமுற் றலையாதே உறுதிகுரு வாக்கியப் பொருளாலே உனதுபத காட்சியைத் தருவாயே

397. பாணிக்குட் படாது

ராகம் : ஹரிகாம்போதி தாளம் : திஸ்ரத்ரிபுடை (7) பாணிக்குட் படாது சாதகர் காணச்சற் றொணாது வாதிகள் பாஷிக்கத் தகாது பாதக பஞ்சபூத பாசத்திற்படாது வேறொரு பாயத்திற் புகாது பாவனை பாவிக்கப் பெறாது வாதனை நெஞ்சமான ஏணிக்கெட் டொணாது மீதுயர் சேணுக்குச் சமான நூல்வழி யேறிப்பற் றொணாது நாடினர் தங்களாலும் ஏதுச்செப் பொணாத தோர்பொருள் சேரத்துக் கமாம கோததி யேறச்செச் சைநாறு தாளைவ ணங்குவேனோ

396. பருதியாய்

ராகம் : சஹானா தாளம் : மிஸ்ர அட (18) பருதி யாய்ப்பனி மதிய மாய்ப்படர் பாராய் வானாய் நீர்தீ காலா யுடுசாலம் பலவு மாய்ப்பல கிழமை யாய்ப் பதி னாலா றேழா மேனா ளாயே ழுலகாகிச் சுருதி யாய்ச்சுரு திகளின் மேற்சுட ராய்வே தாவாய் மாலாய் மேலே சிவமான தொலைவி லாப்பொரு ளிருள்பு காக்கழல் சூடா நாடா ஈடே றாதே சுழல்வேனோ

395. பரவைக்கு எத்தனை

ராகம் : ராமப்ரியா தாளம் : திச்ர ஏகம் (3) பரவைக் கெத்தனை விசைதூது பகரற் குற்றவ ரெனமாணுன் மரபுக் குச்சித ப்ரபுவாக வரமெத் தத்தர வருவாயே

394. பட்டுப் படாத

ராகம் : கானடா தாளம் : சதுச்ர ஜம்பை (7) பட்டுப் படாத மதனாலும் பக்கத்து மாதர் வசையாலும் சுட்டுச் சுடாத நிலவாலும் துக்கத்தி லாழ்வ தியல்போதான்

393. பகிர நினைவொரு

ராகம் : சஹானா தாளம்: அங்கதாளம் 1½ + 2 + 2 + 2 (7½) பகிர நினைவொரு தினையள விலுமிலி கருணை யிலியுன தருணையொ டுதணியல் பழநி மலைகுரு மலைபணி மலைபல மலைபாடிப் பரவு மிடறிலி படிறுகொ டிடறுசொல் பழகி யழகிலி குலமிலி நலமிலி பதிமை யிலிபவு ஷதுமிலி மகிமையி லிகுலாலன் திகிரி வருமொரு செலவினி லெழுபது செலவு வருமன பவுரிகொ டலமரு திருக னுருகுத லழுகுதல் தொழுகுதல் நினையாத திமிர னியல்பிலி யருளிலி பொருளிலி திருடன் மதியிலி கதியிலி விதியிலி செயலி லுணர்விலி சிவபத மடைவது மொருநாளே

392. நெடிய வடகுவடு

ராகம் : காம்போதி அங்கதாளம் (7½) 1½ + 2 + 2 + 2 நெடிய வடகுவ டிடியவு மெழுகிரி நெறுநெ றெனநெரி யவுமுது பணிபதி நிபிட முடிகிழி யவுநில மதிரவும் விளையாடும் நிகரில் கலபியும் ரவியுமிழ் துவசமும் நினது கருணையு முறைதரு பெருமையும் நிறமு மிளமையும் வளமையு மிருசர ணமும்நீப முடியு மபிநவ வனசரர் கொடியிடை தளர வளர்வன ம்ருகமத பரிமள முகுள புளகித தனகிரி தழுவிய திரடோளும் மொகுமொ கெனமது கரமுரல் குரவணி முருக னறுமுக னெனவரு வனபெயர் முழுது மியல்கொடு பழுதற மொழிவது மொருநாளே

391. நீலங்கொள்

ராகம் : சாரங்கா/குறிஞ்சி அங்கதாளம் கண்ட நடை (8) நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே நீவந்த வாழ்வைக்கண் டதனாலே மால்கொண்ட பேதைக்குன் மணநாறும் மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே வேல்கொண்டு வேலைப்பண் டெறிவோனே வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா நாலந்த வேதத்தின் பொருளோனே நானென்று மார்தட்டும் பெருமாளே.

390. நீரு மென்பு

ராகம் : நவரச கன்னட தாளம் : ஆதி திச்ர நடை (12) நீரு மென்பு தோலி னாலு மாவ தென்கை கால்க ளோடு நீளு மங்க மாகி மாய வுயிரூறி நேச மொன்று தாதை தாய ராசை கொண்ட போதில் மேவி நீதி யொன்று பால னாகி யழிவாய்வந் தூரு மின்ப வாழ்வு மாகி யூன மொன்றி லாது மாத ரோடு சிந்தை வேடை கூர உறவாகி ஊழி யைந்த கால மேதி யோனும் வந்து பாசம் வீச ஊனு டம்பு மாயு மாய மொழியாதோ

