Posts

Showing posts from 2013

85. போதகம் தரு

ராகம் : பந்துவராளி தாளம் : 1½+ 2 + 2 + 1½ + 2 போத கந்தரு கோவேந மோநம நீதி தங்கிய தேவாந மோநம பூத லந்தனை யாள்வாய்ந மோநம பணியாவும் பூணு கின்றபி ரானேந மோநம வேடர் தங்கொடி மாலாந மோநம போத வன்புகழ் ஸாமீந மோநம அரிதான வேத மந்திர ரூபாந மோநம ஞான பண்டித நாதாந மோநம வீர கண்டைகொள் தாளாந மோநம அழகான மேனி தங்கிய வேளேந மோநம வான பைந்தொடி வாழ்வேந மோநம வீறு கொண்டவி சாகாந மோநம அருள்தாராய்

84. புடவிக்கு அணிதுகில்

ராகம் : சாருகேசி தாளம் : ஆதி 2 களை புடவிக் கணிதுகி லெனவள ரந்தக் கடலெட் டையுமற குடிமுநி யெண்கட் புநிதச் சததள நிலைகொள்ச யம்புச் சதுர்வேதன் புரமட் டெரியெழ விழிகனல் சிந்திக் கடினத் தொடுசில சிறுநகை கொண்டற் புதகர்த் தரகர பரசிவ னிந்தத் தனிமூவ ரிடசித் தமுநிறை தெளிவுற வும்பொற் செவியுட் பிரணவ ரகசிய மன்புற் றிடவிற் பனமொழி யுரைசெய் குழந்தைக் குருநாதா

83. பாரியான கொடை

ராகம் : பாகேஸ்வரி தாளம் : 1½ + 1½ + 1 + 1½ + 2 பாரியான கொடைக்கொண்ட லேதிரு வாழ்விசால தொடைத்திண்பு யாஎழு பாருமேறு புகழ்க்கொண்ட நாயக அபிராம பாவலோர்கள் கிளைக்கென்றும் வாழ்வருள் சீலஞால விளக்கின்ப சீவக பாகசாத னவுத்துங்க மானத எனவோதிச் சீரதாக எடுத்தொன்று மாகவி பாடினாலு மிரக்கஞ்செ யாதுரை சீறுவார்க டையிற்சென்று தாமயர் வுறவீணே சேயபாவ கையைக்கொண்டு போயறி யாமலேக மரிற்சிந்து வார்சிலர் சேயனார்ம னதிற்சிந்தி யாரரு குறலாமோ

The Story of Paari

Image
Paari giving his chariot to the creeper Pari Vallal, the legendary 9CE Tamil Chola king was one of the 7 patron kings ("Vallal") who supported poets and scholars. After the Dwaraka deluge, a group of refugees are believed to have reached Kashmir, while the other group set southwards. King Paari was believed to have reached Tamil Nadu as a refugee from Dwaraka, following the great sage Agasthya. He is said to have ruled the Parambu Nadu. One day Paari was going around the hill in his chariot. Suddenly a strong wind blew and the king noticed a lone Jasmine creeper which was violently tossed in the wind. He asked his charioteer to move the chariot close to the creeper. He gently bent down and took the creeper wrapping it carefully around the chariot. He set his horses to roam freely and walked to his palace along with his charioteer. தமிழ்நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து புகழ் பெற்ற குறுநில மன்னர்களான ஏழு வள்ளல்களுள் பாரியும் ஒருவர். பாரியின் அவ

82. பஞ்ச பாதகன்

ராகம் : ஹுசேநி அங்க தாளம் (8) 1½ + 2 + 1½ + 1 + 1½ + 1 பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன் வெகு வஞ்ச லோபியன் சூதுகொலை காரன்மதி பண்கொ ளாதவன் பாவகட லூடுநுழை பவுஷாசை பங்க ன் மோதியம் பாழ்நரகில் வீணின் விழ பெண்டிர் வீடுபொன் தேடிநொடி மீதில்மறை பஞ்ச மாமலம் பாசமொடு கூடிவெகு சதிகாரர் அஞ்சு பூதமுண் டாகடிய காரரிவர் தங்கள் வாணிபங் காரியம லாமலரு ளன்பர் பாலுடன் கூடியறி யாதபுக ழடியேனை அண்டர் மாலயன் தேடியறி யாதவொளி சந்த்ர சேகரன் பாவைவிளை யாடுபடி கந்த நாடுடன் கூடிவிளை யாடஅருள் புரிவாயே

81. பகர்தற்கரிதான செந்தமிழ்

ராகம் : வசந்தா தாளம் : 3 + 1½ +2 பகர்தற்கரி தான செந்தமி ழிசையிற்சில பாட லன்பொடு பயில்பல காவி யங்களை யுணராதே பவளத்தினை வீழி யின்கனி யதனைப்பொரு வாய் மடந்தையர் பசலைத்தன மேபெ றும்படி விரகாலே சகரக்கடல் சூழு மம்புவி மிசையிப்படி யேதி ரிந்துழல் சருகொத்துள மேய யர்ந்துடல் மெலியாமுன் தகதித்திமி தாகி ணங்கிண எனவுற்றெழு தோகை யம்பரி தனிலற்புத மாக வந்தருள் புரிவாயே

80. திமிர உததி

ராகம் : பைரவி திச்ர ஏகம் (எடுப்பு 1 இடம்) திமிர வுததி யனைய நரக செனன மதனில் விடுவாயேல் செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியு மணுகாதே அமரர் வடிவு மதிக குலமு மறிவு நிறையும் வரவேநின் அருள தருளி யெனையு மனதொ டடிமை கொளவும் வரவேணும்

79. திடமிலி சற்குணமிலி

ராகம்: பந்துவராளி கண்ட சாபு (2½) திடமிலிசற் குணமிலி நற்றிறமிலியற் புதமான செயலிலிமெய்த் தவமிலிநற் செபமிலிசொர்க் கமுமீதே இடமிலிகைக் கொடையிலிசொற் கியல்பிலிநற் றழிழ்பாட இருபதமுற் றிருவினையற் றியல்கதியைப் பெறவேணும்

78. தலைவலி மருத்தீடு

ராகம் : செஞ்சுருட்டி தாளம் : சதுஸ்ர த்ருவம் கண்ட நடை தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம் விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி யணுகாதே தலமிசை யதற்கான பேரோடு கூறியிது பரிகரி யெனக்காது கேளாது போலுமவர் சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும் விதியாதே உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர் வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்க ளிருபாதம் உளமது தரித்தேவி னாவோடு பாடியருள் வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை வரவேணும்

