வேல்மாறல் பாராயணம்

You may read the Vel Vaguppu post for the meaning in English. Here's the Tamil explanation of the same.

வேல் மாறல் மகா மந்திரமாகும். அருணகிரிநாத சுவாமிகள் பாடியருளிய சீர்பாத வகுப்பு, தேவேந்திர சங்க வகுப்பு, வேல் வகுப்பு என்ற திருவகுப்புகள் உடல் நோயையும், உயிர்ப்பிணியையும் நீக்கவல்ல மணி, மந்திர, ஒளஷதம் போன்றதாகும். அவை:
1. சீர்பாத வகுப்பு – மணி வகுப்பு,
2. தேவேந்திர சங்க வகுப்பு - மந்திர வகுப்பு,
3. வேல் வகுப்பு - ஔஷத (மருந்து) வகுப்பு.

முருகப் பெருமானுக்கே உரிய ஞானசக்தி- வேலாயுதம். வேல் என்ற சொல்லுக்கு ‘வெல்’ என்பது மூலம். வெல்லும் தன்மையுடையது வேல். இந்த வேல் வெளிப்பகை மற்றும் உட்பகைகளான வினைகளை வேரோடு அழிக்கும். அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்துள்ள ‘வேல் வகுப்பு’ உடல் நோய், மன நோய், உயிர் நோய் ஆகிய மூவகைப் பிணிகளுக்கும் உற்ற மருந்தாகி, அவற்றை உடனே தீர்த்தருளவல்ல ஆற்றல் படைத்தது’ என்று உறுதி கூறிய வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் வேலுக்கு உகந்த வழிபாடாக வேல்மாறல் பாராயணத்தை தொகுத்துள்ளார். வேல்மாறல் பாராயணம் மன ஒருமைப்பாடு என்ற ஏகாக்ர சித்தத்தை உண்டாக்கும் வல்லமை உடையது. வேல்மாறலை பக்தி, சிரத்தை, மன ஒருமைப்பாட்டுடன் குறைந்தது ஒரு மண்டல காலம் அதாவது 48 நாட்கள் விடாமல் தொடர்ந்து தினமும் காலையோ அல்லது மாலையோ ஒரு முறையாவது பாராயணம் செய்து முருகப்பெருமான் திருவருளைப்பெறுவோமாக.

*****************

பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்த நகை கறுத்த குழல்
சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்.

ஆழ்ந்த, அகன்ற, நுண்ணியதாய் இருக்கும் வேல், கூரியதாய் நீண்டு ஒளிரும் வள்ளியம்மையின் கண்ணுக்கு ஒப்பாகும். (வள்ளிப் பிராட்டியாரின் கடைக்கண் நோக்கால் விளையும் பயன்களை வேல் அருளும் என்பது குறிப்பாகும்.)

The wide, deep and sharp 'Vel' or Spear is like the eyes of the brave hunter lass Valli who has heavy bosoms, slender waist, gleaming white teeth, black tresses, and red lips.

பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள்
பதத்(து) இடு(ம்) நிகளத்துமுளை தெறிக்கவரம் ஆகும்

பனைமரம் போல் நீண்ட துதிக்கை, சித்திரங்களோடு விளங்கும் அலங்காரத் துணியை அணிந்துள்ள முகம், கன்னங்களிலிருந்து ஒழுகும் மதநீர்ப் பெருக்கம் ஆகியவற்றோடு, வெண்மை நிறம் வாய்ந்த யானையாகத் திகழும் ஐராவதத்தின் அதிபதியான இந்திரனது கால்களில் பூட்டியிருந்த விலங்கில்… அதனைப் பூட்டுவதற்கு ஆதாரமாக இருந்த ஆணியைத் தெறிக்கச்செய்யும் வேல் ஆற்றல் மிக்க அரமாகும். தேவர்கள் அஞ்ஞானத்தால் தக்கன் வேள்வியில் கலந்து கொண்டு சம்பாதித்த சிவ அபராதத்தை வேற்படை என்னும் ஞான சக்தி நீக்கி விடுதலை அளித்தது.

Murugan's vel is the saw that cuts through the locks on the chain that Surapadman put on the ankles of Indra whose vehicle is the white Airavata elephant with a trunk that is suspended like a palm tree, with its forehead caparisoned with decorative clothes and with cheeks down which flow the masth water;

பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
இசைக்(கு) உருகி வரைக்குகையை இடித்துவழி காணும்

சிறந்த ஞானத்துடன் பழைமை வாய்ந்த மதுரைத் தமிழ்ச் சங்கப் பலகையில் விளங்கிய ஒப்பற்ற நக்கீரர் இசைத்த திருமுருகாற்றுப்படைக்கு உருகி, அவர் அடைபட்டிருந்த குகையை இடித்துத் தள்ளி அவரை வேல் வெளியேற்றும்.

Murugan's vel pounded the Tirupparangiri mountain and rescued Nakkeeran and other poets from the cave (where they were imprisoned by a ghost called Karkimukhi) after being touched by the musical renderings of the peerless Nakkeeran, the head of the ancient Tamil Sangam board which is renowned for its knowledge;

பசித்தலகை முசித்தழுது முறைப் படுதல் ஒழித்தவுணர்
உரத்துதிர நிணத்தசைகள் புசிக்க அருள் நேரும்

பசியினால் துன்பமுற்றுப் பேய்கள் அங்கங்களை விசைத்தும், விதிர்த்தும், முடக்கியும், உதறியும் புலம்பி உணவு வேண்டி அழுவதைத் தவிர்த்து, அசுரர்களின் வளமிக்க ரத்தத்தையும் சதைகளையும் அவை உண்டு களிக்குமாறு வேல் அருளும்.

The Spear mercifully stops the hungry ghosts from crying aloud and complaining about the lack of food by giving them the blood-soaked fatty flesh of the asuras; ,

சுரர்க்கு(ம்) முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும்
அரி தனக்கும் நரர் தமக்கும் உறும் இடுக்கண் வினை சாடும்

தேவர்கள், முனிவர்கள், இந்திரன், பிரமன், திருமால், உலக மக்கள் ஆகியவர்களுக்கு நேரிடும் துன்பத்தையும், அதற்கு மூலகாரணமான பூர்வகர்ம வினைகளையும் வேல் தாக்கி அழிக்கும்.

The Spear destroys the evils of karma that cause grief to celestials, sages, Indra, Brahma, Vishnu and the humans; .

சுடர்ப்பரிதி ஒளிப்பநில ஒழுக்குமதி ஒளிப்ப அலை
அடக்குதழல் ஒளிப்ப ஒளிர் ஒளிப்பிரபை வீசும்

ஒளிவிடும் சூரியன், குளிர்ந்த கிரணங்களை வீசும் சந்திரன், கடல் பொங்கிக் கரைகடந்து சென்று உலகத்தை அழிக்காதபடி அதனை அடக்கிக் கொண்டிருக்கும் வடவாமுகாக்கினி ஆகியவற்றை, ‘வேலின் ஒளிப் பிரபாவத்தின் முன் நம் ஒளி எம்மாத்திரம்’ என்று வெட்கப்பட்டு நாணி ஒளியச் செய்யும் வண்ணம், தனது பேரொளிச் சோதியை எங்கும் பிரகாசிக்கச் செய்யும் வேல்.

The Spear spreads the resplendence of Knowledge and makes the radiant sun, the cool moon with its cooling rays, and the vadavamukhagni that checks the seas from destroying the world hide themselves in shame;

துதிக்கும் அடியவர்க்கொருவர் கெடுக்க இடர் நினைக்கின்
அவர் குலத்தை முதல் அறக்களையும் எனக்கோர் துணை ஆகும்

தன்னைப் புகழ்ந்து போற்றும் அடியார்களை யாராவது கெடுக்க நினைத்து அவர்களுக்குத் துன்பம் இழைக்க மனதில் நினைத்த மாத்திரத்திலேயே, அந்த பகைவரது குலத்தையே வேருடன் அழித்துவிடும். எனக்கு ஒப்பற்றப் பெருந்துணையாகி வேல் அருள்பாலிக்கும் (ஆகவே, வேலை வணங்குவதையே வேலையாகக் கொண்டவர்களுக்கு மற்றவர்களால் எந்த விதத்திலும் துன்பம் அணுகாது.)

The Spear is the guardian who would destroy the entire clan of anybody who thinks of harming those who worship it.

சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்த பகை
அறுத்தெறிய உறுக்கி எழும் அறத்தை நிலை காணும்

சொற்களால் விவரிக்க முடியாத பெருமையுடைய முருகனது திருவடியைப் புகழ்ந்து போற்றும் திருப்புகழ்ப் பாக்களை ஓதுபவர்களிடம் நிகழ்கின்ற பகையை அழிக்க, வேல் கோபித்து ஆரவாரத்துடன் கிளம்பும்.

The Spear establishes dharma by ferociously uprooting those hostile to people who chant/recite the ineffably beautiful tiruppugazh songs;

தருக்கி நமன் முருக்கவரின் எருக்கு மதி தரித்த முடி
படைத்தவிறல் படைத்த இறை கழற்கு நிகர் ஆகும்

ஆர்ப்பாட்டத்துடன் அடியார்களின் உயிரைக் கவர யமன் வந்தால், எருக்கம்பூ மாலையையும் சந்திரனையும் சூடிய முடியுடைய சிவபெருமானின் பேராற்றல் மிக்க திருவடிக்கும் ஒப்பாக நின்று வேல் உதவும்.

The Spear is as praiseworthy as the auspicious feet of the victorious Lord Shiva who wears arka (erukkam) flower and the crescent moon on His tresses and who offers sanctuary to the devotees when Yama approaches them arrogantly to take away their lives;

தலத்தில் உள கணத்தொகுதி களிப்பின் உண வழைப்பதென
மலர்க் கமல கரத்தின் முனை விதிர்க்க வளை வாகும்

உலகத்தில் உள்ள எல்லா கணங்களும் பெருமகிழ்ச்சி பெறும் அளவுக்கு உணவளிக்க நேரிடும்போது, மலர்ந்த தாமரை மலருக்கு ஒப்பான முருகன் திருக்கரத்தில் இருந்தபடியே, அவர் அதன் நுனியை லேசாக அசைத்தவுடன், உணவுப் பொருட்களை வளைத்துக்கொண்டு சேர்த்துவிடும். (வேல் பசியைப் போக்கும்; வறுமையின்றி வாழ வைக்கும்; நமது கருத்தறிந்து முடிக்கும்; நாம் நினைப்பதையெல்லாம் நிறைவேற்றும்)

The Spear being in the Lord's lotus hands, makes an inviting gesture whenever the Lord moves His finger tips to invite the people under His patronage to partake food;

தனித்துவழி நடக்கும் என திடத்தும் ஒரு வலத்தும் இரு புறத்தும்
அருகடுத்திரவு பகற்றுணைய தாகும்

துணையின்றித் தனியாகச் செல்லும் எனது வலது இடது பக்கங்களிலும், முன், பின் பக்கங்களிலும் உடன் நின்று இரவு பகல் எப்போதும் வேல் துணையாக நின்றருளும்.

The Spear will be the unseen support to me during day and night, whenever I walk on a lonely road without anyone.

சலத்து வரும் அரக்கர் உடல் கொழுத்து வளர் பெருத்த குடர்
சிவத்ததொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும்

சினந்து வந்த அசுரர்களின் உடம்பில் கொழுத்துத் தடித்திருந்த பெரிய குடல்களைச் சிவந்த பூமாலை போல் தனது முடியில் ஆவலோடு வேல் சூடிக்கொள்ளும்.

The Spear wears with delight on its crown, a red garland of the fatty intestines of the fat asuras who charge angrily (in the battle field);.

திரைக் கடலை உடைத்து நிறை புனற்கடிது குடித்துடையும்
உடைப்படைய அடைத்துதிரம் நிறைத்து விளை யாடும்

அலைகளை வீசுகின்ற கடலில் உடைப்பு உண்டு பண்ணியும், அதில் நிறைந்துள்ள நீரை விரைவில் உருஞ்சிப் பருகி, வெற்றிடமாய் இருந்த கடல் பரப்பில் அவுணர்களின் இரத்தத்தை நீருக்குப் பதிலாக நிரப்பி விளையாடி நிற்கும்.

The Spear tears the wavy sea, closing the breach everywhere so that water is dammed; drinks it swiftly, and again fills it with the blood from the asuras and plays in it;.

திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்த சிறை முளைத்ததென
முகட்டின்இடை பறக்கஅற விசைத்ததிர ஓடும்

குலிசாயுதத்துடன் விளங்கும் இந்திரன், முன்னொரு காலத்தில் திசைகளில் உள்ள மலைகளிலிருந்து அறுத்துத் தள்ளிய இறக்கைகள் மீண்டும் அம்மலைகளிடம் முளைத்து விட்டனவோ என்று ஐயுறும்படி, அண்டத்தின் உச்சியிலே அளவிலா வேகத்துடன் எல்லா உலகங்களும் அதிர்ச்சியுற்று நடுங்கும்படி வேல் விரைந்து செல்லும். (வேலின் அளவிலா ஆற்றல் அநேக அதிசயம் வாய்ந்தது.)
பண்டை காலத்தில் மலைகள் அனைத்தும் சிறகுகளுடன் பறந்து உலகோருக்கு கேடு விளைத்து வந்தன. இதை அறிந்த இந்தரன், வஜ்ராயுத்தால் மலைகளின் சிறகுகளை அறுத்து எறிந்தான். அன்று முதல் மலைகளனைத்தும் நிலத்தில் அழுந்தி, 'பூதரம்' எனப் பெயர் பெற்றன. பின்பு முருகனுடைய வேற்படை அண்ட உச்சியில் அதிவேகத்தோடு பறந்தபோது, உலகெல்லாம் கிடுகிடு என அதிர்ந்தன. மீண்டும் மலைகளுக்கு சிறகுகள் முளைத்தனவோ என உலகோர் அஞ்சினர் என்கிறார்.

The Spear flies with infinite swiftness across the the crest of the cosmic sphere making the universe quiver and appear as if all the mountains in the eight directions had regenerated their wings that were cut once by Indra;
Once upon a time, all the mountains had wings and would fly haphazardly. Indra cut their wings with his vajrayudha. Thereafter the mountains fixed themselves to the ground. When the Lord's lance zipped fast across at incredible speed, the earth shook violently, making the mountains appear to have regained their wings and to have started flying once again!

சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத் தலைகள்
சிரித்தெயிறு கடித்துவிழி விழித்தலற மோதும்

சினம் கொண்டு அசுரர்கள் எதிர்த்த போர்க்களத்தில் அளவற்ற அறுப்பட்ட தலைகள் சிரிக்கும் படியாகவும், கண்களை உருட்டி விழித்துப் பார்க்கும்படியாகவும், வாய்கள் அலறும்படியாகவும் வேல் சாடும்.

The Spear smashes and beheads the asuras in the battle field, so that the severed heads laugh devilishly, grind their teeth, glare and scream.

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன்
என துளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே

திருத்தணிகையில் உயிர்களின் அக இருள் அகல ஞான சூரியனாகத் தோன்றி அருளும் ஒப்பற்றவனும், குறிஞ்சிக் கிழவனும், உயிருக்குயிராய் எனது உள்ளக் குகையில் உறைபவனும், கருணை உருக்கொண்டு ஆதிக்கு ஆதியாய் நிற்கும் முதல்வனுமான, திரோதான சக்தியாகிய மயிலைச் செலுத்தி நடத்தும் குகப்பெருமானின், ஞானமே உருக்கொண்ட திருவருட் சக்தியாகிய வேலே!

All these praiseworthy feats are those of the 'vel' in the hands of the One who rises (like the Sun of Knowledge) at TiruththaNi and is the Old Man of the Hill, who resides in my heart and whose vehicle is the peacock.

Comments

  1. அருமை 👌 மிக்க நன்றி

    ReplyDelete
  2. Wonderful translation. Thanks a lot.

    ReplyDelete
  3. மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  4. வேலும் மயிலும் சேவலும் துணை!
    நன்றி!

    ReplyDelete
  5. Thanks for writing this blog, You may also like the Murugan vel

    ReplyDelete
  6. Excellent translation🙏

    ReplyDelete
  7. Thank you so much for giving the meaning of Vel Maral in detail.

    ReplyDelete
  8. Thank you for this wonderful translation.

    ReplyDelete
  9. மிக நன்று! வரிக்கு வரி பொருள் விளக்க,அதை படித்து ஆனந்தம் கொண்டோம். நன்றி🙏

    ReplyDelete
  10. Nandri. Om muruga potri 🙏🙏🙏🙏

    ReplyDelete
  11. திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன்
    என துளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே

    துளத்தில்உறை this is correct Sir ?

    ReplyDelete
    Replies
    1. ஓம் முருகா

      Delete

Post a Comment

Popular posts from this blog

55. விறல் மாரன்

59. அவனிதனிலே