389. நிருதரார்க்கொரு

ராகம் : மத்யமாவதி அங்கதாளம் (7½) 1½ + 2 + 2 + 2 நிருத ரார்க்கொரு காலா ஜேஜெய சுரர்க ளேத்திடு வேலா ஜேஜெய நிமல னார்க்கொரு பாலா ஜேஜெய விறலான நெடிய வேற்படை யானே ஜேஜெய எனஇ ராப்பகல் தானே நான்மிக நினது தாட்டொழு மாறே தானினி யுடனேதான் தரையி னாழ்த்திரை யேழே போலெழு பிறவி மாக்கட லூடே நானுறு சவலை தீர்த்துன தாளே சூடியு னடியார்வாழ் சபையி னேற்றியின் ஞானா போதமு மருளி யாட்கொளு மாறே தானது தமிய னேற்குமு னேநீ மேவுவ தொருநாளே

388. நிமிர்ந்த முதுகும்

ராகம் : காபி தாளம் : சதுச்ர ரூபகம் (6) நிமிர்ந்த முதுகுங் குனிந்து சிறந்த முகமுந் திரங்கி நிறைந்த வயிறுஞ் சரிந்து தடியூணி நெகிழ்ந்து சடலந் தளர்ந்து விளங்கு விழியங் கிருண்டு நினைந்த மதியுங் கலங்கி மனையாள்கண் டுமிழ்ந்து பலருங் கடிந்து சிறந்த வியலும் பெயர்ந்து உறைந்த உயிருங் கழன்று விடுநாள்முன் உகந்து மனமுங் குளிர்ந்து பயன்கொள் தருமம் புரிந்து ஒடுங்கி நினையும் பணிந்து மகிழ்வேனோ

387. நித்தமுற்று உனை

ராகம் : குந்தலவராளி அங்கதாளம் 1½ நித்தமுற் றுனைநினைத்து மிகநாடி நிட்டைபெற் றியல்கருத்தர் துணையாக நத்தியு தமதவத்தி னெறியாலே லக்யலக் கணநிருத்த மருள்வாயே

386. நாளு மிகுத்த

ராகம் : கமாஸ் தாளம் : அங்கதாளம் 2 + 1½ + 3 (6½) நாளு மிகுத்த கசிவாகி ஞான நிருத்த மதைநாடும் ஏழை தனக்கு மநுபூதி ராசி தழைக்க அருள்வாயே

385. நாலிரண்டிதழ்

Image
ராகம் : துர்கா அங்க தாளம் (7½) 1½ + 2 + 2 + 2 நாலி ரண்டித ழாலே கோலிய ஞால முண்டக மேலே தானிள ஞாயி றென்றுறு கோலா காலனு மதின்மேலே ஞால முண்டபி ராணா தாரனும் யோக மந்திர மூலா தாரனு நாடி நின்றப்ர பாவா காரனு நடுவாக மேலி ருந்தகி ரீடா பீடமு நூல றிந்தம ணீமா மாடமு மேத கும்ப்ரபை கோடா கோடியு மிடமாக வீசி நின்றுள தூபா தீபவி சால மண்டப மீதே யேறிய வீர பண்டித வீரா சாரிய வினைதீராய்

384. நாராலே

ராகம்: மலஹரி தாளம்: ஆதி – 2 களை நாரா லேதோல் நீரா லேயாம் நானா வாசற் குடிலூடே ஞாதா வாயே வாழ்கா லேகாய் நாய்பேய் சூழ்கைக் கிடமாமுன் தாரா ரார்தோ ளீரா றானே சார்வா னோர்நற் பெருவாழ்வே தாழா தேநா யேனா வாலே தாள்பா டாண்மைத் திறல்தாராய்

383. நரையொடு

ராகம் : நாதநாமக்ரியா அங்கதாளம் (7½) 2 + 1½ + 1½ + 2½ நரையொடு பற்க ழன்று தோல்வற்றி நடையற மெத்த நொந்து காலெய்த்து நயனமி ருட்டி நின்று கோலுற்று நடைதோயா நழுவும்வி டக்கை யொன்று போல்வைத்து நமதென மெத்த வந்த வாழ்வுற்று நடலைப டுத்து மிந்த மாயத்தை நகையாதே விரையொடு பற்றி வண்டு பாடுற்ற ம்ருகமத மப்பி வந்த வோதிக்கு மிளிருமை யைச்செ றிந்த வேல்கட்கும் வினையோடு மிகுகவி னிட்டு நின்ற மாதர்க்கு மிடைபடு சித்த மொன்று வேனுற்றுன் விழுமிய பொற்ப தங்கள் பாடற்கு வினவாதோ

382. தோலத்தியால்

ராகம் : சுருட்டி சதுச்ர த்ருபுடை கண்ட நடை (20) தோலத்தி யாலப்பி னாலொப்பி லாதுற்ற தோளுக்கை காலுற்ற குடிலூடே சோர்வற்று வாழ்வுற்ற கால்பற்றி யேகைக்கு வேதித்த சூலத்த னணுகாமுன் கோலத்தை வேலைக்கு ளேவிட்ட சூர்கொத்தொ டேபட்டு வீழ்வித்த கொலைவேலா கோதற்ற பாதத்தி லேபத்தி கூர்புத்தி கூர்கைக்கு நீகொற்ற அருள்தாராய்

381. தோரண கனக

ராகம் : மோகனம் மிஸ்ர சாபு 2 + 1½ (3½) தோரண கனக வாசலில் முழவு தோல்முர சதிர முதிராத தோகையர் கவரி வீசவ யிரியர் தோள்வலி புகழ மதகோப வாரண ரதப தாகினி துரக மாதிர நிறைய அரசாகி வாழினும் வறுமை கூரினு நினது வார்கழ லொழிய மொழியேனே

380. துள்ளுமத

Image
ராகம் : ஹம்சானந்தி அங்கதாளம் 1½ + 1 + 2 + 3 (7½) துள்ளுமத வேள்கைக் கணையாலே தொல்லைநெடு நீலக் கடலாலே மெள்ளவரு சோலைக் குயிலாலே மெய்யுருகு மானைத் தழுவாயே தெள்ளுதமிழ் பாடத் தெளிவோனே செய்யகும ரேசத் திறலோனே வள்ளல்தொழு ஞானக் கழலோனே வள்ளிமண வாளப் பெருமாளே.

379. திரை வஞ்ச

ராகம் : நாட்டகுறிஞ்சி தாளம் : கண்டசாபு (2½) திரைவஞ்ச இருவினைகள் நரையங்க மலமழிய சிவகங்கை தனில்முழுகி விளையாடிச் சிவம்வந்து குதிகொளக வடிவுன்றன் வடிவமென திகழண்டர் முநிவர்கண மயன்மாலும் அரன்மைந்த னெனகளிறு முகனெம்பி யெனமகிழ அடியென்க ணளிபரவ மயிலேறி அயில்கொண்டு திருநடன மெனதந்தை யுடன்மருவி அருமந்த பொருளையினி யருள்வாயே

378. திரிபுரம் அதனை

ராகம் : தர்பாரி கானடா மிஸ்ரசாபு (3½) திரிபுர மதனை யொருநொடி யதனி லெரிசெய்த ருளிய சிவன்வாழ்வே சினமுடை யசுரர் மனமது வெருவ மயிலது முடுகி விடுவோனே பருவரை யதனை யுருவிட எறியு மறுமுக முடைய வடிவேலா பசலையொ டணையு மிளமுலை மகளை மதன்விடு பகழி தொடலாமோ

377. தவநெறி தவறிய

ராகம் : ஆபோகி தாளம் : சதுச்ர துருவம் (14) தவநெறி தவறிய குருடுகள் தலைபறி கதறிய பரபாதத் தருமிகள் கருமிகள் வெகுவித சமயிக ளவரொடு சருவாநின் றவனிவ னுவனுட னவளிவ ளுவளது இதுவுது வெனுமாறற் றருவுரு வொழிதரு வுருவுடை யதுபதி தமியனு முணர்வேனோ குவலய முழுவதும் மதிர்பட வடகுவ டிடிபட வுரகேசன் கொடுமுடி பலநெரி தரநெடு முதுகுரை கடல்புனல் வறிதாகத் துவல்கொடு முறையிடு சுரர்பதி துயரது கெடநிசி சரர்சேனை துகளெழ நடநவில் மரகத துரகதம் வரவல பெருமாளே.

376. தலைவலய

ராகம் : பிலஹரி அங்க தாளம் 2½ + 1½ + 1 (5) தலைவலய போகமுஞ் சலனமிகு மோகமுந் தவறுதரு காமமுங் கனல்போலுந் தணிவரிய கோபமுந் துணிவரிய லோபமுஞ் சமயவெகு ரூபமும் பிறிதேதும் அலமலமெ னாஎழுந் தவர்களநு பூதிகொண் டறியுமொரு காரணந் தனைநாடா ததிமதபு ராணமுஞ் சுருதிகளு மாகிநின் றபரிமித மாய்விளம் புவதோதான்

375. தரணிமிசை

ராகம் : அமிர்தவர்ஷிணி சதுஸ்ர த்ருவம் கண்ட நடை தரணிமிசை அனையினிட வுந்தியின் வந்துகுந் துளிபயறு கழலினிய அண்டமுங் கொண்டதின் தசையுதிர நிணநிறைய அங்கமுந் தங்கவொன் பதுவாயுந் தருகரமொ டினியபத முங்கொடங் கொன்பதும் பெருகியொரு பதினவனி வந்துகண் டன்புடன் தநயனென நடைபழகி மங்கைதன் சிங்கியின் வசமாகித் திரிகியுடல் வளையநடை தண்டுடன் சென்றுபின் கிடையெனவு மருவிமனை முந்திவந் தந்தகன் சிதறுவுயிர் பிணமெனவெ மைந்தரும் பந்துவும் அயர்வாகிச் செடமிதனை யெடுமெடுமி னென்றுகொண் டன்புடன் சுடலைமிசை யெரியினிட வெந்துபின் சிந்திடுஞ் செனனமிது தவிரஇரு தண்டையுங் கொண்டபைங் கழல்தாராய்

374. தத்தனமும் அடிமை

ராகம் : சுத்த சாவேரி தாளம் : ஆதி தத்த னமுமடிமை சுற்ற மொடுபுதல்வர் தக்க மனையினமு மனைவாழ்வுந் தப்பு நிலைமையணு கைக்கு வரவிரகு தைக்கு மயல்நினைவு குறுகாமுன் பத்தி யுடனுருகி நித்த முனதடிகள் பற்று மருள்நினைவு தருவாயே பத்து முடியுருளு வித்த பகழியினர் பச்சை நிறமுகிலின் மருகோனே

373. தசையும் உதிரமும்

ராகம் : பாகேஸ்ரீ அங்கதாளம் ( 7½) 1½ + 2 + 2 + 2 தசையு முதிரமு நிணமொடு செருமிய கரும கிருமிக ளொழுகிய பழகிய சடல வுடல்கடை சுடலையி லிடுசிறு குடில்பேணுஞ் சகல கருமிகள் சருவிய சமயிகள் சரியை கிரியைகள் தவமெனு மவர்சிலர் சவலை யறிவினர் நெறியினை விடஇனி யடியேனுக் கிசைய இதுபொரு ளெனஅறி வுறவொரு வசன முறஇரு வினையற மலமற இரவு பகலற எனதற நினதற அநுபூதி இனிமை தருமொரு தனிமையை மறைகளின் இறுதி யறுதியி டவரிய பெறுதியை இருமை யொருமையில் பெருமையை வெளிபட மொழிவாயே

