442. ஓல மறைகள்


ராகம் : ஹம்சானந்திஅங்கதாளம் (7½)
1½ + 1½ + 2½ + 2
ஓல மறைக ளறைகின்ற வொன்றது
மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர்
ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவரெவராலும்
ஓத வரிய துரியங் கடந்தது
போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும்
ஊனு முயிரு முழுதுங் கலந்தது சிவஞானம்
சால வுடைய தவர்கண்டு கொண்டது
மூல நிறைவு குறைவின்றி நின்றது
சாதி குலமு மிலதன்றி யன்பர்சொனவியோமஞ்
சாரு மநுப வரமைந்த மைந்தமெய்
வீடு பரம சுகசிந்து இந்த்ரிய
தாப சபல மறவந்து நின்கழல்பெறுவேனோ
வால குமர குககந்த குன்றெறி
வேல மயில எனவந்து கும்பிடு
வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர்களைவோனே
வாச களப வரதுங்க மங்கல
வீர கடக புயசிங்க சுந்தர
வாகை புனையும் ரணரங்க புங்கவவயலூரா
ஞால முதல்வி யிமயம் பயந்தமின்
நீலி கவுரி பரைமங்கை குண்டலி
நாளு மினிய கனியெங்க ளம்பிகைத்ரிபுராயி
நாத வடிவி யகிலம் பரந்தவ
ளாலி னுதர முளபைங் கரும்புவெ
ணாவ லரசு மனைவஞ்சி தந்தருள்பெருமாளே.

Learn The Song



Raga Hamsanandi (Janyam of 53rd mela Gamanashrama)

Arohanam: S R1 G3 M2 D2 N3 S    Avarohanam: S N3 D2 M2 G3 R1 S


Paraphrase

Supreme and infinite Consciousness or Brahman is inconceivable by our limited minds. We can try to understand by contemplaing on yeti.
yeti : yaha + iti means all this.
It can also be conceived through negation or neti.
neti : not this
The word infinity can be expressed as “not finite". We can understand a finite thing which has boundary but we cannot conceive infinity. So, we can say, “anything that is not finite is infinite. For example, everything has originated from Brahman means everything is Brahman, but Brahman is beyond everything. Everything is reflected in the consciousnes but consciousnes is eternal and independent.

பேரறிவின் உருவாய் சுடர் விடும் பரம்பொருளை விளக்க இன்னொரு பொருள் ஏதும் தேவைப்படாது. ஏனென்றால், அது தானாக சுடர் விடுகிறது. அதன் ஒளிக்கு அதுவே காரணம். அது பேரானந்தம் தரும் உண்மையான ஞான சொரூபம். 'இது இல்லை, இதுவும் இல்லை', (நேதி நேதி - பிரஹதாரண்யக உபநிடதம்) என்று ஒவ்வொன்றாக சிவத்தின் உண்மையான உருவம் இல்லை என்று கழித்துக்கட்டி, கடைசியில் மிஞ்சி இருப்பதான சகலத்திலும் நிறைந்திருக்கும் சிவம் என்ற பரம்பொருள் மட்டுமே.

ஓல மறைகள் அறைகின்ற ஒன்று அது (Ola maRaigaL aRaigindra ondru adhu) : It is the matchless one proclaimed by the VEdAs that loudly chant the ManthrA "OM". ஓம் என்று ஒலிக்கும் வேதங்களால் பேசப்பெறும் ஒப்பற்ற ஒன்று அது/ஓலமிடும் மறைகளால் ‘ஒப்பற்ற ஒன்று’ என்று உரைக்கப்படும் பரம்பொருள் அது.

மேலை வெளியில் ஒளிரும் பரஞ்சுடர் ( mElai veLiyil oLirum param chudar) : It transcends and shines in the cosmos as the pre-eminent light. பிரமரந்திரத்திற்கும் அப்பாலுள்ள மேலைப் பெருவெளியில் ஒளிர்கின்ற அருட்பெருஞ் ஜோதி அது. 'ஓம் அங்கி உருவம்' (ஞானம் கொள்)

With sadhana, yogis can direct Prana, after balancing Ida and Pingala nadis, and make it course through Sushumna nadi, finally bringing it to the Sahasrara chakra at the crown of the head (also known as the thousand-petalled lotus or brahmarandra). This is a state of pure consciousness where they drift in an unbounded eternal space of bright light.

ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவர் எவராலும் (Odhu sariyai kriyaiyum puNarndhavar evarAlum) : Those who have mastered the three methods of worship, namely sariyai, kiriyai and yOgam, நூல்களில் சொல்லப்படும் சரியை, கிரியை, யோகம் என்ற மூன்று வழிகளை அநுசரித்தவர்களாலும் (இறைவனை அடைவதற்கான உபாயமாக சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு மார்க்கங்கள்)

ஓத அரிய துரியம் கடந்தது (Odha ariya thuriyam kadandhadhu) : cannot even describe as It surpasses all those disciplines. சொல்லுதற்கு அரியதாகிய துரிய நிலையைக் கடந்தது அது.

போத அருவ சுருபம் ( bOdha aruva swarupam) : Within the confines of perception, through both formless and idol worship, உணர்வு மயமாகிய அருவம், உருவம் என்ற இரண்டு நிலையிலும், அருவம் - கண்ணிற்கு புலனாகாது சக்தி வடிவம். சிவ பெருமான் ஞான சக்தியுடன் மட்டுமே பொருந்தியிருக்கும் தன்மையால் சதாசிவனாகிய அருவ வடிவம் தாங்குகின்றார். அருவுருவம் - ஞானசக்தியையும், கிரியாசக்தியையும் சம அளவில் கொள்வதன் மூலம் பூணுகின்ற வடிவம். ஒருமுறை புலனாகியும், புலனாகாமலும் இருப்பது இவ்வடிவமாகும். புலனாகும்போது முகம், கை, கால் போன்ற உறுப்புக்கள் ஏதுமின்றி காட்சியளிப்பது. ஒளி, இலிங்கம் ஆகியன அருவுருவத் திருவடிவங்களாகும். உருவம் - ஞானசக்தியை விட கிரியாசக்தியை மிகுவித்து அதன்மூலம் கண்களுக்கு புலனாகும் வகையில் முகம், கை, கால் போன்ற உறுப்புகளுடன் தெளிவாகத் தோன்றுவது உருவத் திருவடிவமாகும். சோமஸ்கந்தர், அர்த்தநாரீஸ்சுவரர், நடராசர் போன்ற மகேசுவர மூர்த்தங்கள் இதற்குள் அடங்கும். பதிப்பொருள் அருவம், உருவம், அருவுருவம் என்ற மூன்று தன்மையும் இல்லாதது. ஆயினும் உயிர்களுக்கு அருள் செய்யும் பொருட்டு அருவாகியும் உருவாகியும் அருவுருவாகியும் தான் நினைத்த வண்ணம் தோற்றம் கொள்கிறது.

ப்ரபஞ்சமும் ஊனுமுயிரு முழுதும் கலந்தது ( prapanchamum Unum uyiru muzhudhum kalandhadhu) : It blends fully with the universe, the body and the soul. உலகம், உயிர், உடம்பு இவற்றோடு முழுவதாகக் கலந்தது அது.

சிவஞானம் சாலவுடைய தவர் கண்டு கொண்டது (sivanyAnam sAla vudaiya thavarkaNdu koNdadhu) : It is perceived only by those saints blessed with the Supreme Knowledge of SivA. சிவஞானம் மிகுத்த தவசீலர்கள் கண்டுகொண்டது அது.

மூல நிறைவு குறைவின்றி நின்றது (mUla niRaivu kuRaivindri nindradhu) : It stands alone as the primal fullness and one without any deficiency. மூலப்பொருளாக நிறைந்துள்ளதாய், குறைவேயின்றி நிற்பது அது.

சாதி குலமும் இலது (jAthi kulamum iladhu) : It does not have any caste or creed whatsoever. சாதி, குலம் முதலியன இல்லாதது அது.

அன்றி அன்பர் சொன வியோமம் சாரும் அநுபவர் அமைந்து அமைந்த மெய் வீடு (andri anbar sona viyOmam sArum anubavar amaindhu amaindha mey veedu) : Furthermore, It is the space of Shiva marked by deep silence and stillness, which is mentioned by beloved devotees, and is felt by experienced souls in tranquility, மேலும், அன்புள்ள அடியார்கள் கூறும் ஞான ஆகாயத்தைச் சார்ந்துள்ள அனுபவ சீலர்கள் பொறி புலன்கள் அவியப் பெற்று மனம் ஒடுங்கி அடங்கிய அனுபவத்தில் பொருந்தி காண்கின்ற உண்மைப் பொருளும் மெய் வீடுமான முத்தி நிலை ; வியோமம் சாரும் அநுபவர் = ஞானாகாயத்தில் கலந்து இன்பத்தை அனுபவிக்கும் யோகிகள்; வியோமம் (viyOmam) : விண், வானம், மாகம், அம்பரம்;

பரம சுக சிந்து (parama suka sindhu) : leading to the true joy of liberation, submerging in the sea of bliss. (All these describe the greatness of Your lotus feet, Oh Lord!) உண்மையான மோக்ஷ வீட்டு இன்பமும் பரம ஆனந்தக்கடலும் போன்றது அது. (இத்தனை பெருமை வாய்ந்தது நின் கழல்)

இந்த்ரிய தாப சபலம் அற வந்து (indhriya thApa chapalam aRa vandhu) : When will I conquer the lusts, desires and vacillations caused by my sensory organs and ஐந்து இந்திரியங்களினால் ஏற்படுகின்ற தாக ஆசைகள், மெலிவுகள் ஒழிய அருகில் வந்து

நின் கழல் பெறுவேனோ (nin kazhal peRuvEnO) : have the honour of attaining Your feet? அத்தகைய கழலினை நான் பெறும் பாக்கியம் உடையவனோ?

வால குமர குக கந்த (vAla kumara guha kandha) : "Oh Youthful Kumara! GuhA! Kandha! பால குமாரா, குகனே, கந்தனே,

குன்றெறி வேல மயில (kundreRi vEla mayila ) : Your Spear split the Mount Krouncha! Oh Rider of the Peacock!" கிரெளஞ்சமலையைப் பிளந்த வேலாயுதனே, மயில் வாகனனே,

என வந்து கும்பிடு வான விபுதர் பதி இந்த்ரன் வெந்துயர் களைவோனே (ena vandhu kumbidu vAna vibudhar pathiyindran venthuyar kaLaivOnE) : So prayed IndrA, the leader of the Celestials, whose sufferings were eradicated by You. என்று சொல்லித் துதித்துக் கொண்டு வந்த வானத்து அமரர்களின் தலைவன் இந்திரனின் கொடும் துயரத்தைப் போக்கியவனே,

வாச களப வர துங்க மங்கல (vAsa kaLaba varathunga mangala) : Fragrant sandal paste, auspicious and pure turmeric layer, வாசம் மிகுந்த சந்தனத்தையும், சிறந்த தூய்மையான மங்கலத்தையும்,

வீர கடக புய சிங்க சுந்தர (veera kadaga buyasinga sundhara) : and valiant ornamental shields adorn Your shoulders, Oh majestic lion! வீரத்திற்கு அறிகுறியான கடகத்தையும் அணிந்த புயங்களை உடையவனே, சிங்க ஏறு போன்ற அழகியவனே,

வாகை புனையும் ரணரங்க புங்கவ வயலூரா (vAgai punaiyum raNaranga pungava vayalUrA) : You wear the garland of victory at the battlefield, Oh great warrior! You belong to the famous place, VayalUr! வெற்றி மாலை சூடும், போர்க்களத்தில் சிறந்த வீர சிகாமணியே, வயலூரில் வாழ்பவனே, புங்கவன் = சிறந்தோன்;

