Posts

Showing posts from December, 2016

441. அனித்தமான

ராகம் : பூபாளம் சதுச்ர ஏகம் திஸ்ர நடை அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி யடைத்து வாயு வோடாத வகைசாதித் தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச அசட்டு யோகி யாகாமல் மலமாயை செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார சிரத்தை யாகி யான் வேறெ னுடல்வேறு செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம நோதீத சிவச்சொ ரூபமாயோகி யெனஆள்வாய்

440. வம்பறாச் சில

ராகம் : ஆபோகி தாளம் : ஆதி 2 களை வம்ப றாச்சில கன்ன மிடுஞ்சம யத்துக் கத்துத் திரையாளர் வன்க லாத்திரள் தன்னை யகன்றும னத்திற் பற்றற் றருளாலே தம்ப ராக்கற நின்னை யுணர்ந்துரு கிப்பொற் பத்மக் கழல்சேர்வார் தங்கு ழாத்தினி லென்னையு மன்பொடு வைக்கச் சற்றுக் கருதாதோ

439. முட்டுப் பட்டு

ராகம் : பெஹாக் அங்கதாளம் (6) 1½ + 1½ + 3 முட்டுப் பட்டுக் கதிதோறும் முற்றச் சுற்றிப் பலநாளும் தட்டுப் பட்டுச் சுழல்வேனைச் சற்றுப் பற்றக் கருதாதோ வட்டப் புட்பத் தலமீதே வைக்கத் தக்கத் திருபாதா கட்டத் தற்றத் தருள்வோனே கச்சிச் சொக்கப் பெருமாளே.

438. மக்கட்குக் கூற

ராகம் : லதாங்கி திஸ்ரத்ரிபுடை (7) மக்கட்குக் கூறரி தானது கற்றெட்டத் தான்முடி யாதது மற்றொப்புக் கியாதுமொ வாதது மனதாலே மட்டிட்டுத் தேடவொ ணாதது தத்வத்திற் கோவைப டாதது மத்தப்பொற் போதுப கீரதி மதிசூடும் முக்கட்பொற் பாளரு சாவிய அர்த்தக்குப் போதக மானது முத்திக்குக் காரண மானது பெறலாகா முட்டர்க்கெட் டாதது நான்மறை யெட்டிற்றெட் டாதென வேவரு முற்பட்டப் பாலையி லாவது புரிவாயே

437. பொக்குப்பை

ராகம் : பஹுதாரி தாளம் : திச்ர ரூபகம் (5) பொக்குப்பைக் கத்தத் தொக்குப்பைக் குத்துப் பொய்த்தெத்துத் தத்துக் குடில்பேணிப் பொச்சைப்பிச் சற்பக் கொச்சைச்சொற் கற்றுப் பொற்சித்ரக் கச்சுக் கிரியார்தோய் துக்கத்துக் கத்திற் சிக்குப்பட் டிட்டுத் துக்கித்துக் கெய்த்துச் சுழலாதே சுத்தச்சித் தத்துப் பத்திப்பத் தர்க்கொத் துச்சற்றர்ச் சிக்கப் பெறுவேனோ

436. புனமடந்தை

ராகம் : சங்கராபரணம் தாளம் : ஆதி - 2 களை (16) புனமடந் தைக்குத் தக்கபு யத்தன் குமரனென் றெத்திப் பத்தர்து திக்கும் பொருளைநெஞ் சத்துக் கற்பனை முற்றும் பிறிதேதும் புகலுமெண் பத்தெட் டெட்டியல் தத்வம் சகலமும் பற்றிப் பற்றற நிற்கும் பொதுவையென் றொக்கத் தக்கதொ ரத்தந் தனைநாளும் சினமுடன் தர்க்கித் துச்சிலு கிக்கொண் டறுவருங் கைக்குத் திட்டொரு வர்க்குந் தெரிவரும் சத்யத் தைத்தெரி சித்துன் செயல்பாடித் திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந் திருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ் சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென் றருள்வாயே

435. புரைபடும்

ராகம் : ஹிந்தோளம் தாளம் : ஆதி புரைபடுஞ் செற்றக் குற்றம னத்தன் தவமிலன் சுத்தச் சத்யஅ சத்யன் புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந் துரிசாளன் பொறையிலன் கொத்துத் தத்வவி கற்பஞ் சகலமும் பற்றிப் பற்றற நிற்கும் பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன் கொடியேனின் கரையறுஞ் சித்ரச் சொற்புகழ் கற்குங் கலையிலன் கட்டைப் புத்தியன் மட்டன் கதியிலன் செச்சைப் பொற்புய வெற்புங் கதிர்வேலுங் கதிரையுஞ் சக்ரப் பொற்றையு மற்றும் பதிகளும் பொற்புக் கச்சியு முற்றுங் கனவிலுஞ் சித்தத் திற்கரு திக்கொண் டடைவேனோ

434. படிறொழுக்கம்

ராகம் : சாரங்கா மிஸ்ர சாபு (3½) 1½ + 2 படிறொ ழுக்கமு மடம னத்துள படிப ரித்துட னொடிபேசும் பகடி கட்குள மகிழ மெய்ப்பொருள் பலகொ டுத்தற உயிர்வாடா மிடியெ னப்பெரு வடவை சுட்டிட விதன முற்றிட மிகவாழும் விரகு கெட்டரு நரகு விட்டிரு வினைய றப்பத மருள்வாயே

433. நச்சரவ மென்று

ராகம் : கானடா தாளம் : ஆதி நச்சரவ மென்று நச்சரவ மென்று நச்சுமிழ்க ளங்க மதியாலும் நத்தொடுமு ழங்க னத்தொடுமு ழங்கு நத்திரைவ ழங்கு கடலாலும் இச்சையுணர் வின்றி யிச்சையென வந்த இச்சிறுமி நொந்து மெலியாதே எத்தனையு நெஞ்சில் எத்தனமு யங்கி இத்தனையி லஞ்ச லெனவேணும்

432. தலைவலை

ராகம் : சுத்த தன்யாசி தாளம் : ஆதி தலைவலை யத்துத் தரம்பெ றும்பல புலவர் மதிக்கச் சிகண்டி குன்றெறி தருமயில் செச்சைப் புயங்க யங்குற வஞ்சியோடு தமனிய முத்துச் சதங்கை கிண்கிணி தழுவிய செக்கச் சிவந்த பங்கய சரணமும் வைத்துப் பெரும்ப்ர பந்தம்வி ளம்புகாளப் புலவனெ னத்தத் துவந்த ரந்தெரி தலைவனெ னத்தக் கறஞ்செ யுங்குண புருஷனெ னப்பொற் பதந்த ருஞ்சன னம்பெறாதோ பொறையனெ னப்பொய்ப் ப்ரபஞ்ச மஞ்சிய துறவனெ னத்திக் கியம்பு கின்றது புதுமைய லச்சிற் பரம்பொ ருந்துகை தந்திடாதோ

431. செறிதரும்

ராகம் : ஷண்முகப்ரியா தாளம் : ஆதி செறிதரும் செப்பத் துற்பல வெற்பும் பிறிதுமங் கத்தைக் குற்றவி ருப்புஞ் சிகரிதுண் டிக்கக் கற்றத னிச்செஞ் சுடர்வேலும் திரள்புயங் கொத்துப் பட்டவ னைத்துந் தெளியநெஞ் சத்துப் புற்றும யக்கம் திகழ்ப்ரபஞ் சத்தைப் புற்புத மொக்கும் படிநாடும் அறிவறிந் தத்தற் கற்றது செப்புங் கடவுளன் பத்தர்க் கச்சம றுத்தன் பருள்பவன் பொற்புக் கச்சியுள் நிற்கும் பெருமானென் றவிழுமன் புற்றுக் கற்றும னத்தின் செயலொழிந் தெட்டப் பட்டத னைச்சென் றடைதரும் பக்வத் தைத்தமி யெற்கென் றருள்வாயே

430. சீசி முப்புரக் காடு

ராகம் : தர்பார் மிஸ்ரசாபு 1½ + 2 (3½) சீசி முப்புரக் காடு நீறெழச் சாடி நித்திரைக் கோசம் வேரறச் சீவன் முத்தியிற் கூட வேகளித் தநுபூதி சேர அற்புதக் கோல மாமெனச் சூரி யப்புவிக் கேறி யாடுகச் சீலம் வைத்தருட் டேறி யேயிருக் கறியாமற் பாசம் விட்டுவிட் டோடி போனதுப் போது மிப்படிக் காகி லேனினிப் பாழ்வ ழிக்கடைக் காம லேபிடித் தடியேனைப் பார டைக்கலக் கோல மாமெனத் தாப ரித்துநித் தார மீதெனப் பாத பத்மநற் போதை யேதரித் தருள்வாயே

429. கொத்தார்

ராகம் : கல்யாண வசந்தம் தாளம் : ஆதி திச்ர நடை (12) கொத்தார் பற்கா லற்றே கப்பாழ் குப்பா யத்திற் செயல்மாறிக் கொக்கா கிக்கூ னிக்கோல் தொட்டே கொட்டா விக்குப் புறவாசித் தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன் அஆ உஉ எனவேகேள் செற்றே சுட்டே விட்டே றிப்போ மப்பே துத்துக் கமறாதோ

428. கனிதரும் கொக்கு

ராகம் : ஆரபி தாளம் : ஆதி கனிதருங் கொக்குக் கட்செவி வெற்பும் பழநியுந் தெற்குச் சற்குரு வெற்புங் கதிரையுஞ் சொற்குட் பட்டதி ருச்செந் திலும்வேலும் கனவிலுஞ் செப்பத் தப்புமெ னைச்சங் கடவுடம் புக்குத் தக்கவ னைத்துங் களவுகொண் டிட்டுக் கற்பனை யிற்கண் சுழல்வேனைப் புனிதனம் பைக்குக் கைத்தல ரத்நம் பழையகங் கைக்குற் றப்புது முத்தம் புவியிலன் றைக்கற் றெய்ப்பவர் வைப்பென் றுருகாஎப் பொழுதும் வந்திக்கைக் கற்றஎ னைப்பின் பிழையுடன் பட்டுப் பத்தருள் வைக்கும் பொறையையென் செப்பிச் செப்புவ தொப்பொன் றுளதோதான்

427. கறை இலங்கும்

ராகம் : தோடி தாளம் : ஆதி கறையிலங் குக்ரச் சத்தித ரிக்குஞ் சரவணன் சித்தத் துக்குளொ ளிக்குங் கரவடன் கொற்றக் குக்குட வத்தன் தனிவீரக் கழலிடும் பத்மக் கட்செவி வெற்பன் பழநிமன் கச்சிக் கொற்றவன் மற்றுங் கடகவஞ் சிக்குக் கர்த்தனெ னச்செந் தமிழ்பாடிக் குறையிலன் புற்றுக் குற்றம றுக்கும் பொறைகள்நந் தற்பப் புத்தியை விட்டென் குணமடங் கக்கெட் டுக்குண மற்றொன் றிலதான குணமடைந் தெப்பற் றுக்களு மற்றுங் குறியொடுஞ் சுத்தப் பத்தரி ருக்குங் குருபதஞ் சித்திக் கைக்கருள் சற்றுங் கிடையாதோ

426. கருமமான பிறப்பற

ராகம் : பெஹாக் அங்கதாளம் (15½) 1½ + 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 கரும மானபி றப்பற வொருகதி காணா தெய்த்துத் தடுமாறுங் கலக காரண துற்குண சமயிகள் நானா வர்க்கக் கலைநூலின் வரும நேகவி கற்பவி பரிதம னோபா வத்துக் கரிதாய மவுன பூரித சத்திய வடிவினை மாயா மற்குப் புகல்வாயே

425. எனக்குச் சற்று

ராகம் : கமாஸ் தாளம் : ஆதி (28) மிஸ்ர நடை (தகிட தகதிமி) எனக்குச்சற் றுனக்குச்சற் றெனக்கத்தத் தவர்க்கிச்சைப் பொருட்பொற்றட் டிடிக்கைக்குக் குடில்மாயம் எனக்கட்டைக் கிடைப்பட்டிட் டனற்சுட்டிட் டடக்கைக்குப் பிறக்கைக்குத் தலத்திற்புக் கிடியாமுன் தினைக்குட்சித் திரக்கொச்சைக் குறத்தத்தைத் தனத்தைப்பொற் பெறச்செச்சைப் புயத்தொப்பித் தணிவோனே செருக்கிச்சற் றுறுக்கிச்சொற் பிரட்டத்துட் டரைத்தப்பித் திரட்டப்பிக் கழற்செப்பத் திறல்தாராய்

424. அற்றைக்கு இரை

ராகம் : பாகேஸ்ரீ சங்கீர்ண சாபு (4½) 1 + 1 + 2½ அற்றைக் கிரைதேடி அத்தத் திலுமாசை பற்றித் தவியாத பற்றைப் பெறுவேனோ வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் தொளைசீலா கற்றுற் றுணர்போதா கச்சிப் பெருமாளே.

423. அறிவிலாப் பித்தர்

Image
ராகம் : சாரங்கா அங்கதாளம் (5½) 2½ + 1½ + 1½ அறிவிலாப் பித்த ருன்ற னடிதொழாக் கெட்ட வஞ்சர் அசடர்பேய்க் கத்தர் நன்றி யறியாத அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக் கிப்பு கழ்ந்து அவரைவாழ்த் தித்தி ரிந்து பொருள்தேடிச் சிறிதுகூட் டிக்கொ ணர்ந்து தெருவுலாத் தித்தி ரிந்து தெரிவைமார்க் குச்சொ ரிந்து அவமேயான் திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து தெளியமோ க்ஷத்தை யென்று அருள்வாயே

422. அதிமதம்

ராகம் : கல்யாணி தாளம் : ஆதி (2 களை) அதிமதங் கக்கப் பக்கமு கக்குஞ் சரிதனந் தைக்கச் சிக்கென நெக்கங் கணைதருஞ் செச்சைப் பொற்புய னத்தன் குறவாணர் அடவியந் தத்தைக் கெய்த்துரு கிச்சென் றடிபணிந் திட்டப் பட்டும யற்கொண் டயர்பவன் சத்திக் கைத்தல னித்தன் குமரேசன் துதிசெயும் சுத்தப் பத்தியர் துக்கங் களைபவன் பச்சைப் பக்ஷிந டத்துந் துணைவனென் றர்ச்சித் திச்சைத ணித்துன் புகழ்பாடிச் சுருதியின் கொத்துப் பத்தியு முற்றுந் துரியமுந் தப்பித் தத்வம னைத்துந் தொலையுமந் தத்துக் கப்புற நிற்கும் படிபாராய்

421. வேத வித்தகா

ராகம் : சாமா அங்கதாளம் (8½) 1½ + 1½ + 1 + 2½ + 2 வேத வித்தகா சாமீ நமோநம வேல்மி குத்தமா சூரா நமோநம வீம சக்ரயூ காளா நமோநம விந்துநாத வீர பத்மசீர் பாதா நமோநம நீல மிக்ககூ தாளா நமோநம மேக மொத்தமா யூரா நமோநம விண்டிடாத போத மொத்தபேர் போதா நமோநம பூத மற்றுமே யானாய் நமோநம பூர ணத்துளே வாழ்வாய் நமோநம துங்கமேவும் பூத ரத்தெலாம் வாழ்வாய் நமோநம ஆறி ரட்டிநீள் தோளா நமோநம பூஷ ணத்துமா மார்பா நமோநம புண்டரீக