Posts

Showing posts from July, 2016

345. எட்டுடன் ஒரு

ராகம் : த்விஜாவந்தி தாளம் : ஆதி 2 களை எட்டுட னொருதொளை வாயா யதுபசு மட்கல மிருவினை தோயா மிகுபிணி யிட்டிடை செயவொரு போதா கிலுமுயிர் நிலையாக எப்படி யுயர்கதி நாமே றுவதென எட்பகி ரினுமிது வோரார் தமதம திச்சையி னிடருறு பேரா சைகொள்கட லதிலேவீழ் முட்டர்க ணெறியினில் வீழா தடலொடு முப்பதி னறுபதின் மேலா மறுவரு முற்றுத லறிவரு ஞானோ தயவொளி வெளியாக முக்குண மதுகெட நானா வெனவரு முத்திரை யழிதர ஆரா வமுதன முத்தமிழ் தெரிகனி வாயா லருளுவ தொருநாளே

344. ஊனேறெலும்பு

ராகம் : சங்கராபரணம் தாளம் : ஆதி ஊனே றெலும்பு சீசீ மலங்க ளோடே நரம்பு கசுமாலம் ஊழ்நோ யடைந்து மாசான மண்டு மூனோ டுழன்ற கடைநாயேன் நானா ரொடுங்க நானார் வணங்க நானார் மகிழ்ந்து உனையோத நானா ரிரங்க நானா ருணங்க நானார் நடந்து விழநானார்

343. ஊனுந் தசை

ராகம் சிந்து பைரவி தாளம் : ஆதி ஊனுந் தசையுடல் தானொன் பதுவழி யூருங் கருவழி யொருகோடி ஓதும் பலகலை கீதஞ் சகலமு மோரும் படியுன தருள்பாடி நானுன் திருவடி பேணும் படியிரு போதுங் கருணையில் மறவாதுன் நாமம் புகழ்பவர் பாதந் தொழஇனி நாடும் படியருள் புரிவாயே

342. உறவின் முறை

ராகம் : வலசி சதுஸ்ர துருவம் கண்ட நடை (35) உறவின்முறை கதறியழ ஊராரு மாசையற பறைதிமிலை முழவினிசை யாகாச மீதுமுற உலகிலுள பலரரிசி வாய்மீதி லேசொரியு மந்தநாளில் உனதுமுக கருணைமல ரோராறு மாறிருகை திரள்புயமு மெழில்பணிகொள் வார்காது நீள்விழியும் உபயபத மிசைகுலவு சீரேறு நூபுரமும் அந்தமார்பும் மறையறைய அமரர்தரு பூமாரி யேசொரிய மதுவொழுகு தரவில்மணி மீதேமு நூலொளிர மயிலின்மிசை யழகுபொலி யாளாய்மு னாரடியர் வந்துகூட மறலிபடை யமபுரமு மீதோட வேபொருது விருதுபல முறைமுறையி லேயூதி வாதுசெய்து மதலையொரு குதலையடி நாயேனை யாளஇஙன் வந்திடாயோ

341. உலகத்தினில்

ராகம் : ஆந்தோளிகா தாளம் : திச்ர த்ரிபுடை (7) உலகத்தினில் மாதரு மைந்தரும் உறுசுற்றமும் வாழ்வொடு றுங்கிளை உயர்துக்கமு மோடுற வென்றுற வருகாலன் உதிரத்துட னேசல மென்பொடு உறுதிப்பட வேவள ருங்குடில் உதிரக்கனல் மீதுற என்றனை யொழியாமுன் கலகக்கலை நூல்பல கொண்டெதிர் கதறிப்பத றாவுரை வென்றுயர் கயவர்க்குள னாய்வினை நெஞ்சொடு களிகூருங் கவலைப்புல மோடுற என்துயர் கழிவித்துன தாளிணை யன்பொடு கருதித்தொழும் வாழ்வது தந்திட நினைவாயே

340. இன மறை விதங்கள்

ராகம் : பூபாளம் அங்கதாளம் 1 + 1½ + 1½ + 1 (5) இனமறைவி தங்கள்கொஞ் சியசிறுச தங்கைகிண் கிணியிலகு தண்டையம் புண்டரீகம் எனதுமன பங்கயங் குவளைகுர வம்புனைந் திரவுபகல் சந்ததஞ் சிந்தியாதோ உனதருளை யன்றியிங் கொருதுணையு மின்றிநின் றுளையுமொரு வஞ்சகன் பஞ்சபூத உடலதுசு மந்தலைந் துலகுதொறும் வந்துவந் துழலுமது துன்புகண் டன்புறாதோ

339. இருந்த வீடும்

ராகம் : வசந்தா தாளம் : சதுச்ர அட (12) இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவரு முறுகேளும் இசைந்த வூரும் பெண்டிரு மிளமையும் வளமேவும் விரிந்த நாடுங் குன்றமு நிலையென மகிழாதே விளங்கு தீபங் கொண்டுனை வழிபட அருள்வாயே குருந்தி லேறுங் கொண்டலின் வடிவினன் மருகோனே குரங்கு லாவுங் குன்றுறை குறமகள் மணவாளா திருந்த வேதந் தண்டமிழ் தெரிதரு புலவோனே சிவந்த காலுந் தண்டையு மழகிய பெருமாளே.

338. இருநோய் மலம்

ராகம் : சிந்துபைரவி அங்கதாளம் (5) 1 + 1½ + 1½ + 1 இருநோய்ம லத்தைசிவ வொளியால்மி ரட்டியெனை யினிதாவ ழைத்தெனது முடிமேலே இணைதாள ளித்துனது மயில்மேலி ருத்தியொளி ரியல்வேல ளித்துமகி ழிருவோரும் ஒருவாகெ னக்கயிலை யிறையோன ளித்தருளு மொளிர்வேத கற்பகந லிளையோனே ஒளிர்மாம றைத்தொகுதி சுரர்பார்து தித்தருள உபதேசி கப்பதமு மருள்வாயே

337. இரவொடும் பகலே

ராகம் : தர்பாரி கானடா அங்க தாளம் (7½) 1½ + 2 + 2 + 2 இரவொ டும்பக லேமா றாதே அநுதி னந்துய ரோயா தேயே யெரியு முந்தியி னாலே மாலே பெரிதாகி இரைகொ ளும்படி யூடே பாடே மிகுதி கொண்டொழி யாதே வாதே யிடைக ளின்சில நாளே போயே வயதாகி நரைக ளும்பெரி தாயே போயே கிழவ னென்றொரு பேரே சார்வே நடைக ளும்பல தாறே மாறே விழலாகி நயன முந்தெரி யாதே போனால் விடிவ தென்றடி யேனே தானே நடன குஞ்சித வீடே கூடா தழிவேனோ

336. இத்தரணி மீதில்

ராகம் : அசாவேரி ஆதி (எடுப்பு 3/4 இடம்) இத்தரணி மீதிற் பிறவாதே எத்தரொடு கூடிக் கலவாதே முத்தமிழை யோதித் தளராதே முத்தியடி யேனுக் கருள்வாயே தத்துவமெய்ஞ் ஞானக் குருநாதா சத்தசொரு பாபுத் தமுதோனே நித்தியக்ரு தாநற் பெருவாழ்வே நிர்த்தஜெக ஜோதிப் பெருமாளே.

335. இசைந்த ஏறும்

ராகம் : ரீதிகௌளை தாளம் : சதுச்ர அட (12) இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும் எழில்நீறும் இலங்கு நூலும் புலியத ளாடையு மழுமானும் அசைந்த தோடுஞ் சிரமணி மாலையு முடிமீதே அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய குருநாதா உசந்த சூரன் கிளையுடன் வேரற முனிவோனே உகந்த பாசங் கயிறொடு தூதுவர் நலியாதே அசந்த போதென் துயர்கெட மாமயில் வரவேணும் அமைந்த வேலும் புயமிசை மேவிய பெருமாளே.

334. ஆனாத ஞான புத்தி

Image
ராகம் : சுருட்டி அங்கதாளம் ஆனாத ஞான புத்தி யைக்கொ டுத்ததும் ஆராயு நூல்க ளிற்க ருத்த ளித்ததும் ஆதேச வாழ்வி னிற்ப்ர மித்தி ளைத்துயி ரழியாதே ஆசாப யோதி யைக்க டக்க விட்டதும் வாசாம கோச ரத்தி ருத்து வித்ததும் ஆபாத னேன்மி கப்ர சித்தி பெற்றினி துலகேழும் யானாக நாம அற்பு தத்தி ருப்புகழ் தேனூற வோதி யெத்தி சைப்பு றத்தினும் ஏடேவு ராஜ தத்தி னைப்ப ணித்ததும் இடராழி ஏறாத மாம லத்ர யக்கு ணத்ரய நானாவி கார புற்பு தப்பி றப்பற ஏதேம மாயெ னக்க நுக்ர கித்ததும் மறவேனே

333. ஆவி காப்பது

ராகம் : ஆரபி அங்கதாளம் 1½ + 2 + 2 (5½) ஆவி காப்பது மேற்பத மாத லாற்புரு டார்த்தமி தாமெ னாப்பர மார்த்தம துணராதே ஆனை மேற்பரி மேற்பல சேனை போற்றிட வீட்டொட நேக நாட்டொடு காட்டொடு தடுமாறிப் பூவை மார்க்குரு காப்புதி தான கூத்தொடு பாட்டொடு பூவி னாற்றம றாத்தன கிரிதோயும் போக போக்யக லாத்தொடு வாழ்ப ராக்கொடி ராப்பகல் போது போக்கியெ னாக்கையை விடலாமோ

332. ஆராதனர்

ராகம் : கீரவாணி தாளம் : திச்ர த்ரிபுடை ஆராதன ராடம் பரத்து மாறாதுச வாலம் பனத்து மாவாகன மாமந் திரத்து மடலாலும் ஆறார்தெச மாமண் டபத்தும் வேதாகம மோதுந் தலத்து மாமாறெரி தாமிந் தனத்து மருளாதே நீராளக நீர்மஞ் சனத்த நீடாரக வேதண்ட மத்த நீநானற வேறின்றி நிற்க நியமாக நீவாவென நீயிங் கழைத்து பாராவர வாநந்த சித்தி நேரேபர மாநந்த முத்தி தரவேணும்

331. ஆராத காதலாகி

ராகம் : திலங் தாளம் : அங்கதாளம் (7½) 2½ + 1½ +1½ + 2 ஆராத காத லாகி மாதர்த மாபாத சூட மீதி லேவிழி யாலோல னாய்வி கார மாகியி லஞ்சியாலே ஆசாப சாசு மூடி மேலிட ஆசார வீன னாகி யேமிக ஆபாச னாகி யோடி நாளும ழிந்திடாதே ஈராறு தோளு மாறு மாமுக மோடாரு நீப வாச மாலையு மேறான தோகை நீல வாசியு மன்பினாலே ஏனோரு மோது மாறு தீதற நானாசு பாடி யாடி நாடொறு மீடேறு மாறு ஞான போதக மன்புறாதோ

330. ஆரவாரமாயிருந்து

ராகம் : கேதாரம் ஆதி திச்ர நடை 2 களை ஆர வார மாயி ருந்து ஏம தூத ரோடி வந்து ஆழி வேலை போன்மு ழங்கி யடர்வார்கள் ஆக மீதி லேசி வந்து ஊசி தானு மேநு ழைந்து ஆலைமீதி லேக ரும்பு எனவேதான் வீர மான சூரி கொண்டு நேரை நேரை யேபி ளந்து வீசு வார்கள் கூகு வென்று அழுபோது வீடு வாச லான பெண்டிர் ஆசை யான மாதர் வந்து மேலை வீழ்வ ரீது கண்டு வருவாயே

329. ஆசைகூர்

ராகம் : யமுனா கல்யாணி தாளம் : ஆதி ஆசைகூர் பத்த னேன்மனோ பத்ம மானபூ வைத்து நடுவேயன் பானநூ லிட்டு நாவிலே சித்ர மாகவே கட்டி யொருஞான வாசம்வீ சிப்ர காசியா நிற்ப மாசிலோர் புத்தி யளிபாட மாத்ருகா புஷ்ப மாலைகோ லப்ர வாளபா தத்தி லணிவேனோ

328. ஆசார வீனன்

ராகம் : ஹம்சவிநோதினி அங்கதாளம் (6) 2½ + 1½ + 2 ஆசார வீன னறிவிலி கோபாப ராதி யவகுண னாகாத நீச னநுசிதன் விபரீதன் ஆசாவி சார வெகுவித மோகாச ரீத பரவச னாகாச நீர்ம ணனல்வளி யுருமாறி மாசான நாலெண் வகைதனை நீநானெ னாத அறிவுளம் வாயாத பாவி யிவனென நினையாமல் மாதாபி தாவி னருணல மாறாம காரி லெனையினி மாஞான போத மருள்செய நினைவாயே

327. அமல வாயு

ராகம் : யமுனா கல்யாணி அங்கதாளம் 1½ + 1½ + 2½ அமல வாயு வோடாத கமல நாபி மேல்மூல அமுத பான மேமூல அனல்மூள அசைவு றாது பேராத விதமு மேவி யோவாது அரிச தான சோபான மதனாலே எமனை மோதி யாகாச கமன மாம னோபாவ மெளிது சால மேலாக வுரையாடும் எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும் இதய பாவ னாதீத மருள்வாயே

326. அப்படி ஏழும்

ராகம் : கேதாரம் அங்கதாளம் 2 + 1½ + 2 (5½) அப்படி யேழு மேழும்வ குத்துவ ழாது போதினி னக்ரம்வி யோம கோளகை மிசைவாழும் அக்ஷர தேவி கோவின்வி திப்படி மாறி மாறிய னைத்துரு வாய காயம தடைவேகொண் டிப்படி யோனி வாய்தொறு முற்பவி யாவி ழாவுல கிற்றடு மாறி யேதிரி தருகாலம் எத்தனை யூழி காலமெ னத்தெரி யாது வாழியி னிப்பிற வாது நீயருள் புரிவாயே

325. அதல சேடனார்

ராகம் : பிருந்தாவன சாரங்கா அங்கதாளம் (5½) 1½ + 1½ + 2½ (5½) அதல சேட னாராட அகில மேரு மீதாட அபின காளி தானாட அவளோடன் றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட அருகு பூத வேதாள மவையாட மதுர வாணி தானாட மலரில் வேத னாராட மருவு வானு ளோராட மதியாட வனச மாமி யாராட நெடிய மாம னாராட மயிலு மாடி நீயாடி வரவேணும்

324. அடியார் மனம்

ராகம் : சாமா அங்கதாளம் 2½ + 1½ + 1½ (5½) அடியார்ம னஞ்சலிக்க எவராகி லும்ப ழிக்க அபராதம் வந்து கெட்ட பிணிமூடி அனைவோரும் வந்து சிச்சி யெனநால்வ ருஞ்சி ரிக்க அனலோட ழன்று செத்து விடுமாபோற் கடையேன்ம லங்கள் முற்று மிருநோயு டன்பி டித்த கலியோடி றந்து சுத்த வெளியாகிக் களிகூர என்ற னுக்கு மயிலேறி வந்து முத்தி கதியேற அன்பு வைத்து னருள்தாராய்

323. அகரமுதலென

Image
ராகம் : கரஹரப்ரியா தாளம் : சதுச்ர துருவம் கண்ட நடை (35) அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும் அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும் அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை எப்பொருளுமாய அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய முடிவைஅடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு மற்றதொரு காலம் நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ ரித்தபெரு மானும் நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ணர்த்தியருள்வாயே