ஞால முதல்வி இமயம் பயந்த மின் (nyAla mudhalvi imayam payandha min) : She is the pristine one in the Universe; She is Mount Himavan's daughter, bright as a stroke of lightning; உலகங்களுக்குத் தலைவியும், இமவான் பெற்ற மின்னொளி போன்றவளும்,

நீலி கவுரி (neeli gavuri) : She is blue-hued and is also of a golden complexion; நீல நிறமுடையவளும், பொன்னிறமுடன் கெளரி எனப்படுபவளும்

பரை மங்கை குண்டலி (parai mangai kuNdali) : She is the Primal woman; She is verily of the Kundalini Power; பராசக்தியும், மங்கைப் பருவத்தாளும், குண்டலினி சக்தியாக விளங்குபவளும்,

நாளும் இனிய கனி எங்கள் அம்பிகை (nALum iniya kani engaL ambikai) : She is like the ever-tasty fruit; She is our gracious Mother; என்றும் இனிய கனி போன்றவளும், எங்களுக்கு அருள் புரியும் அன்னையும்,

த்ரிபுராயி நாத வடிவி அகிலம் பரந்தவள் ( thripurAyi nAdha vadivi akilam parandhavaL) : She has delivered the three worlds; She is in the form of music; She is omniscient; மூன்று உலகங்களையும் பெற்றெடுத்தவளும், நாத வடிவாக விளங்குபவளும், உலகெங்கும் பரவி நின்றவளும்,

ஆலின் உதரம் உள பைங் கரும்பு (Alin udharam uLa paing karumbu) : Her belly is like the banyan leaf; She is as sweet as fresh sugarcane; ஆலிலை போன்று வயிறை உடையவளும், பசிய கரும்பு அனையவளும்,

வெண் நாவல் அரசு மனை வஞ்சி (veN nAvalarasu manai vanji) : She is the consort of Lord JambunAthan, who sits under a white jambu tree (naval) in ThiruvAnaikkA; She is slim as a vanji (rattan reed) creeper; வெள்ளை நாவல் மரத்தின் கீழ் வீற்றிருக்கும் அரசன் ஜம்புநாதனின் மனைவியும் ஆன வஞ்சிக்கொடி

சார முனிவர் (ஜம்பு முனிவர் என்றும் சில கதைகள் கூறுகின்றன) அபூர்வமான வெள்ளை நிற நாவல் பழத்தை கயிலையில் இறைவனுக்கு தந்தார். மகிழ்ந்து உண்ட இறைவன் அதன் விதையினை உமிழ, அந்த விதையினை பிரசாதமாக கருதி முனிவர் உண்டார். அவர் சிரத்திலிருந்து வெண்ணாவல் மரம் ஒன்று முளைத்தது. காவிரிக்கு அருகில் உயர் வகை யானைகள் நிறைந்து காணப்படும் கஜாரண்யம் என்னும் க்ஷேத்ரத்தில் அமர்ந்து தவம் மேற்கொண்டார் முனிவர். அந்த நிழலின் கீழே தான் அம்பாள் அப்பு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டாள். அவளுக்கு அங்கே இறைவன் காட்சி தந்து சிவ ஞானத்தை அருளினார். நாவல் மரம் கீழ் அமர்ந்ததால் ஜம்புநாதன் என்று இறைவன் அழைக்கப்பட்டார். ஜம்பு - நாவல் பழம்.

சுவாமி கருவறை மீது கிளைவிட்டுப் படர்ந்து நிற்கும் வெண்ணாவல் மரமே ஜம்பு முனிவரின் வயிற்றினின்று கிளர்ந்து எழுந்த மரம் என்று கருதப்படுகிறது.

தந்தருள் பெருமாளே.(thandharuL perumALE.) : and She is UmAdEvi who brought forth You to this world, Oh Great One! போன்ற உமாதேவி பெற்றருளிய பெருமாளே.

