Sevagan Vaguppu
இருள் படு சொருபம் உடைக் கோ விடவே
இறுகிய கயிறு பட வினை முடுகி
எமபடர் பிடரி பிடித்தே கொடு போய்
அருமறை முறையின் முறை முறை கருதி
அதரிடை வெருவ ஒறுத்தால் வகையால்
அறிவொடு மதுர மொழியது குழறி
அலமரு பொழுதில் அழைத்தால் வருவாய்
ஒருபது சிரமும் இருபது கரமும்
விழ ஒரு பகழி தொடுத்தோன் மருகா
உரமது பெரிய திரிபுரம் எரிய
உயர்கன கிரியை வளைத்தோர் புதல்வா
மருவளர் அடவி வனிதையர் பரவ
மரகத இதணில் இருப்பாள் கணவா
வளைகடல் கதற நிசிசரர் மடிய
மலையொடு பொருத முழுச்சே வகனே.
Comments
Post a Comment