77. தமரும் அமரும்

ராகம் : ஹமீர் கல்யாணி தாளம் : ஆதி திச்ர நடை (12) தமரு மமரு மனையு மினிய தனமு மரசும் அயலாகத் தறுகண் மறலி முறுகு கயிறு தலையை வளைய எறியாதே கமல விமல மரக தமணி கனக மருவு மிருபாதங் கருத அருளி யெனது தனிமை கழிய அறிவு தரவேணும்

76. தகர நறுமலர்

ராகம் : பூர்வி கல்யாணி அங்க தாளம் 1½ + 2 + 2 + 2 தகர நறுமலர் பொதுளிய குழலியர் கலக கெருவித விழிவலை படவிதி தலையி லெழுதியு மனைவயி னுறவிடு வதனாலே தனயர் அனைதமர் மனைவியர் சினெகிதர் சுரபி விரவிய வகையென நினைவுறு தவன சலதியின் முழுகியெ யிடர்படு துயர்தீர அகர முதலுள பொருளினை யருளிட இருகை குவிசெய்து ளுருகிட வுருகியெ அரக ரெனவல னிடமுற எழிலுன திருபாதம் அருள அருளுடன் மருளற இருளற கிரண அயில்கொடு குருகணி கொடியொடு அழகு பெறமர கதமயில் மிசைவர இசைவாயே

75. ஞானம் கொள்

ராகம் : பிலஹரி அங்க தாளம் (5½) 2½ + 1½ + 1½ ஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரி லாத நாடண்டி நமசி வாய வரையேறி நாவின்ப ரசம தான ஆநந்த அருவி பாய நாதங்க ளொடுகு லாவி விளையாடி ஊனங்க ளுயிர்கள் மோக நானென்ப தறிவி லாம லோமங்கி யுருவ மாகி யிருவோரும் ஓரந்த மருவி ஞான மாவிஞ்சை முதுகி னேறி லோகங்கள் வலம தாட அருள்தாராய்

74. சுருதிமுடி மோனம்

ராகம் : நாட்டை குறிஞ்சி தாளம் : சதுச்ர த்ருவம் கண்ட நடை சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞானசிவ சமயவடி வாய்வந்த அத்துவித மானபர சுடரொளிய தாய்நின்ற நிட்களசொ ரூபமுத லொருவாழ்வே துரியநிலை யேகண்ட முத்தரித யாகமல மதனில்விளை யாநின்ற அற்புதசு போதசுக சுயபடிக மாவின்ப பத்மபத மேஅடைய உணராதே கருவிலுரு வேதங்கு சுக்கிலநி தானவளி பொருமஅதி லேகொண்ட முக்குணவி பாகநிலை கருதவரி யாவஞ்ச கக்கபட மூடியுடல் வினைதானே கலகமிட வேபொங்கு குப்பைமல வாழ்வுநிஜ மெனவுழலு மாயஞ்செ னித்தகுகை யேஉறுதி கருதசுழ மாமிந்த மட்டைதனை யானஉன தருள்தாராய்

73. சீறலசடன் வினைகாரன்

ராகம் : ஹம்சநாதம் தாளம் : ஆதி சீற லசடன்வினை காரன் முறைமையிலி தீமை புரிகபடி பவநோயே தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை சீர்மை சிறிதுமிலி எவரோடுங் கூறு மொழியதுபொய் யான கொடுமையுள கோள னறிவிலியு னடிபேணாக் கூள னெனினுமெனை நீயு னடியரொடு கூடும் வகைமையருள் புரிவாயே

72. சீயுதிரம்

ராகம் : வலசி தாளம் : 1½ + 1 + 1½ சீயுதிர மெங்கு மேய்புழுநி ரம்பு மாயமல பிண்ட நோயிடுகு ரம்பை தீநரிகள் கங்கு காகமிவை தின்ப தொழியாதே தீதுளகு ணங்க ளேபெருகு தொந்த மாயையில்வ ளர்ந்த தோல்தசையெ லும்பு சேரிடுந ரம்பு தானிவைபொ திந்து நிலைகாணா ஆயதுந மன்கை போகவுயி ரந்த நாழிகையில் விஞ்ச ஊசிடுமி டும்பை யாகியவு டம்பு பேணிநிலை யென்று மடவார்பால் ஆசையைவி ரும்பி யேவிரக சிங்கி தானுமிக வந்து மேவிடம யங்கு மாழ்துயர்வி ழுந்து மாளுமெனை யன்பு புரிவாயே

71. சிவனார் மனம்

ராகம் : ஜோன்புரி/ சங்கராபரணம் கண்டசாபு(2½) 1+ 1½ சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு செவிமீதி லும்பகர்செய் குருநாதா சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின் செயலேவி ரும்பியுளம் நினையாமல் அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு மடியேனை அஞ்சலென வரவேணும்

70. குருதி மலசலம்

ராகம் : கேதாரகௌளை மிச்ர சாபு (3½) 2+1½ குருதி மலசல மொழுகு நரகுட லரிய புழுவது நெளியு முடல்மத குருபி நிணசதை விளையு முளைசளி யுடலூடே குடிக ளெனபல குடிகை வலிகொடு குமர வலிதலை வயிறு வலியென கொடுமை யெனபிணி கலக மிடுமிதை யடல்பேணி மருவி மதனனுள் கரிய புளகித மணிய சலபல கவடி மலர்புனை மதன கலைகொடு குவடு மலைதனில் மயலாகா மனது துயரற வினைகள் சிதறிட மதன பிணியொடு கலைகள் சிதறிட மனது பதமுற வெனது தலைபத மருள்வாயே

69. குரம்பை மலசலம்

ராகம் : கௌளை தாளம் : ஆதி (2 களை) குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி குலைந்த செயிர்மயிர் குருதியொ டிவைபல கசுமாலக் குடின்பு குதுமவ ரவர்கடு கொடுமையர் இடும்ப ரொடுவழி யிணையிலர் கசடர்கள் குரங்க ரறிவிலர் நெறியிலர் மிருகணை விறலான சரம்ப ருறவனை நரகனை துரகனை இரங்கு கலியனை பரிவுறு சடலனை சவுந்த ரிகமுக சரவண பதமொடு மயிலேறித் தழைந்த சிவசுடர் தனையென மனதினில் அழுந்த வுரைசெய வருமுக நகையொளி தழைந்த நயனமு மிருமலர் சரணமு மறவேனே

68. கருவினுருவாகி வந்து

ராகம் : விஜயநாகரி அங்க தாளம்(5½) 2½ + 1½ + 1½ (எடுப்பு ½ தள்ளி) கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து கலைகள்பல வேதெ ரிந்து மதனாலே கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து கவலைபெரி தாகி நொந்து மிகவாடி அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று அறுசமய நீதி யொன்று மறியாமல் அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று அனுதினமும் நாண மின்றி அழிவேனோ

How Shiva mediated between Sundarar and Paravai Nachiyar

Sundara (Murthi) Nayanar who lived in the 8th century was a great devotee of Lord Siva. He is one of the four great Tamil religious Teachers ('nalvar'): Sambandar, Appar(thirunavukkarasar), Sundarar, Manikkavachagar. Except for Manikka-Vachaagar, the oldest of the four, others lived during the struggle between the Jains and the Saivites. Sundarar is also one of the Sixty-three Nayanars whose lives were recorded in the "Periya Puranam," (The Great Epic) by Sekkilaar, a poet and the chief minister in the court of the Chola King, Kulothunga Chola II. In the village of Tirunavalur, a temple priest called Sadayanar and his wife Isaignani, both staunch Shiva devotees, had a son Nambi Arurar. The ruler of the local kingdom (Thirumunaipadi-Nadu), Narasingamunaiarayar a chieftain, adopted him and brought up as his own son, and called him Sundarar. Sundara Murthi Nayanar sang the glories of Lord Siva at all the sacred places that he visited. These hymns are called Thevaaram.

67. கருப்புவிலில்

ராகம் : சிந்து பைரவி தாளம் : கண்ட த்ருவம் கருப்புவிலில் மருப்பகழி தொடுத்துமதன் விடுத்தனைய கடைக்கணொடு சிரித்தணுகு கருத்தினால் விரகுசெய் மடமாதர் கதக்களிறு திடுக்கமுற மதர்த்துமிக வெதிர்த்துமலை கனத்தவிரு தனத்தின்மிசை கலக்குமோ கனமதில் மருளாமே ஒருப்படுதல் விருப்புடைமை மனத்தில்வர நினைத்தருளி உனைப்புகழு மெனைப்புவியில் ஒருத்தனாம் வகைதிரு அருளாலே உருத்திரனும் விருத்திபெற அனுக்கிரகி யெனக்குறுகி யுரைக்கமறை யடுத்தபொருள் உணர்த்துநா ளடிமையு முடையேனோ

66. கரிய பெரிய

ராகம் : மோஹனம் ஆதி திச்ர நடை (12) கரிய பெரிய எருமை கடவு கடிய கொடிய திரிசூலன் கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள் கழிய முடுகி யெழுகாலந் திரியு நரியு மெரியு முரிமை தெரிய விரவி யணுகாதே செறிவு மறிவு முறவு மனைய திகழு மடிகள் தரவேணும்

65. கதியை விலக்கு

ராகம் : தேஷ் அங்க தாளம் 2+1½ +2 (5½) கதியைவி லக்கு மா தர்கள் புதியஇ ரத்ன பூஷண கனதன வெற்பு மேல்மிகு மயலான கவலைம னத்த னாகிலும் உனதுப்ர சித்த மாகிய கனதன மொத்த மேனியு முகமாறும் அதிபல வஜ்ர வாகுவும் அயில்நுனை வெற்றி வேலதும் அரவபி டித்த தோகையு முலகேழும் அதிரவ ரற்று கோழியும் அடியவர்வ ழுத்தி வாழ்வுறும் அபிநவ பத்ம பாதமு மறவேனே

1. சீர்பாத வகுப்பு (Seerpada Vaguppu)

Image
ராகம் : காவடிச்சிந்து கண்ட சாபு (2½) உததி இடை கடவுமர கதவருண குலதுரக உப லளித கனக ரத சதகோடி சூரியர்கள் உதயம் என அதிக வித கலப கக மயிலின் மிசை யுக முடிவில் இருள் அகல ஒரு சோதி வீசுவதும் உடலுமுட லுயிருநிலை பெருதல்பொரு ளெனவுலக மொருவிவரு மநுபவன சிவயோக சாதனையில் ஒழுகுமவர் பிறிதுபர வசமழிய விழிசெருகி யுணர்வுவிழி கொடுநியதி தமதூடு நாடுவதும் உருவெனவு மருவெனவு முளதெனவு மிலதெனவு முழலுவன பரசமய கலையார வாரமற உரையவிழ வுணர்வவிழ வுளமவிழ வுயிரவிழ வுளபடியை யுணருமவ ரநுபூதி யானதுவும்

64. கடலை பொரி

ராகம் : தன்யாசி தாளம் : ஆதி கடலை பொரியவரை பலகனி கழைநுகர் கடின குடவுதர விபரீத கரட தடமுமத நளின சிறுநயன கரிணி முகவரது துணைவோனே வடவ ரையின்முகடு அதிர வொருநொடியில் வலம்வ ருமரகத மயில்வீரா மகப திதருசுதை குறமி னொடிருவரு மருவு சரசவித மணவாளா

63. ஒருவரை யொருவர்

ராகம் : ஹிந்தோளம் தாளம் : திச்ர ரூபகம் (2+ 1½ + 1½) ஒருவரை யொருவர்தேறி அறிகிலர் மதவிசாரர் ஒருகுண வழியுறாத பொறியாளர் உடலது சதமெனாடி களவுபொய் கொலைகளாடி உறநம னரகில் வீழ்வ ரதுபோய்ப்பின் வருமொரு வடிவமேவி யிருவினை கடலுளாடி மறைவரி னனைய கோல மதுவாக மருவிய பரமஞான சிவகதி பெறுகநீறு வடிவுற அருளி பாத மருள்வாயே

62. ஒருபொழுதும்

ராகம் : பேகடா தாளம் : 1+1½+1+1½+ 1½+ 3 ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் துணரேனே உனதுபழ நிமலையெனு மூரைத் சேவித் தறியேனே பெருபுவியி லுயர்வரிய வாழ்வைத் தீரக் குறியேனே பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத் தவிரேனோ

61. உலகபசு பாச

ராகம் : சௌராஷ்ட்ரம் அங்க தாளம் 2½ + 1 ½ + 1½ + 3(8½) உலகபசு பாச தொந்த மதுவான உறவுகிளை தாயர் தந்தை மனைபாலர் மலசலசு வாச சஞ்ச லமதாலென் மதிநிலைகெ டாம லுன்ற னருள்தாராய் சலமறுகு பூளை தும்பை யணிசேயே சரவணப வாமு குந்தன் மருகோனே பலகலைசி வாக மங்கள் பயில்வோனே பழநிமலை வாழ வந்த பெருமாளே.

60. ஆறுமுகம்

ராகம் : மோஹனம் தாளம் : கண்ட சாபு (2½) ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி யார்கள்பத மேதுணைய தென்றுநாளும் ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது ஈசஎன மானமுன தென்றுமோதும் ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை யேவர்புகழ் வார்மறையு மென்சொலாதோ

59. அவனிதனிலே

ராகம் : பௌளை அங்க தாளம் : 5½ (1 + 1½+ 1½+ 1½) அவனிதனி லேபிறந்து மதலையென வேத வழ்ந்து அழகுபெற வேநடந்து இளைஞோனாய் அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று அதிவிதம தாய்வ ளர்ந்து பதினாறாய் சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர் திருவடிக ளேநி னைந்து துதியாமல் தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று திரியுமடி யேனை யுன்ற னடிசேராய்

58. அருத்தி வாழ்வொடு

ராகம் : பிலஹரி அங்க தாளம் (10 ½) 1 ½ + 2 + 2 + 2 + 3 அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு முறவோரும் அடுத்த பேர்களு மிதமுறு மகவொடு வளநாடும் தரித்த வூருமெ யெனமன நினைவது நினையா துன் தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது தருவாயே

57. அபகார நிந்தை

ராகம் : சக்ரவாஹம் அங்க தாளம்(8) எடுப்பு (1/2 தள்ளி) அபகார நிந்தைபட் டுழலாதே அறியாத வஞ்சரைக் குறியாதே உபதேச மந்திரப் பொருளாலே உனைநானி னைந்தருட் பெறுவேனோ

56. வெங்காளம் பாணம்

ராகம் : ஜோன்புரி தாளம் : ஆதி வெங்கா ளபா ணஞ்சேல் கண்பால் மென்பா கஞ்சொற் குயில்மாலை மென்கே சந்தா னென்றே கொண்டார் மென்றோ ளொன்றப் பொருள்தேடி வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய் வன்பே துன்பப் படலாமோ மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா வந்தே யிந்தப் பொழுதாள்வாய்

55. விறல் மாரன்

ராகம் : மாண்டு தாளம் : ஆதி விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து வெயில்காய மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் வசைகூற குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப மயல்தீர குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து குறைதீர வந்து குறுகாயோ

54. விந்ததினூறி

ராகம் : யமுனா கல்யாணி தாளம் : மிஸ்ர சாபு (2 + 1½) விந்ததி னூறி வந்தது காயம் வெந்தது கோடி யினிமேலோ விண்டு விடாம லுன்பத மேவு விஞ்சையர் போல அடியேனும் வந்துவி நாச முன்கலி தீர வண்சிவ ஞான வடிவாகி வன்பத மேறி யென்களை யாற வந்தருள் பாத மலர்தாராய்

53. வரியார்

ராகம் : காம்போதி/சஹானா தாளம் : சதுச்ர ஜம்பை வரியார் கருங்கண் மடமாதர் மகவா சைதொந்த மதுவாகி இருபோ துநைந்து மெலியாதே இருதா ளினன்பு தருவாயே பரிபா லனஞ்செய் தருள்வோனே பரமே சுரன்ற னருள்பாலா அரிகே சவன்றன் மருகோனே அலைவா யமர்ந்த பெருமாளே.

52. வந்து வந்து முன்

ராகம்: சிந்து பைரவி தாளம்: திஶ்ர நடை (12) வந்து வந்து முன்த வழ்ந்து வெஞ்சு கந்த யங்க நின்று மொஞ்சி மொஞ்சி யென்ற ழுங்கு ழந்தையோடு மண்ட லங்கு லுங்க அண்டர் விண்ட லம்பி ளந்தெ ழுந்த செம்பொன் மண்ட பங்க ளும்ப யின்றவீடு கொந்த ளைந்த குந்த ளந்த ழைந்து குங்கு மந்த யங்கு கொங்கை வஞ்சு தஞ்ச மென்று மங்குகாலம் கொங்க டம்பு கொங்கு பொங்கு பைங்க டம்பு தண்டை கொஞ்ச செஞ்ச தங்கை தங்கு பங்க யங்கள்தாராய்

51. வஞ்சத்துடனொரு

ராகம் : மனோலயம் தாளம் : ஆதி (2 களை) வஞ்சத் துடனொரு நெஞ்சிற் பலநினை வஞ்சிக் கொடியிடை மடவாரும் வந்திப் புதல்வரும் அந்திக் கிளைஞரு மண்டிக் கதறிடு வகைகூர அஞ்சக் கலைபடு பஞ்சிப் புழுவுடல் அங்கிக் கிரையென வுடன்மேவ அண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும் அன்றைக் கடியிணை தரவேணும்

50. வஞ்சங்கொண்டு

ராகம் : பூர்வி கல்யாணி தாளம் : திச்ர த்ரிபுடை (7) வஞ்சங்கொண் டுந்திட ராவண னும்பந்தென் திண்பரி தேர்கரி மஞ்சின்பண் புஞ்சரி யாமென வெகுசேனை வந்தம்பும் பொங்கிய தாகஎ திர்ந்துந்தன் சம்பிர தாயமும் வம்புந்தும் பும்பல பேசியு மெதிரேகை மிஞ்சென்றுஞ் சண்டைசெய் போதுகு ரங்குந்துஞ் சுங்கனல் போலவே குண்டுங்குன் றுங்கர டார்மர மதும்வீசி மிண்டுந்துங் கங்களி னாலெத கர்ந்தங்கங் கங்கர மார்பொடு மின்சந்துஞ் சிந்தநி சாசரர் வகைசேர வுஞ்சண்டன் தென்றிசை நாடிவி ழுந்தங்குஞ் சென்றெம தூதர்க ளுந்துந்துந் தென்றிட வேதசை நிணமூளை உண்டுங்கண் டுஞ்சில கூளிகள் டிண்டிண்டென் றுங்குதி போடவு யர்ந்தம்புங் கொண்டுவெல் மாதவன் மருகோனே

49. மூளும் வினை

ராகம் : சங்கரானந்தப்ரியா அங்க தாளம் (1½ + 2½ + 2½ + 2½) மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்து பூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில் மூடிநெறி நீதி யேதுஞ்செ யாவஞ்சி யதிபார மோகநினை வான போகஞ்செய் வேனண்டர் தேடஅரி தாய ஞேயங்க ளாய்நின்ற மூலபர யோக மேல்கொண் டிடாநின்ற துளதாகி நாளுமதி வேக கால்கொண்டு தீமண்ட வாசியன லூடு போயொன்றி வானிங்க ணாமமதி மீதி லூறுங்க லாஇன்ப அமுதூறல் நாடியதன் மீது போய்நின்ற ஆநந்த மேலைவெளி யேறி நீயின்றி நானின்றி நாடியினும் வேறு தானின்றி வாழ்கின்ற தொருநாளே

48. மூப்புற்றுச் செவி

ராகம்: மாயாமாளவ கௌளை தாளம்: ஆதி (2 களை) மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெரு மூச்சுற் றுச்செயல் தடுமாறி மூர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிட மூக்குக் குட்சளி யிளையோடும் கோப்புக் கட்டியி னாப்பிச் செற்றிடு கூட்டிற் புக்குயி ரலையாமுன் கூற்றத் தத்துவ நீக்கிப் பொற்கழல் கூட்டிச் சற்றருள் புரிவாயே

47. முனைச்சங் கோலிடு (அனிச்சங் கார் முகம்)

ராகம்: காபி தாளம்: 1½ + 6 அனிச்சங் கார்முகம்....நெறிபாரா வினைச்சண் டாளனை வீணணை நீணிதி தனைக்கண் டாணவ மானநிர் மூடனை விடக்கன் பாய்நுகர் பாழனை யோர்மொழி பகராதே விகற்பங் கூறிடு மோகவி காரனை அறத்தின் பாலொழு காதமு தேவியை விளித்துன் பாதுகை நீதர நானருள் பெறுவேனோ

46. முந்துதமிழ் மாலை

ராகம் : செஞ்சுருட்டி அங்க தாளம் (7½) 1½ + 2½ + 2 + 1½ முந்துதமிழ் மாலை கோடிக் கோடி சந்தமொடு நீடு பாடிப் பாடி முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி யுழலாதே முந்தைவினை யேவ ராமற் போக மங்கையர்கள் காதல் தூரத் தேக முந்தடிமை யேனை யாளத் தானு முனைமீதே திந்திதிமி தோதி தீதித் தீதி தந்தன தான தானத் தான செஞ்செணகு சேகு தாளத் தோடு நடமாடுஞ் செஞ்சிறிய கால்வி சாலத் தோகை துங்கஅநு கூல பார்வைத் தீர செம்பொன்மயில் மீதி லேயெப் போது வருவாயே

45. மனத்தின் பங்கு

ராகம்: பேகடா மிஸ்ர சாபு (1½ + 2) மனத்தின்பங் கெனத்தங்கைம் புலத்தென்றன் குணத்தஞ்சிந் த்ரியத்தம்பந் தனைச்சிந்தும் படிகாலன் மலர்ச்செங்கண் கனற்பொங்குந் திறத்தின்தண் டெடுத்தண்டங் கிழியத்தின்றிங் குறத்தங்கும் பலவோரும் எனக்கென்றிங் குனக்கென்றங் கினத்தின்கண் கணக்கென்றன் றிளைத்தன்புங் கெடுத்தங்கங் கழிவாமுன் இசைக்குஞ்செந் தமிழ்க்கொண்டங் கிரக்கும்புன் றொழிற்பங்கங் கெடத்துன்பங் கழித்தின்பந் தருவாயே

44. மங்கை சிறுவர்

ராகம் : ஹம்சானந்தி தாளம் : ஆதி திஸ்ர நடை(12) மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர் வந்து கதற வுடல்தீயின் மண்டி யெரிய விண்டு புனலில் வஞ்ச மொழிய விழஆவி வெங்கண் மறலி தன்கை மருவ வெம்பி யிடறு மொருபாச விஞ்சை விளையு மன்று னடிமை வென்றி யடிகள் தொழவாராய்

43. பூரண வார கும்ப

Image
ராகம் : சங்கரானந்தப்பிரியா தாளம் : 2 + 1½ + 1½ பூரண வாரகும்ப சீதப டீரகொங்கை மாதர் விகாரவஞ்ச லீலையி லேயுழன்று போதவ மேயிழந்து போனது மானமென்ப தறியாத பூரிய னாகிநெஞ்சு காவல்ப டாதபஞ்ச பாதக னாயறஞ்செ யாதடி யோடிறந்து போனவர் வாழ்வுகண்டு மாசையி லேயழுந்து மயல்தீரக் காரண காரியங்க ளானதெ லாமொ ழிந்து யானெனு மேதைவிண்டு பாவக மாயிருந்து காலுட லூடியங்கி நாசியின் மீதிரண்டு விழிபாயக் காயமு நாவுநெஞ்சு மோர்வழி யாகஅன்பு காயம் விடாம லுன்ற னீடிய தாள்நினைந்து காணுதல் கூர்த வஞ்செய் யோகிக ளாய்விளங்க அருள்வாயே

Story of Gajendra and Lord Vishnu

Image
To read the story of Gajendran in Tamil, click the underlined link. King Indradyumna was a great devotee of Lord Vishnu who renounced royal life after entrusting the kingdom to his ministers and retired to the forest where he remained absorbed in the meditation of Lord Vishnu. One day, Sage Agastya came to see the king but the king did not notice him. The ascetic became furious and cursed to turn into a mad elephant. Realizing what had happened, Indradyumna begged for forgiveness. The Sage mitigated the impact of the curse stating that as ‘Elephant Gajendra’ he would continue to remain devout to Lord Vishnu and one day, by the Lord's grace, he'd be liberated. Actually, Sage Agastya had noticed that the great King, despite the greatness of his good deeds, still has traces of Ahamkara in him. He felt that the king had to be taught the hard way that self is to be renounced and surrendered to the Lord for attaining moksha. Gajendra ruled over all the other elephants in

42. புகரப் புங்க

ராகம் : ரஞ்சனி ஆதி (திஸ்ர நடை) புகரப் புங்கப் பகரக் குன்றிற் புயலிற் றங்கிப் பொலிவோனும் பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப் பொருளைப் பண்பிற் புகல்வோனும் திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத் திகிரிச் செங்கைத் திருமாலும் திரியப் பொங்கித் திரையற் றுண்டுட் டெளிதற் கொன்றைத் தரவேணும்

41. பரிமள களப

ராகம் : தேவகாந்தாரி தாளம் : சதுஸ்ர அட (12) பரிமள களபசு கந்தச் சந்தத் தனமானார் படையம படையென அந்திக் குங்கட் கடையாலே வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் குழலாலே மறுகிடு மருளனை யின்புற் றன்புற் றருள்வாயே

How Vishnu Obtained the Sudarshana Chakra

Story of Jalandhara Jalandhara was a demon king, who procured many boons after doing harsh austerities. Becoming arrogant of his immense power, he captured and ruled all the three worlds. Having subdued Satyaloka and Vaikuntha, the demon went to KailAsa to fight Lord Shiva. Lord Shiva took the form of an old man and stood on his way. He asked Jalandhara where he was going. jalandhara replied that he was going to fight against Lord Shiva. Smiling the Old Man marked a disc (chakra) on the ground.

40. படர்புவியின் மீது

ராகம் : பந்துவராளி தாளம் : 2½ + 1½ + 1½ + 2 படர்புவியின் மீது மீறி வஞ்சகர்கள் வியனினுரை பானு வாய்வி யந்துரை பழுதில்பெரு சீல நூல்க ளுந்தெரி சங்கபாடல் பனுவல்கதை காவ்ய மாமெ ணெண்கலை திருவளுவ தேவர் வாய்மை யென்கிற பழமொழியை யோதி யேயு ணர்ந்துபல் சந்தமாலை மடல்பரணி கோவை யார்க லம்பக முதலுளது கோடி கோள்ப்ர பந்தமும் வகைவகையி லாசு சேர்பெ ருங்கவி சண்டவாயு மதுரகவி ராஜ னானென் வெண்குடை விருதுகொடி தாள மேள தண்டிகை வரிசையொ டுலாவு மால் அகந்தைத விர்ந்திடாதோ

39. பஞ்ச பாதக

ராகம் : ஸிம்மேந்திர மத்யமம் அங்க தாளம் (7½) 1½ +2 +2 +2 பஞ்ச பாதக முறுபிறை யெயிறெரி குஞ்சி கூர்விட மதர் விழி பிலவக பங்க வாண்முக முடுகிய நெடுகிய திரிசூலம் பந்த பாசமு மருவிய கரதல மிஞ்சி நீடிய கருமுகி லுருவொடு பண்பி லாதொறு பகடது முதுகினில் யமராஜன் அஞ்ச வேவரு மவதர மதிலொரு தஞ்ச மாகிய வழிவழி யருள்பெறும் அன்பி னாலுன தடிபுக ழடிமை யெ னெதிரேநீ அண்ட கோளகை வெடிபட இடிபட எண்டி சாமுக மடமட நடமிடும் அந்த மோகர மயிலினி லியலுடன் வரவேணும்

38. நிலையாப் பொருளை

ராகம் : பாகேஶ்ரீ தாளம் : மிஸ்ர சாபு (2 + 1½) நிலையாப் பொருளை யுடலாக் கருதி நெடுநாட் பொழுது மவமேபோய் நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள் நிறைவாய்ப் பொறிகள் தடுமாறி மலம்நீர்ச் சயன மிசையாப் பெருகி மடிவேற் குரிய நெறியாக மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு மலர்தாட் கமல மருள்வாயே

37. நிதிக்குப் பிங்கலன்

ராகம்: தன்யாசி சங்கீரண சாபு (2 +1½ +1) நிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன் நிறத்திற் கந்தனென் றினைவோரை நிலத்திற் றன்பெரும் பசிக்குத் தஞ்சமென் றரற்றித் துன்பநெஞ் சினில்நாளும் புதுச்சொற் சங்கமொன் றிசைத்துச் சங்கடம் புகட்டிக் கொண்டுடம் பழிமாயும் புலத்திற் சஞ்சலங் குலைத்திட் டுன்பதம் புணர்க்கைக் கன்புதந் தருள்வாயே

36. நாலு மைந்து

ராகம் : கேதார கெளளை தாளம் : திச்ர நடை (15) நாலு மைந்து வாசல்கீறு தூறு டம்பு கால்கையாகி நாரி யென்பி லாகுமாக மதனூடே நாத மொன்ற ஆதிவாயில் நாட கங்க ளானஆடி நாட றிந்தி டாமலேக வளராமுன் நூல நந்த கோடிதேடி மால்மி குந்து பாருளோரை நூறு செஞ்சொல் கூறிமாறி விளைதீமை நோய்க லந்த வாழ்வுறாமல் நீக லந்து ளாகுஞான நூல டங்க வோதவாழ்வு தருவாயே

35. தோலொடு மூடிய

ராகம் : ஜோன்புரி தாளம் : ஆதி தோலொடு மூடிய கூரையை நம்பிப் பாவையர் தோதக லீலைநி ரம்பிச் சூழ்பொருள் தேடிட வோடிவ ருந்திப் புதிதான தூதொடு நான்மணி மாலைப்ர பந்தக் கோவையு லாமடல் கூறிய ழுந்திக் தோமுறு காளையர் வாசல்தொ றும்புக் கலமாருங் காலனை வீணனை நீதிகெ டும்பொய்க் கோளனை மானமி லாவழி நெஞ்சக் காதக லோபவ்ரு தாவனை நிந்தைப் புலையேனைக் காரண காரிய லோகப்ர பஞ்சச் சோகமெ லாமற வாழ்வுற நம்பிற் காசறு வாரிமெய்ஞ் ஞானத வஞ்சற் றருளாதோ

34. தொந்தி சரிய

ராகம்: தோடி/அடாணா அங்க தாளம் (7½) 1½ + 1½ + 2 + 2½ தொந்தி சரிய மயிரே வெளிறநிரை தந்த மசைய முகுகே வளையஇதழ் தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் நகையாடி தொண்டு கிழவ னிவரா ரெனஇருமல் கிண்கி ணெனமு னுரையே குழறவிழி துஞ்சு குருடு படவே செவிடுபடு செவியாகி வந்த பிணியு மதிலே மிடையுமொரு பண்டி தனுமெ யுறுவே தனையுமிள மைந்த ருடமை கடனே தெனமுடுகு துயர்மேவி மங்கை யழுது விழவே யமபடர்கள் நின்று சருவ மலமே யொழுக வுயிர் மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை வரவேணும்

33. துன்பம் கொண்டு

ராகம் : பைரவி தாளம் : திச்ர த்ரிபுடை (7) துன்பங்கொண் டங்க மெலிந்தற நொந்தன்பும் பண்பு மறந்தொளி துஞ்சும்பெண் சஞ்சல மென்பதி லணுகாதே இன்பந்தந் தும்பர் தொழும்பத கஞ்சந்தந் தஞ்ச மெனும்படி யென்றென்றுந் தொண்டு செயும்படி யருள்வாயே

32. தரிக் குங்கலை

ராகம் : ஆபோகி சதுஸ்ர ஏகம் மிஸ்ர நடை (14) தரிக் குங்கலை நெகிழ்க் கும்பர தவிக் குங்கொடி மதனேவிற் றகைக் குந்தனி திகைக் குஞ்சிறு தமிழ்த் தென்றலி னுடனேநின் றெரிக் கும்பிறை யெனப் புண்படு மெனப் புன்கவி சிலபாடி இருக் குஞ்சிலர் திருச் செந்திலை யுரைத் துய்ந்திட அறியாரே

31. தந்த பசி

ராகம் : ஆரபி தாளம் : ஆதி தந்த பசிதனைய றிந்து முலையமுது தந்து முதுகுதட வியதாயார் தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள தங்கை மருகருயி ரெனவேசார் மைந்தர் மனைவியர் கடும்பு கடனுதவு மந்த வரிசைமொழி பகர்கேடா வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம யங்க வொருமகிட மிசையேறி

30. தண்டையணி

ராகம் : ஸிம்மேந்திர மத்யமம்/தன்யாசி தாளம் : கண்ட சாபு (2½) தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந் தண்கழல்சி லம்புடன் கொஞ்சவேநின் தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன் சந்தொடம ணைந்துநின் றன்புபோலக் கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங் கஞ்சமலர் செங்கையுஞ் சிந்துவேலும் கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங் கண்குளிர என்றன்முன் சந்தியாவோ

29. தண்டே னுண்டே

ராகம் : பீம்பளாஸ் ஆதி திச்ர நடை தண்டே னுண்டே வண்டார் வஞ்சேர் தண்டார் மஞ்சுக் குழல்மானார் தம்பா லன்பார் நெஞ்சே கொண்டே சம்பா வஞ்சொற் றடிநாயேன் மண்டோ யந்தீ மென்கால் விண்டோய் வண்கா யம்பொய்க் குடில்வேறாய் வன்கா னம்போ யண்டா முன்பே வந்தே நின்பொற் கழல்தாராய்

28. சேமக் கோமள

ராகம் : சுருட்டி தாளம் : 1½ + 2 சேமக் கோமள பாதத் தாமரை சேர்தற் கோதும நந்தவேதா தீதத் தேயவி ரோதத் தேகுண சீலத் தேமிக அன்புறாதே காமக் ரோதவு லோபப் பூதவி காரத் தேயழி கின்றமாயா காயத் தேபசு பாசத் தேசிலர் காமுற் றேயும தென்கொலோதான்

27. கொம்பனை யார்

ராகம் : கரஹரப்ரியா தாளம் : சதுஸ்ர ரூபகம் (6) கொம்பனை யார்காது மோதிரு கண்களி லாமோத சீதள குங்கும பாடீரபூ ஷண நகமேவு கொங்கையி னீராவி மேல்வளர் செங்கழு நீர்மாலை சூடிய கொண்டையி லாதார சோபையில் மருளாதே உம்பர்கள் ஸ்வாமீந மோநம எம்பெரு மானேந மோநம ஒண்டொடி மோகாந மோநம எனநாளும் உன்புக ழேபாடி நானினி அன்புட னாசார பூசைசெய் துய்ந்திட வீணாள்ப டாதருள் புரிவாயே

26. குடர்நிண

ராகம் : குந்தலவராளி அங்க தாளம் 2 + 1½ + 2 + 1½ + 2 + 1½ + 2 + 2 (14½) குடர்நிண மென்பு சலமல மண்டு குருதிந ரம்பு சீயூன்பொதிதோல் குலவுகு ரம்பை முருடுசு மந்து குனகிம கிழ்ந்து நாயேன்தளரா அடர்மத னம்பை யனையக ருங்க ணரிவையர் தங்கள் தோடோய்ந்தயரா அறிவழி கின்ற குணமற வுன்றன் அடியிணை தந்து நீயாண்டருள்வாய்

25. காலனார்

ராகம் : சஹானா/திலங் தாளம் : சதுஸ்ர ஏகம் (10) (கண்ட நடை) காலனார் வெங்கொடுந் தூதர்பா சங்கொடென் காலினார் தந்துடன் கொடுபோகக் காதலார் மைந்தருந் தாயரா ருஞ்சுடுங் கானமே பின்தொடர்ந் தலறாமுன் சூலம்வாள் தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ் சூடுதோ ளுந்தடந் திருமார்பும் தூயதாள் தண்டையுங் காணஆர் வஞ்செயுந் தோகைமேல் கொண்டுமுன் வரவேணும்

24. கமல மாதுடன்

ராகம் : ஆனந்த பைரவி அங்க தாளம் (7½) 1½ + 2 + 2 + 2 கமல மாதுடன் இந்திரை யுஞ்சரி சொலவொ ணாதம டந்தையர் சந்தன களப சீதள கொங்கையில் அங்கையில் இருபோதேய் களவு நூல்தெரி வஞ்சனை அஞ்சன விழியின் மோகித கந்தசு கந்தரு கரிய ஓதியில் இந்துமு கந்தனில் மருளாதே அமல மாகிய சிந்தைய டைந்தகல் தொலைவி லாதஅ றம்பொருள் இன்பமும் அடைய ஓதியு ணர்ந்துத ணந்தபின் அருள்தானே அறியு மாறுபெ ரும்படி அன்பினின் இனிய நாதசி லம்புபு லம்பிடும் அருண ஆடக கிண்கிணி தங்கிய அடிதாராய்

23. கண்டுமொழி

ராகம் : காவடி ஸிந்து அங்க தாளம் (5½) 2½ + 1½ + 1½ கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை அம்பு நஞ்சு கண்கள்குழல் கொண்டல் என்று பலகாலும் கண்டுளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து கங்குல்பகல் என்று நின்று விதியாலே பண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டு பங்கயப தங்கள் தந்து புகழோதும் பண்புடைய சிந்தை யன்பர் தங்களிலு டன்க லந்து பண்புபெற அஞ்ச லஞ்ச லெனவாராய்

22. கட்டழகு விட்டு

ராகம் : மனோலயம் சதுஸ்ர த்ருவம் கண்ட நடை (35) கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம் இட்டபொறி தப்பிப் பிணங்கொண்ட தின்சிலர்கள் கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் முறையோடே வெட்டவிட விட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற வுணர்வேனோ

21. ஓராதொன்றை

ராகம் : பிலஹரி தாளம்: ஆதி (2 களை) ஓரா தொன்றைப் பாரா தந்தத் தோடே வந்திட் டுயிர்சோர ஊடா நன்றற் றார்போல் நின்றெட் டாமால் தந்திட் டுழல்மாதர் கூரா வன்பிற் சோரா நின்றக் கோயா நின்றுட் குலையாதே கோடார் செம்பொற் றோளா நின்சொற் கோடா தென்கைக் கருள்தாராய்

20. ஏவினை நேர்விழி

ராகம் : வலசி/பந்துவராளி தாளம் : ஆதி ஏவினை நேர்விழி மாதரை மேவிய ஏதனை மூடனை நெறிபேணா ஈனனை வீணனை ஏடெழு தாமுழு ஏழையை மோழையை அகலாநீள் மாவினை மூடிய நோய்பிணி யாளனை வாய்மையி லாதனை யிகழாதே மாமணி நூபுர சீதள தாள்தனி வாழ்வுற ஈவது மொருநாளே

19. உததியறல் மொண்டு

ராகம் : கீரவாணி அங்க தாளம் (6½ 2½ + 1½ + 1½ + 1) உததியறல் மொண்டு சூல்கொள்கரு முகிலெனஇ ருண்ட நீலமிக வொளிதிகழு மன்றல் ஓதிநரை பஞ்சுபோலாய் உதிரமெழு துங்க வேலவிழி மிடைகடையொ துங்கு பீளைகளு முடைதயிர்பி திர்ந்த தோஇதென வெம்புலாலாய் மதகரட தந்தி வாயினிடை சொருகுபிறை தந்த சூதுகளின் வடிவுதரு கும்ப மோதிவளர் கொங்கைதோலாய் வனமழியு மங்கை மாதர்களின் நிலைதனையு ணர்ந்து தாளிலுறு வழியடிமை யன்பு கூருமது சிந்தியேனோ

18. இருக்கும் காரண (உருக்கம் பேசிய )

Image
ராகம் : சுத்த தன்யாசி அங்க தாளம் (7½) 1½ + 2 + 2 + 2 உருக்கம் பேசிய நீலியர்...... மீதினில் ஆசைகள் புரிவேனோ Lines rearranged. இருக்குங் காரண மீறிய வேதமும் இசைக்குஞ் சாரமு மேதொழு தேவர்கள் இடுக்கண் தீர்கன னேயடி யார்தவ முடன்மேவி இலக்கந் தானென வேதொழ வேமகிழ் விருப்பங் கூர்தரு மாதியு மாயுல கிறுக்குந் தாதகி சூடிய வேணிய னருள்பாலா திருக்குந் தாபதர் வேதிய ராதியர் துதிக்குந் தாளுடை நாயக னாகிய செகச்செஞ் சோதியு மாகிய மாதவன் மருகோனே செழிக்குஞ் சாலியு மேகம ளாவிய கருப்பஞ் சோலையும் வாழையு மேதிகழ் திருச்செந் தூர்தனில் மேவிய தேவர்கள் பெருமாளே.

17. இயல் இசையில்

ராகம் :ஹுஸேநி தாளம் : அங்க தாளம் (9) 2½ +1½ + 2 + 3 இயலிசையி லுசித வஞ்சிக் கயர்வாகி இரவுபகல் மனது சிந்தித் துழலாதே உயர்கருணை புரியு மின்பக் கடல்மூழ்கி உனையெனது ளறியு மன்பைத் தருவாயே

16. அனைவரும் மருண்டு

ராகம் : மோஹனம் அங்க தாளம் 2½ + 1½ + 1½ அனைவரும ருண்ட ருண்டு கடிதெனவெ குண்டி யம்ப அமரஅடி பின்தொ டர்ந்து பிணநாறும் அழுகுபிணி கொண்டு விண்டு புழவுடனெ லும்ப லம்பு மவலவுட லஞ்சு மந்து தடுமாறி மனைதொறுமி தம்ப கர்ந்து வரவரவி ருந்த ருந்தி மனவழிதி ரிந்து மங்கு வசைதீர மறைசதுர்வி தந்தெ ரிந்து வகைசிறுச தங்கை கொஞ்சு மலரடிவ ணங்க என்று பெறுவேனோ

15. அறிவழிய மயல்

ராகம்: காம்போதி கண்ட சாபு 1 + 1½ (3½) அறிவழிய மயல்பெருக வுரையுமற விழிசுழல அனலவிய மலமொழுக அகலாதே அனையுமனை யருகிலுற வெருவியழ வுறவுமழ அழலினிகர் மறலியெனை யழையாதே செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர் திருவடியி லணுகவர மருள்வாயே சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழஇரு செவிகுளிர இனியதமிழ் பகர்வோனே

14. அவனி பெறும் தோடு

ராகம் : கமாஸ் தாளம் : சதுஸ்ர ரூபகம் (6) அவனிபெ றுந்தோட் டம்பொற் குழையட ரம்பாற் புண்பட் டரிவையர் தம்பாற் கொங்கைக் கிடையேசென் றணைதரு பண்டாட் டங்கற் றுருகிய கொண்டாட் டம்பொற் றழிதரு திண்டாட் டஞ்சற் றொழியாதே பவமற நெஞ்சாற் சிந்தித் திலகுக டம்பார்த் தண்டைப் பதயுக ளம்போற் றுங்கொற் றமுநாளும் பதறிய அங்காப் பும்பத் தியுமறி வும்போய்ச் சங்கைப் படுதுயர் கண்பார்த் தன்புற் றருளாயோ