372. ஞானா விபூஷணி

ராகம் : கானடா அங்க தாளம் 2½ + 2 + 2 + 2 (8½) ஞானாவி பூஷணி காரணி காரணி காமாவி மோகினி வாகினி யாமளை மாமாயி பார்வதி தேவிகு ணாதரி உமையாள்தன் நாதாக்ரு பாகர தேசிகர் தேசிக வேதாக மேயருள் தேவர்கள் தேவந லீசாச டாபர மேசர்சர் வேசுரி முருகோனே தேனார்மொ ழீவளி நாயகி நாயக வானாடு ளோர்தொழு மாமயில் வாகன சேணாளு மானின்ம னோகர மாகிய மணவாளா சீர்பாத சேகர னாகவு நாயினன் மோகாவி காரவி டாய்கெட ஓடவெ சீராக வேகலை யாலுனை ஓதவும் அருள்வாயே

371. செழுந்தாது

ராகம் : சுத்தசாவேரி அங்கதாளம் 1½ + 1½ + 2½ (5½) செழுந்தாது பார்மாது மரும்பாதி ரூபோடு சிறந்தியாதி லூமாசை யொழியாத திறம்பூத வேதாள னரும்பாவ மேகோடி செயுங்காய நோயாள னரகேழில் விழுந்தாழ வேமூழ்க இடுங்காலன் மேயாவி விடுங்கால மே நாயென் வினைபாவம் விரைந்தேக வேவாசி துரந்தோடி யேஞான விளம்போசை யேபேசி வரவேணும்

370. சூதின் உணவாசை

ராகம் : வாசஸ்பதி கண்டசாபு 1½ + 1 (2½) சூதினுண வாசைதனி லேசுழலு மீனதென தூசுவழ கானவடி வதனாலே சூதமுட னேருமென மாதர்நசை தேடுபொரு ளாசைதமி லேசுழல வருகாலன் ஆதிவிதி யோடுபிற ழாதவகை தேடியென தாவிதனை யேகுறுகி வருபோது ஆதிமுரு காதிமுரு காதிமுரு காஎனவு மாதிமுரு காநினைவு தருவாயே

369. சுருதி வெகுமுக

ராகம் : குந்தலவராளி அங்கதாளம் 1½ + 1½ + 1 + 1½ + 2 (7½) சுருதி வெகுமுகபு ராண கோடிகள் சரியை கிரியைமக யோக மோகிகள் துரித பரசமய பேத வாதிகள் என்றுமோடித் தொடர வுணரஅரி தாய தூரிய பொருளை யணுகியநு போக மானவை தொலைய இனியவொரு ஸ்வாமி யாகிய நின்ப்ரகாசங் கருதி யுருகியவி ரோதி யாயருள் பெருகு பரமசுக மாம கோததி கருணை யடியரொடு கூடியாடிம கிழ்ந்துநீபக் கனக மணிவயிர நூபு ராரிய கிரண சரண அபி ராம கோமள கமல யுகளமற வாது பாடநி னைந்திடாதோ

368. சுட்டது போலாசை

ராகம் : ஹிந்தோளம் தாளம் : சங்கீர்ணசாபு 3 + 1½ (4½) சுட்டதுபோ லாசை விட்டுலகா சார துக்கமிலா ஞான சுகமேவிச் சொற்கரணா தீத நிற்குணமூ டாடு சுத்தநிரா தார வெளிகாண மொட்டலர்வா ரீச சக்ரசடா தார முட்டவுமீ தேறி மதிமீதாய் முப்பதுமா றாறு முப்பதும்வே றான முத்திரையா மோன மடைவேனோ

367. சீதமலம் வெப்பு

ராகம் : பீம்ப்ளாஸ் தாளம் : ஆதி சீதமலம் வெப்பு வாதமிகு பித்த மானபிணி சுற்றி யுடலூடே சேருமுயிர் தப்பி யேகும்வண மிக்க தீதுவிளை விக்க வருபோதில் தாதையொடு மக்கள் நீதியொடு துக்க சாகரம தற்கு ளழியாமுன் தாரணி தனக்கு ளாரண முரைத்த தாள்தர நினைத்து வரவேணும்

366. சிவஞான புண்டரிக

ராகம் : கல்யாணி கண்டசாபு (2½) சிவஞான புண்டரிக மலர்மாது டன்கலவி சிவபோக மன்பருக அறியாமற் செகமீது ழன்றுமல வடிவாயி ருந்துபொது திகழ்மாதர் பின்செருமி யழிவேனோ தவமாத வங்கள்பயில் அடியார்க ணங்களொடு தயவாய்ம கிழ்ந்துதினம் விளையாடத் தமியேன்ம லங்களிரு வினைநோயி டிந்தலற ததிநாளும் வந்ததென்முன் வரவேணும்

365. சாங்கரி பாடியிட

ராகம் : வாசஸ்பதி தாளம் : சங்கீர்ணசாபு 2 + 1½ + 1 (4½) சாங்கரி பாடியிட வோங்கிய ஞானசுக தாண்டவ மாடியவர் வடிவான சாந்தம தீதமுணர் கூந்தம சாதியவர் தாங்களு ஞானமுற வடியேனுந் தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு தோன்றிய சோதியொடு சிவயோகந் தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொடு சோம்பினில் வாழும்வகை அருளாதோ

364. சலமலம் அசுத்த

ராகம் : குந்தலவராளி அங்கதாளம் (5½) 4 + 1½ சலமல மசுத்த மிக்க தசைகுரு தியத்தி மொய்த்த தடியுடல் தனக்கு ளுற்று மிகுமாயம் சகலமு மியற்றி மத்த மிகுமிரு தடக்கை யத்தி தனிலுரு மிகுத்து மக்க ளொடுதாரம் கலனணி துகிற்கள் கற்பி னொடுகுல மனைத்து முற்றி கருவழி யவத்தி லுற்று மகிழ்வாகிக் கலைபல பிடித்து நித்த மலைபடு மநர்த்த முற்றி கடுவினை தனக்குள் நிற்ப தொழியாதோ

363. சருவிய சாத்திர

ராகம் : ஆனந்த பைரவி அங்க தாளம் (7½) 3 + 1½ + 3 சருவிய சாத்திரத் திரளான சடுதிக ழாஸ்பதத் தமையாத அருமறை யாற்பெறற் கரிதாய அனிதய வார்த்தையைப் பெறுவேனோ நிருதரை மூக்கறுத் தெழுபார நெடுதிரை யார்ப்பெழப் பொருதோனே பொருளடி யாற்பெறக் கவிபாடும் புலவரு சாத்துணைப் பெருமாளே.

362. சமய பத்தி

ராகம் : சாரங்கா அங்கதாளம் (1½ + 2 + 2 + 3 (8½) சமய பத்தி வ்ருதாத்தனை நினையாதே சரண பத்ம சிவார்ச்சனை தனைநாடி அமைய சற்குரு சாத்திர மொழிநூலால் அருளெ னக்கினி மேற்றுணை தருவாயே உமைமுலைத்தரு பாற்கொடு அருள்கூறி உரிய மெய்த்தவ மாக்கிந லுபதேசத் தமிழ்த னைக்கரை காட்டிய திறலோனே சமண ரைக்கழு வேற்றிய பெருமாளே.

361. சந்தம் புனைந்து

ராகம் : அமிர்தவர்ஷிணி தாளம் : ஆதி சந்தம் புனைந்து சந்தஞ் சிறந்த தண்கொங் கைவஞ்சி மனையாளுந் தஞ்சம் பயின்று கொஞ்சுஞ் சதங்கை தங்கும் பதங்க ளிளைஞோரும் எந்தன் தனங்க ளென்றென்று நெஞ்சி லென்றும் புகழ்ந்து மிகவாழும் இன்பங் களைந்து துன்பங்கள் மங்க இன்றுன் பதங்கள் தரவேணும்

360. கொடிய மதவேள்

ராகம் : வாசஸ்பதி அங்க தாளம் (7½) 2½ + 2 + 3 கொடியமத வேள்கைக் கணையாலே குரைகணெடு நீலக் கடலாலே நெடியபுகழ் சோலைக் குயிலாலே நிலைமைகெடு மானைத் தழுவாயே கடியரவு பூணர்க் கினியோனே கலைகள்தெரி மாமெய்ப் புலவோனே அடியவர்கள் நேசத் துறைவேலா அறுமுகவி நோதப் பெருமாளே.

359. குருதி தோலினால்

ராகம் : அடாணா தாளம் : அங்கதாளம் 1½ +1½ + 2½ (5½) குருதி தோலி னால்மேவு குடிலி லேத மாமாவி குலைய ஏம னாலேவி விடுகாலன் கொடிய பாச மோர்சூல படையி னோடு கூசாத கொடுமை நோய்கொ டேகோலி யெதிராமுன் பருதி சோமன் வானாடர் படியு ளோர்கள் பாலாழி பயமு றாமல் வேலேவு மிளையோனே பழுது றாத பாவாண ரெழுதொ ணாத தோள்வீர பரிவி னோடு தாள்பாட அருள்தாராய்

358. குகையில் நவநாதரும்

ராகம் : பெஹாக் அங்க தாளம் (7) 2½ + 1½ + 1½ + 1½ குகையில்நவ நாத ருஞ்சி றந்த முகைவனச சாத னுந்த யங்கு குணமுமசு ரேச ருந்த ரங்க முரல்வேதக் குரகதபு ராரி யும்ப்ர சண்ட மரகதமு ராரி யுஞ்செ யங்கொள் குலிசகைவ லாரி யுங்கொ டுங்க ணறநூலும் அகலியபு ராண மும்ப்ர பஞ்ச சகலகலை நூல்க ளும்ப ரந்த அருமறைய நேக முங்கு விந்தும் அறியாத அறிவுமறி யாமை யுங்க டந்த அறிவுதிரு மேனி யென்று ணர்ந்துன் அருணசர ணார விந்த மென்று அடைவேனோ

357. காதி மோதி

ராகம் : சங்கராபரணம் தாளம் : 1½ + 1½ + 2½ + 2 + 3 (10½) காதி மோதி வாதாடு நூல்கற் றிடுவோருங் காசு தேடி யீயாமல் வாழப் பெறுவோரும் மாதுபாகர் வாழ்வே யெனாநெக் குருகாரும் மாறி லாத மாகால னூர்புக் கலைவாரே நாத ரூப மாநாத ராகத் துறைவோனே நாக லோக மீரேழு பாருக் குரியோனே தீதி லாத வேல்வீர சேவற் கொடியோனே தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே.

356. கவடு கோத்தெழு

ராகம் : பாகேஸ்வரி தாளம் : மிஸ்ர அட 3½ + 3½ (18) கவடு கோத்தெழு முவரி மாத்திறல் காய்வேல் பாடே னாடேன் வீடா னதுகூட கருணை கூர்ப்பன கழல்க ளார்ப்பன கால்மேல் வீழேன் வீழ்வார் கால்மீ தினும்வீழேன் தவிடி னார்ப்பத மெனினு மேற்பவர் தாழா தீயேன் வாழா தேசா வதுசாலத் தரமு மோக்ஷமு மினியெ னாக்கைச தாவா மாறே நீதா னாதா புரிவாயே

355. கருப்பையில்

ராகம் : ஆரபி சங்கீர்ண த்ரிபுடை கருப்பை யிற்சுக் கிலத் துலைத்துற் பவித்து மறுகாதே கபட்ட சட்டர்க் கிதத்த சித்ரத் தமிழ்க்க ளுரையாதே விருப்ப முற்றுத் துதித்தெ னைப்பற் றெனக்க ருதுநீயே வெளிப்ப டப்பற் றிடப்ப டுத்தத் தருக்கி மகிழ்வோனே பருப்ப தத்தைத் தொளைத்த சத்திப் படைச்ச மரவேளே பணிக்கு லத்தைக் கவர்ப்ப தத்துக் களித்த மயிலோனே செருப்பு றத்துச் சினத்தை முற்றப் பரப்பு மிசையோனே தினைப்பு னத்துக் குறத்தி யைக்கைப் பிடித்த பெருமாளே.

354. கருப்பற்றூறி

ராகம் : நடபைரவி தாளம் : திச்ர ஏகம் (3) கருப்பற் றூறிப் பிறவாதே கனக்கப் பாடுற் றுழலாதே திருப்பொற் பாதத் தநுபூதி சிறக்கப் பாலித் தருள்வாயே பரப்பற் றாருக் குரியோனே பரத்தப் பாலுக் கணியோனே திருக்கைச் சேவற் கொடியோனே செகத்திற் சோதிப் பெருமாளே.

353. கடலை பயறொடு

ராகம் : பெஹாக் தாளம் : 1½ + 2 + 4 கடலை பயறொடு துவரையெ ளவல்பொரி சுகியன் வடைகனல் கதலியி னமுதொடு கனியு முதுபல கனிவகை நலமிவை யினிதாகக் கடல்கொள் புவிமுதல் துளிர்வொடு வளமுற அமுது துதிகையில் மனமது களிபெற கருணை யுடனளி திருவருள் மகிழ்வுற நெடிதான குடகு வயிறினி லடைவிடு மதகரி பிறகு வருமொரு முருகசண் முகவென குவிய இருகர மலர்விழி புனலொடு பணியாமற் கொடிய நெடியன அதிவினை துயர்கொடு வறுமை சிறுமையி னலைவுட னரிவையர் குழியில் முழுகியு மழுகியு முழல்வகை யொழியாதோ

352. ஓது முத்தமிழ்

ராகம் : சாவேரி அங்கதாளம் 1½ + 2 + 2 + 2½ (8) ஓது முத்தமிழ் தேராவ்ரு தாவனை வேத னைப்படு காமாவி காரனை ஊன முற்றுழல் ஆபாச ஈனனை அந்தர்யாமி யோக மற்றுழல் ஆசாப சாசனை மோக முற்றிய மோடாதி மோடனை ஊதி யத்தவம் நாடாத கேடனை அன்றிலாதி பாத கக்கொலை யேசூழ்க பாடனை நீதி சற்றுமி லாகீத நாடனை பாவி யர்க்குளெ லாமாது ரோகனை மண்ணின்மீதில் பாடு பட்டலை மாகோப லோபனை வீடு பட்டழி கோமாள வீணனை பாச சிக்கினில் வாழ்வேனை யாளுவ தெந்தநாளோ

351. ஒழு கூனிரத்தம்

ராகம் : மணிரங்கு தாளம் : ஆதி ஒழுகூ னிரத்த மொடுதோ லுடுத்தி உயர்கால் கரத்தி னுருவாகி ஒருதாய் வயிற்றி னிடையே யுதித்து உழல்மாய மிக்கு வருகாயம் பழசா யிரைப்பொ டிளையா விருத்த பரிதாப முற்று மடியாமுன் பரிவா லுளத்தில் முருகா எனச்சொல் பகர்வாழ் வெனக்கு மருள்வாயே

350. ஏட்டிலே

Image
ராகம் : காவடி சிந்து தாளம் : மிஸ்ர சாபு 1½ + 2 (3½) ஏட்டி லேவரை பாட்டி லேசில நீட்டி லேயினி தென்றுதேடி ஈட்டு மாபொருள் பாத்து ணாதிக லேற்ற மானகு லங்கள்பேசிக் காட்டி லேயியல் நாட்டி லேபயில் வீட்டி லேஉல கங்களேசக் காக்கை நாய்நரி பேய்க்கு ழாமுண யாக்கை மாய்வதொ ழிந்திடாதோ

349. என் பந்த வினை

ராகம் : பூர்வி கல்யாணி தாளம் : மிஸ்ர ஜம்பை (10) என்பந்த வினைத்தொடர் போக்கிவி சையமாகி இன்பந்தனை யுற்றும காப்ரிய மதுவாகி அன்புந்திய பொற்கிணி பாற்கட லமுதான அந்தந்தனி லிச்சைகொ ளாற்பத மருள்வாயே முன்புந்தி நினைத்துரு வாற்சிறு வடிவாகி முன்திந்தி யெனப்பர தாத்துட னடமாடித் தம்பந்த மறத்தவ நோற்பவர் குறைதீரச் சம்பந்த னெனத்தமிழ் தேக்கிய பெருமாளே.

348. எழுபிறவி

ராகம் : கரஹரப்ரியா தாளம் : அங்கதாளம் (5½) 2½ + 1½ + 1½ எழுபிறவி நீர்நிலத்தி லிருவினைகள் வேர்பிடித்து இடர்முளைக ளேமுளைத்து வளர்மாயை எனுமுலவை யேபணைத்து விரககுழை யேகுழைத்து இருளிலைக ளேதழைத்து மிகநீளும் இழவுநனை யேபிடித்து மரணபழ மேபழுத்து இடியுமுடல் மாமரத்தி னருநீழல் இசையில்விழ ஆதபத்தி யழியுமுன மேயெனக்கு இனியதொரு போதகத்தை யருள்வாயே

347. எழுதரிய அறுமுகம் (விழையும் மனிதரை)

ராகம் : ஆனந்த பைரவி சதுச்ர மட்யம் கண்ட நடை (25) எழுதரிய அறுமுகமு மணிநுதலும் வயிரமிடை யிட்டுச் சமைந்தசெஞ் சுட்டிக் கலன்களுந் துங்கநீள்பன் னிருகருணை விழிமலரு மிலகுபதி னிருகுழையும் ரத்நக் குதம்பையும் பத்மக் கரங்களுஞ் செம்பொனூலும் மொழிபுகழு முடைமணியு மரைவடமு மடியிணையு முத்தச் சதங்கையுஞ் சித்ரச் சிகண்டியுஞ் செங்கைவேலும் முழுதுமழ கியகுமர கிரிகுமரி யுடனுருகு முக்கட் சிவன்பெருஞ் சற்புத்ர வும்பர்தந் தம்பிரானே. தொலைவில்பிற வியுமகல வொருமவுன பரமசுக சுத்தப் பெரும்பதஞ் சித்திக்க அன்புடன் சிந்தியாதோ

346. எதிரொருவர்

Image
ராகம் ஹம்சானந்தி அங்கதாளம் (18½) 2½ + 2½ + 2½ + 2½ + 2½ + 2½ + 1½ + 2 எதிரொருவ ரிலையுலகி லெனஅலகு சிலுகுவிரு திட்டுக்ரி யைக்கேயெ ழுந்துபாரின் இடையுழல்வ சுழலுவன சமயவித சகலகலை யெட்டெட்டு மெட்டாத மந்த்ரவாளால் விதிவழியி னுயிர்கவர வருகொடிய யமபடரை வெட்டித் துணித்தாண்மை கொண்டுநீபம் விளவினிள இலைதளவு குவளைகமழ் பவளநிற வெட்சித் திருத்தாள்வ ணங்குவேனோ

345. எட்டுடன் ஒரு

ராகம் : த்விஜாவந்தி தாளம் : ஆதி 2 களை எட்டுட னொருதொளை வாயா யதுபசு மட்கல மிருவினை தோயா மிகுபிணி யிட்டிடை செயவொரு போதா கிலுமுயிர் நிலையாக எப்படி யுயர்கதி நாமே றுவதென எட்பகி ரினுமிது வோரார் தமதம திச்சையி னிடருறு பேரா சைகொள்கட லதிலேவீழ் முட்டர்க ணெறியினில் வீழா தடலொடு முப்பதி னறுபதின் மேலா மறுவரு முற்றுத லறிவரு ஞானோ தயவொளி வெளியாக முக்குண மதுகெட நானா வெனவரு முத்திரை யழிதர ஆரா வமுதன முத்தமிழ் தெரிகனி வாயா லருளுவ தொருநாளே

344. ஊனேறெலும்பு

ராகம் : சங்கராபரணம் தாளம் : ஆதி ஊனே றெலும்பு சீசீ மலங்க ளோடே நரம்பு கசுமாலம் ஊழ்நோ யடைந்து மாசான மண்டு மூனோ டுழன்ற கடைநாயேன் நானா ரொடுங்க நானார் வணங்க நானார் மகிழ்ந்து உனையோத நானா ரிரங்க நானா ருணங்க நானார் நடந்து விழநானார்

343. ஊனுந் தசை

ராகம் சிந்து பைரவி தாளம் : ஆதி ஊனுந் தசையுடல் தானொன் பதுவழி யூருங் கருவழி யொருகோடி ஓதும் பலகலை கீதஞ் சகலமு மோரும் படியுன தருள்பாடி நானுன் திருவடி பேணும் படியிரு போதுங் கருணையில் மறவாதுன் நாமம் புகழ்பவர் பாதந் தொழஇனி நாடும் படியருள் புரிவாயே

342. உறவின் முறை

ராகம் : வலசி சதுஸ்ர துருவம் கண்ட நடை (35) உறவின்முறை கதறியழ ஊராரு மாசையற பறைதிமிலை முழவினிசை யாகாச மீதுமுற உலகிலுள பலரரிசி வாய்மீதி லேசொரியு மந்தநாளில் உனதுமுக கருணைமல ரோராறு மாறிருகை திரள்புயமு மெழில்பணிகொள் வார்காது நீள்விழியும் உபயபத மிசைகுலவு சீரேறு நூபுரமும் அந்தமார்பும் மறையறைய அமரர்தரு பூமாரி யேசொரிய மதுவொழுகு தரவில்மணி மீதேமு நூலொளிர மயிலின்மிசை யழகுபொலி யாளாய்மு னாரடியர் வந்துகூட மறலிபடை யமபுரமு மீதோட வேபொருது விருதுபல முறைமுறையி லேயூதி வாதுசெய்து மதலையொரு குதலையடி நாயேனை யாளஇஙன் வந்திடாயோ

341. உலகத்தினில்

ராகம் : ஆந்தோளிகா தாளம் : திச்ர த்ரிபுடை (7) உலகத்தினில் மாதரு மைந்தரும் உறுசுற்றமும் வாழ்வொடு றுங்கிளை உயர்துக்கமு மோடுற வென்றுற வருகாலன் உதிரத்துட னேசல மென்பொடு உறுதிப்பட வேவள ருங்குடில் உதிரக்கனல் மீதுற என்றனை யொழியாமுன் கலகக்கலை நூல்பல கொண்டெதிர் கதறிப்பத றாவுரை வென்றுயர் கயவர்க்குள னாய்வினை நெஞ்சொடு களிகூருங் கவலைப்புல மோடுற என்துயர் கழிவித்துன தாளிணை யன்பொடு கருதித்தொழும் வாழ்வது தந்திட நினைவாயே

340. இன மறை விதங்கள்

ராகம் : பூபாளம் அங்கதாளம் 1 + 1½ + 1½ + 1 (5) இனமறைவி தங்கள்கொஞ் சியசிறுச தங்கைகிண் கிணியிலகு தண்டையம் புண்டரீகம் எனதுமன பங்கயங் குவளைகுர வம்புனைந் திரவுபகல் சந்ததஞ் சிந்தியாதோ உனதருளை யன்றியிங் கொருதுணையு மின்றிநின் றுளையுமொரு வஞ்சகன் பஞ்சபூத உடலதுசு மந்தலைந் துலகுதொறும் வந்துவந் துழலுமது துன்புகண் டன்புறாதோ

339. இருந்த வீடும்

ராகம் : வசந்தா தாளம் : சதுச்ர அட (12) இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவரு முறுகேளும் இசைந்த வூரும் பெண்டிரு மிளமையும் வளமேவும் விரிந்த நாடுங் குன்றமு நிலையென மகிழாதே விளங்கு தீபங் கொண்டுனை வழிபட அருள்வாயே குருந்தி லேறுங் கொண்டலின் வடிவினன் மருகோனே குரங்கு லாவுங் குன்றுறை குறமகள் மணவாளா திருந்த வேதந் தண்டமிழ் தெரிதரு புலவோனே சிவந்த காலுந் தண்டையு மழகிய பெருமாளே.

338. இருநோய் மலம்

ராகம் : சிந்துபைரவி அங்கதாளம் (5) 1 + 1½ + 1½ + 1 இருநோய்ம லத்தைசிவ வொளியால்மி ரட்டியெனை யினிதாவ ழைத்தெனது முடிமேலே இணைதாள ளித்துனது மயில்மேலி ருத்தியொளி ரியல்வேல ளித்துமகி ழிருவோரும் ஒருவாகெ னக்கயிலை யிறையோன ளித்தருளு மொளிர்வேத கற்பகந லிளையோனே ஒளிர்மாம றைத்தொகுதி சுரர்பார்து தித்தருள உபதேசி கப்பதமு மருள்வாயே

337. இரவொடும் பகலே

ராகம் : தர்பாரி கானடா அங்க தாளம் (7½) 1½ + 2 + 2 + 2 இரவொ டும்பக லேமா றாதே அநுதி னந்துய ரோயா தேயே யெரியு முந்தியி னாலே மாலே பெரிதாகி இரைகொ ளும்படி யூடே பாடே மிகுதி கொண்டொழி யாதே வாதே யிடைக ளின்சில நாளே போயே வயதாகி நரைக ளும்பெரி தாயே போயே கிழவ னென்றொரு பேரே சார்வே நடைக ளும்பல தாறே மாறே விழலாகி நயன முந்தெரி யாதே போனால் விடிவ தென்றடி யேனே தானே நடன குஞ்சித வீடே கூடா தழிவேனோ

336. இத்தரணி மீதில்

ராகம் : அசாவேரி ஆதி (எடுப்பு 3/4 இடம்) இத்தரணி மீதிற் பிறவாதே எத்தரொடு கூடிக் கலவாதே முத்தமிழை யோதித் தளராதே முத்தியடி யேனுக் கருள்வாயே தத்துவமெய்ஞ் ஞானக் குருநாதா சத்தசொரு பாபுத் தமுதோனே நித்தியக்ரு தாநற் பெருவாழ்வே நிர்த்தஜெக ஜோதிப் பெருமாளே.

335. இசைந்த ஏறும்

ராகம் : ரீதிகௌளை தாளம் : சதுச்ர அட (12) இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும் எழில்நீறும் இலங்கு நூலும் புலியத ளாடையு மழுமானும் அசைந்த தோடுஞ் சிரமணி மாலையு முடிமீதே அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய குருநாதா உசந்த சூரன் கிளையுடன் வேரற முனிவோனே உகந்த பாசங் கயிறொடு தூதுவர் நலியாதே அசந்த போதென் துயர்கெட மாமயில் வரவேணும் அமைந்த வேலும் புயமிசை மேவிய பெருமாளே.

334. ஆனாத ஞான புத்தி

Image
ராகம் : சுருட்டி அங்கதாளம் ஆனாத ஞான புத்தி யைக்கொ டுத்ததும் ஆராயு நூல்க ளிற்க ருத்த ளித்ததும் ஆதேச வாழ்வி னிற்ப்ர மித்தி ளைத்துயி ரழியாதே ஆசாப யோதி யைக்க டக்க விட்டதும் வாசாம கோச ரத்தி ருத்து வித்ததும் ஆபாத னேன்மி கப்ர சித்தி பெற்றினி துலகேழும் யானாக நாம அற்பு தத்தி ருப்புகழ் தேனூற வோதி யெத்தி சைப்பு றத்தினும் ஏடேவு ராஜ தத்தி னைப்ப ணித்ததும் இடராழி ஏறாத மாம லத்ர யக்கு ணத்ரய நானாவி கார புற்பு தப்பி றப்பற ஏதேம மாயெ னக்க நுக்ர கித்ததும் மறவேனே