திருவானைக்காவல் ஸ்தல சிறப்பு

பஞ்சபூதவடிவான சிவ பெருமானுடைய அப்பு (நீர்) தலம் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் திருச்சி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியில் அமைந்துள்ளது. புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. ஜம்புகேசுவரரின் லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். இங்கு அகிலாண்டேஸ்வரி இறைவனை நோக்கித் சிஷ்யை எனும் மனோபாவத்தில் தவம் இருப்பதாக ஐதீகம். அம்மையின் காதுகளில் இருக்கும் தாடகங்கள் என்று அழைக்கப்படும் ஸ்ரீசக்ர ரூபமான காதணிகள் அம்பாளின் உக்கிரத்தைத் தணிப்பதற்காக ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தது. உச்சிக்காலத்தில் அம்பாள் ஸ்வரூபமாக அர்ச்சகர் புடவை அணிந்து ஜம்புகேசனுக்கு பூஜை செய்து வருகிறார்.

சிவனை வழிபடப் பூலோகம் வந்த அம்பிகை காவேரியில் நீர் எடுத்து லிங்கம் வடித்து ஒரு வெண் நாவல் மரத்தடியில் வழிபட்ட ஸ்தலம் இது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர். அந்த அப்பு லிங்கத்திற்கு சிலந்தி தினமும் வலைப்பிண்ணி மேலே தூசுகள் விழாமல் காக்கும். பின்னால் வரும் யானையோ காவிரியிலிருந்து நீர் எடுத்து வந்து லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து சிலந்தி வலயைை களைந்து விடும். கோபமுற்ற சிலந்தி, யானை இவ்வாறு செய்வதைக்கண்டு அதன் துதிக்கையுள் சென்றது. மூச்சுத் திணறிய யானை துதிக்கையை வேகமாக தரையில் அறைந்தது. அதனால் சிலந்தி மடிந்தது. யானையும் மூச்சுத் திணறி இறந்தது.

அடுத்தப் பிறவியில் யானை சேரமன்னனாகவும் சிலந்தி சோழன் கோச்செங்கண்ணனாகவும் பிறந்தார்கள். தன்னுடைய பூர்வஜன்ம நினைவாக யானை ஏற முடியாதவாறு குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. இன்றும் நவ துவாரங்கள் வழியாக, குனிந்துதான் ஜம்புகேஸ்வரரைக் காண முடியும். இந்த மன்னர்கள் இருவரும் பின்னர் முக்தி அடைந்தனர் என்பது புராணம்.

மெய்ப்பொருளின் தன்மை

மெய்ப்பொருள் என்பது இப்படித்தான் என்று பகுத்தறிவினால் வரையறை செய்ய முடியாது. பகுத்தறிவு என்பது ஒன்றை வைத்து ஒன்றை விளக்கும். ஒரு பொருளை கண்ணால் பார்த்து நம்புவதை விட அதன் விளைவுகளை வைத்து நம்புவது பகுத்தறிவின் தன்மையாகும். ஐந்தறிவுகளால் பெறப்படும் செய்திகளை ஒருங்கிணைத்து உண்மை நிலையை கண்டறிந்து ஆராய்ந்து முடிவெடுப்பது நுண்ணறிவாகும்.

பிரமப்பொருளாவது உள்பொருளுமன்று இல்பொருளுமன்று. எதிர்நிலையைக் கொண்டே மனித மனம் எதனையும் அறிந்து கொள்ளும். இருட்டைக் கொண்டு ஒளியை அறிவது போல், பொய்யைக் கொண்டே மெய்யை உணர முடியும். உலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் அழியும். அழியக் கூடிய அனைத்தும் பொய். அழியாத ஒன்றே பரம்பொருள். அதுவே மெய். அழியும் இந்த உடம்பைக் கொண்டு அழியாத அந்தப் பரம்பொருளை அடைவதற்கு ஒரே வழி அதுவாகவே ஆகிவிடுதல்.

‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்கிறார் வள்ளுவர். ‘மெய்ப்பொருள் காண்பது’ என்றால் உண்மையை அறிவது. எது மெய்ப்பொருள்? உலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் அழியும். அழியக் கூடிய அனைத்தும் பொய். அழியாத ஒன்றே பரம்பொருள். அதுவே மெய். அது தோன்றுதல், அழிதல், வளர்தல், தேய்தல் முதலிய மாற்றங்களுக்கு உட்படாது.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே