178. காலனிடத்து


ராகம் : சங்கராபரணம்தாளம்: திச்ர ஏகம் (3)
காலனிடத் தணுகாதே
காசினியிற் பிறவாதே
சீலஅகத்தியஞான
தேனமுதைத்தருவாயே
மாலயனுக்கரியானே
மாதவரைப்பிரியானே
நாலுமறைப் பொருளானே
நாககிரிப்பெருமாளே.

Learn The Song




Paraphrase

திருச்செங்கோட்டு தளத்தில் அகத்தியருக்கு உபதேசித்தது போன்று தனக்கும் ஞானோபதேசம் தரவேண்டும் என வேண்டுகிறார்.

காலன் இடத்து அணுகாதே (kAlanidath thaNugAdhE) : In order that I never approach Yama's abode,

காசினியில் பிறவாதே (kAsiniyiR piRavAdhE) : and in order that I never take another birth in this world, காசினி (kasini) : earth;

சீல அகத்திய ஞான (seela agaththiya nyAna) : (please gift me) the Great Knowledge that You preached to the virtuous sage Agasthiyar / the True Knowledge that is acquired by those following righteous conduct; நற்குணம் வாய்ந்த அகத்திய முநிவருக்கு நீ அருளிய ஞானோபதேசம் என்ற,
அகத்தியம் என்றால் அவசியம் என்றும் பொருள். இதற்கு இப்படியும் உரை சொல்லலாம்: இன்றியமையாத ஒழுக்கத்தால் உண்டாகும் மெய்யறிவால் விளைகின்ற ஞானோபதேசத்தை,

தேன் அமுதை தருவாயே (thEnamudhai tharuvAyE) : Kindly grant that nectar of (sivayoga) to me.

மால் அயனுக்கு அரியோனே (mAlayanukku ariyAnE) : You are beyond the reach of Vishnu and BrahmA!

மா தவரை பிரியானே (mAthavaraip piriyAnE) : You never stay away great sages who have done penance.

நாலு மறை பொருளானே (nAlu maRaip poruLAnE) : You are the substance of the all four VEdAs (Rik, Yajur, SAma and AtharvaNa), நான்கு வேதங்களின் மறை பொருளாக உட்பொருளாக இருப்பவனே

நாக கிரி பெருமாளே. (nAgagirip perumALE.) : Your abode is at NAgagiri (known as ThiruchchengkOdu), Oh Great One!

திருச்செங்கோடு என்றால் செந்நிற மலை. இதற்கு புராணக்கதைகளின் படி ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் நடந்த யார் பெரியவர் என்ற போட்டி தான் காரணம். பந்தயத்தின்படி ஆதிசேஷன் தன் படங்களால் மேரு மலையை அழுத்தி பிடித்து கொள்ள, வாயு தன் பலத்தால் மலையை விடுவிக்க முயற்சிக்க, மலையின் முகட்டுப்பகுதிகள் பூமியின் பல இடங்களிலும் விழுந்தன. அதில் ஒன்றே திருச்செங்கோட்டு மலை. ஆதிசேஷனுக்கு ஏற்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் கொட்டியதால் மலை செந்நிறமானது.

சிவனும் சக்தியும் இணைந்த திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் மூலவர் பாகம்பிரியாளுடன் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் நின்ற திருமேனியில் பாதி புடவை - பாதி வேஷ்டி அலங்காரத்தில் காட்சி தருகிறார். செங்கோட்டு வேலவர் என்ற பெயரில் முருகன் தனிச் சந்நிதிகொண்டு அருள்பாலிக்கிறார்.

Comments

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே