Posts

Showing posts from December, 2015

206. வாட்பட

ராகம் : சாருகேசி தாளம் : கண்டசாபு (2½) வாட்படச் சேனைபட வோட்டியொட் டாரையிறு மாப்புடைத் தாளரசர் பெருவாழ்வும் மாத்திரைப் போதிலிடு காட்டினிற் போமெனஇல் வாழ்க்கைவிட் டேறுமடி யவர்போலக் கோட்படப் பாதமலர் பார்த்திளைப் பாறவினை கோத்தமெய்க் கோலமுடன் வெகுரூபக் கோப்புடைத் தாகியல மாப்பினிற் பாரிவரு கூத்தினிப் பூரையிட அமையாதோ

205. மனத்திரை

ராகம் : முகாரி தாளம் : ஆதி மனத்தி ரைந்தெழு மீளையு மேலிட கறுத்த குஞ்சியு மேநரை யாயிட மலர்க்க ணண்டிரு ளாகியு மேநடை தடுமாறி வருத்த முந்தர தாய்மனை யாள்மக வெறுத்தி டங்கிளை யோருடன் யாவரும் வசைக்கு றுஞ்சொலி னால்மிக வேதின நகையாட எனைக்க டந்திடு பாசமு மேகொடு சினத்து வந்தெதிர் சூலமு மேகையி லெடுத்தெ றிந்தழல் வாய்விட வேபய முறவேதான் இழுக்க வந்திடு தூதர்க ளானவர் பிடிக்கு முன்புன தாள்மல ராகிய இணைப்ப தந்தர வேமயில் மீதினில் வரவேணும்

204. இறவாமற்

ராகம் : காபி தாளம் : கண்டசாபு (2½) இறவாமற் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப் பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசொற் குமரேசா அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் பெருமாளே

203. கருகி அறிவு

ராகம் : பூர்விகல்யாணி அங்கதாளம் (9½) 2½ + 2½ + 2 + 1½ + 1 கருகியறி வகலவுயிர் விட்டுக் கிக்கிளைஞர் கதறியழ விரவுபறை முட்டக் கொட்டியிட கனகமணி சிவிகையில மர்த்திக் கட்டையினி லிடைபோடாக் கரமலர்கொ டரிசியினை யிட்டுச் சித்ரமிகு கலையைபுரி செய்துமறைகள் பற்றப் பற்றுகனல் கணகணென எரியவுடல் சுட்டுக் கக்ஷியவர் வழியேபோய் மருவுபுனல் முழுகிமனை புக்குத் துக்கமறு மனிதர்தமை யுறவுநிலை சுட்டுச் சுட்டியுற மகிழ்வுசெய்து அழுதுபட வைத்தத் துட்டன்மதன் மலராலே மயல்விளைய அரிவையர்கள் கைப்பட் டெய்த்துமிக மனமழியு மடிமையைநி னைத்துச் சொர்க்கபதி வழியையிது வழியெனவு ரைத்துப் பொற்கழல்கள் தருவாயே

202. மாலாசை கோப

ராகம் : மாண்டு தாளம் : ஆதி மாலாசை கோப மோயாதெ நாளு மாயா விகார வழியேசெல் மாபாவி காளி தானேனு நாத மாதா பிதாவு மினிநீயே நாலான வேத நூலாக மாதி நானோதி னேனு மிலைவீணே நாள்போய் விடாம லாறாறு மீதில் ஞானோப தேச மருள்வாயே

201. நிராமய

ராகம் : தேஷ் ஆதி கண்ட நடை (20) நிராமய புராதன பராபர வராம்ருத நிராகுல சிராதிகப் ப்ரபையாகி நிராசசி வராஜத வராகர்கள் பராவிய நிராயுத புராரியச் சுதன்வேதா சுராலய தராதல சராசர பிராணிகள் சொரூபமி வராதியைக் குறியாமே துரால்புகழ் பராதின கராவுள பராமுக துரோகரை தராசையுற் றடைவேனோ

200. தூதாளரோடு

ராகம் : சஹானா தாளம் : 7½ 2½ + 1½ + 1½ + 2 தூதாள ரோடு காலன் வெருவிட வேதாமு ராரி யோட அடுபடை சோராவ லாரி சேனை பொடிபட மறைவேள்விச் சோமாசி மார்சி வாய நமவென மாமாய வீர கோர முடனிகல் சூர்மாள வேலை யேவும் வயலியி லிளையோனே கூதாள நீப நாக மலர்மிசை சாதாரி தேசி நாம க்ரியைமுதல் கோலால நாத கீத மதுகர மடர்சோலை கூராரல் தேரு நாரை மருவிய கானாறு பாயு மேரி வயல்பயில் கோனாடு சூழ்வி ராலி மலையுறை பெருமாளே.

199. சீரான கோல

ராகம் : கீரவாணி தாளம் : 2½ + 1½ +1½ + 2 சீரான கோல கால நவமணி மாலாபி ஷேக பார வெகுவித தேவாதி தேவர் சேவை செயுமுக மலராறும் சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளு நீளும் வரியளி சீராக மோது நீப பரிமள இருதாளும் ஆராத காதல் வேடர் மடமகள் ஜீமூத மூர்வ லாரி மடமகள் ஆதார பூத மாக வலமிட முறைவாழ்வும் ஆராயு நீதி வேலு மயிலு மெய்ஞ் ஞானாபி ராம தாப வடிவமும் ஆபாத னேனு நாளு நினைவது பெறவேணும்

198. கொடாதவனையே புகழ்ந்து

ராகம் : கரஹரப்ரியா சதுஸ்ர ரூபகம் (6) கொடாதவனை யேபு கழ்ந்து குபேரனென வேமொ ழிந்து குலாவியவ மேதி ரிந்து புவிமீதே எடாதசுமை யேசு மந்து எணாதகலி யால்மெ லிந்து எலாவறுமை தீர அன்று னருள்பேணேன் சுடாததன மான கொங்கை களாலிதய மேம யங்கி சுகாதரம தாயொ ழுங்கி லொழுகாமல் கெடாததவ மேம றைந்து கிலேசமது வேமி குந்து கிலாதவுட லாவி நொந்து மடியாமுன்

197. கரிபுராரி

ராகம் : தோடி அங்கதாளம் (5½) 1½ + 1½ + 2½ கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி கயிலை யாளி காபாலி கழையோனி கரவு தாச னாசாரி பரசு பாணி பானாளி கணமொ டாடி காயோகி சிவயோகி பரம யோகி மாயோகி பரிய ராஜ டாசூடி பகரொ ணாத மாஞானி பசுவேறி பரத மாடி கானாடி பரவ யோதி காதீத பரம ஞான வூர்பூத அருளாயோ

196. ஐந்து பூதமும்

ராகம்: பைரவி தாளம்: மிஸ்ரசாபு (3½) 1½ + 2 ஐந்து பூதமு மாறு சமயமு மந்த்ர வேதபு ராண கலைகளும் ஐம்ப தோர்வித மான லிபிகளும் வெகுரூப அண்ட ராதிச ராச ரமுமுயர் புண்ட ரீகனு மேக நிறவனும் அந்தி போலுரு வானு நிலவொடு வெயில்காலும் சந்த்ர சூரியர் தாமு மசபையும் விந்து நாதமு மேக வடிவம தன்சொ ரூபம தாக வுறைவது சிவயோகம் தங்க ளாணவ மாயை கருமம லங்கள் போயுப தேச குருபர சம்ப்ர தாயமொ டேயு நெறியது பெறுவேனோ

195. இலாபமில்

Image
ராகம் : மனோலயம் தாளம் : ஆதி கண்ட நடை (20) இலாபமில் பொலாவுரை சொலாமன தபோதன ரியாவரு மிராவுபக லடியேனை இராகமும் விநோதமு முலோபமு டன்மோகமு மிலானிவ னுமாபுருஷ னெனஏய சலாபவ மலாகர சசீதர விதாரண சதாசிவ மயேசுரச கலலோக சராசர வியாபக பராபர மநோலய சமாதிய நுபூதிபெற நினைவாயே

194. சரவண ஜாதா

ராகம் : ஆனந்தபைரவி அங்கதாளம் (6½) 2 + 2 + 1½ + 1 சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம சததள பாதா நமோநம அபிராம தருணக தீரா நமோநம நிருபமர் வீரா நமோநம சமதள வூரா நமோநம ஜகதீச பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம பரிமள நீபா நமோநம உமைகாளி பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம பவுருஷ சீலா நமோநம அருள்தாராய்

193 அல்லில் நேர்

ராகம் : அடாணா அங்க தாளம் 1½ + 2 + 3 (6½) அல்லில் நேருமி னதுதானும் அல்ல தாகிய உடல்மாயை கல்லி னேரஅ வழிதோறுங் கையு நானுமு லையலாமோ சொல்லி நேர்படு முதுசூரர் தொய்ய வூர்கெட விடும்வேலா வல்லி மாரிரு புறமாக வள்ளி யூருறை பெருமாளே.

192. சிரமங்க மங்கை

ராகம் : ராமப்பிரியா தாளம் : 2½ + 2½ சிரமங்க மங்கைகண் செவிவஞ்ச நெஞ்சுசெஞ் சலமென்பு திண்பொருந் திடுமாயம் சிலதுன்ப மின்பமொன் றிறவந்து பின்புசெந் தழலிண்கண் வெந்துசிந் திடஆவி விரைவின்க ணந்தகன் பொரவந்த தென்றுவெந் துயர்கொண்ட லைந்துலைந் தழியாமுன் வினையொன்று மின்றிநன் றியலொன்றி நின்பதம் வினவென்று அன்புதந் தருள்வாயே

191. குடிவாழ்க்கை

ராகம் : அமிர்தவர்ஷிணி தாளம் : ஆதி குடிவாழ்க்கை யன்னை மனையாட்டி பிள்ளை குயில்போற்ப்ர சன்ன மொழியார்கள் குலம்வாய்த்த நல்ல தனம்வாய்த்த தென்ன குருவார்த்தை தன்னை யுணராதே இடநாட்கள் வெய்ய நமனீட்டி தொய்ய இடர்கூட்ட இன்னல் கொடுபோகி இடுகாட்டி லென்னை எரியூட்டு முன்னு னிருதாட்கள் தம்மை யுணர்வேனோ

190. ககனமும் அநிலமும்

ராகம் : ஆனந்தபைரவி தாளம் : ஆதி 2 களை ககனமு மநிலமு மனல்புனல் நிலமமை கள்ளப் புலாற்கி ருமிவீடு கனலெழ மொழிதரு சினமென மதமிகு கள்வைத்த தோற்பை சுமவாதே யுகஇறு திகளிலு மிறுதியி லொருபொருள் உள்ளக்க ணோக்கு மறிவூறி ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி லுள்ளத்தை நோக்க அருள்வாயே

189. ஐயுமுறு நோயும்

ராகம் : மோகனம் தாளம் : ஆதி ஐயுமுறு நோயு மையலும வாவி னைவருமு பாயப் பலநூலின் அள்ளல்கட வாது துள்ளியதில் மாயு முள்ளமுமில் வாழ்வைக் கருதாசைப் பொய்யுமக லாத மெய்யைவள ராவி உய்யும்வகை யோகத் தணுகாதே புல்லறிவு பேசி யல்லல் படு வேனை நல்லஇரு தாளிற் புணர்வாயே

188. அல்லி விழியாலும்

ராகம் : தர்பாரி கானடா தாளம் : ஆதி அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு மல்லல்பட ஆசைக் கடலீயும் அள்ளவினி தாகி நள்ளிரவு போலு முள்ளவினை யாரத் தனமாரும் இல்லுமிளை யோரு மெல்ல அயலாக வல்லெருமை மாயச் சமனாரும் எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில் உய்யவொரு நீபொற் கழல்தாராய்